search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Express train"

    • செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
    • அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பினர்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.

    நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.

    ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை, அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர்.

    • ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.
    • தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குஜராத் மாநிலம் காந்தி தாமிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத கற்கள் மீது மோதி நின்றது.

    இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    மேலும் ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளங்களிலும் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே பாலங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார்.
    • சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நெல்லைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்த முயன்றார். ஆனால் தண்ட வாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரெயில் பயங்கர சத்தத்துடன் மோதியது. பின்னர் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். தண்ட வாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறித்து ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் இரணியல் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தண்டவாளத்தில் மாட்டின் தலை, கொம்பு மற்றும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரெயில் தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் கீப்பரிடம் விசாரித்த போது 6 மர்மநபர்கள் அந்த பகுதியில் சுற்றிந்திரிந்ததாக தெரிவித்தார். ரெயில் கற்கள் மீது மோதிய பிறகு அந்த நபர்கள் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றதாக கூறினார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தண்ட வாளத்தில் கற்களை எதற்காக அடுக்கி வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வாலிபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இது பற்றிய தகவல் வந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற் கொண்டார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். இன்று காலையிலும் சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுபோதையில் வாலிபர்கள் கற்களை தூக்கி வைத்தார்களா? ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என்று கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
    • தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.

    தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் அதன் பின்னால் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
    • ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.

    ஜோலார்பேட்டை:

    கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சேலம் அடுத்த தின்னப்பட்டி ரெயில் நிலையம் அருகே வந்தது.

    அப்போது திடீரென ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நடுவழியில் நின்றது.

    இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் வேறு ரெயில்களை பிடிக்க முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமலும் கடும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக சேலம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் சேலம் ரெயில் நிலைய அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி என்ஜின் கோளாறை சரி செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.

    திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் அதன் பின்னால் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டு சென்றன.

    • தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பணிமனைக்கு சென்ற ரெயில் தடம் புரண்டது. ரெயில் பெட்டியின் நான்கு சக்கரங்களும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.

    பணிமனைக்கு சென்ற ரெயில் என்பதாலும் பயணிகள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரெயில் விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜோலார்பேட்டையிலும் அதிகளவில் பயணிகள் ஏறியதால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது.
    • எஸ்-1,எஸ்-2, எஸ்-3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகளிலும் பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது.

    ஜோலார்பேட்டை:

    கொச்சிவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது.

    இதில் பயணம் செய்த பயணிகள் கழிவறை கூட செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு முன்பதிவு செய்யாத பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    நிற்பதற்கு கூட இடமில்லாததால், வாலிபர்கள் கழிவறையையும் ஆக்கிரமித்தனர். இதனால் கழிவறை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இன்று காலை ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது. ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றதும், உடனே 3 நிமிடத்தில் ரெயில் புறப்பட தயாரானது.

    ஜோலார்பேட்டையிலும் அதிகளவில் பயணிகள் ஏறியதால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது. பரிதவித்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதனை அறிந்த ரெயில்வே போலீசார் உடனடியாக விரைந்து சென்று எஸ்-3 பெட்டியில் கழிவறையில் இருந்த பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும் யாரும் கழிவறையில் பயணம் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.

    அப்போது பயணிகள் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்குவத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல பெட்டிகளில் பயணம் செய்வதாகவும், இதனால் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் பரிதவிப்பதாக புகார் தெரிவித்தனர். ரெயில் நிலைய அதிகாரிகள், உடனடியாக சோதனை செய்தனர்.

    அப்போது எஸ்-1,எஸ்-2, எஸ்-3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகளிலும் பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது.

    அவர்களையும் போலீசார் ஜோலார்பேட்டையில் இறக்கி விட்டனர். இதனை தொடர்ந்து 15 நிமிடம் கால தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
    • ஆகஸ்டு 30-ந்தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்டு 27-ந்தேதி வரை காலை 9.45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண். 16127) படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

    இதேபோல ஆகஸ்டு 27-ந்தேதி இரவு 9.55 மணிக்கு தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16866), இன்று முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16343), நாளை மற்றும் ஆகஸ்டு 30-ந்தேதிகளில் காலை 8.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16382) கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இதன் பின்புறம் இன்று காலை மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயி லில் அடிபட்டு 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தின் அருகே பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக் டர் கேசவன் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னார். அப்போது அந்த வாலிபர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவரவில்லை.

    அவர் மஞ்சள் நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். பூணூல் அணிந்திருந்தார். சட்டையில் வில்லாபுரத்தில் உள்ள ஒரு டெய்லர் கடையின் பெயர் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் அணிந்திருந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு தைத்தது என்பது தெரிய வந்தது. வேறு விவரம் ஏதும் தெரியவில்லை.

    இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்த–வர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது.
    • ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும்.

    நெல்லை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் கொல்லத்தில் இருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது. ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை கண்காணித்தனர்.

    அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த அடிச்சட்டத்தில் (பெட்டியை தாங்கும் பகுதி) விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர்.

    பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது. எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

    இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் ரெயில் கோர விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
    • நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாகவும் பணப்பயிர்கள் செழித்தோங்கும் வேளாண்மைப் பகுதியாகவும் மற்றும் கடல் சார் பகுதியாகவும் விளங்குகின்ற வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வருகின்ற 8-ந் தேதி ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் இந்த ரெயில் சேவையால் பலரும் பயன்பெறுவர்.

    புகழ் பெற்ற வேதாரண்யம், அகத்தியன் பள்ளி, திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    கன்னியாகுமரி போன்று வேதாரண்யமும் இந்திய நாட்டின் கடைசி எல்லையாக குறிப்பாக தென்கிழக்கு முனையாக, எல்லைப்பகுதியாக சிறப்பிடம் பெற்று இருப்பதால் வட இந்தியாவை யும் தென்னிந்தியாவையும் இணைக்கக்கூடிய வகையில் வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயிலை இயக்குவதற்கும், வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தின் நினைவாக தியாகி சர்தார் வேதரத்தனம் பெயரில் வாரம் இருமுறை வேதாரண்யத்தில் இருந்து புதுடெல்லிக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை வழியாக வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விரைவு ரயிலை இயக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்திற்கு தீபாவளி பரிசாக கிடைத்த செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்ட ங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரெயில் வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வந்த 16847/16848 ரெயிலையும், மதுரை - செங்கோட்டை 06665/06662 ரெயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரெயிலாக இணைத்து தீபாவளி முதல் இயங்க தொடங்கியது.

    செங்கோட்டை - மயிலாடுதுறை ரெயில் பயணிக்கும் வழித்தடம் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. தற்போது 12 பெட்டிகளுடன் இயங்கி வரும் இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டையில் இருந்து திருத்தங்கல் வரை உள்ள ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் தற்போது திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறைக்கு நேரடியாக செல்ல முடிகிறது. அதைபோல் டெல்டா மாவட்ட பகுதிகளை சார்ந்தோர் சிவகாசி, ராஜபா ளையம், சங்கரன்கோவில். தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வருவதற்கு நல்ல இணைப்பாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×