என் மலர்

    நீங்கள் தேடியது "Express train"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.
    • ஆகஸ்டு 30-ந்தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்டு 27-ந்தேதி வரை காலை 9.45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண். 16127) படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

    இதேபோல ஆகஸ்டு 27-ந்தேதி இரவு 9.55 மணிக்கு தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16866), இன்று முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16343), நாளை மற்றும் ஆகஸ்டு 30-ந்தேதிகளில் காலை 8.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (16382) கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இதன் பின்புறம் இன்று காலை மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயி லில் அடிபட்டு 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தின் அருகே பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக் டர் கேசவன் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னார். அப்போது அந்த வாலிபர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவரவில்லை.

    அவர் மஞ்சள் நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். பூணூல் அணிந்திருந்தார். சட்டையில் வில்லாபுரத்தில் உள்ள ஒரு டெய்லர் கடையின் பெயர் இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் அணிந்திருந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு தைத்தது என்பது தெரிய வந்தது. வேறு விவரம் ஏதும் தெரியவில்லை.

    இதுகுறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்த–வர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது.
    • ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும்.

    நெல்லை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் கொல்லத்தில் இருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது. ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை கண்காணித்தனர்.

    அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த அடிச்சட்டத்தில் (பெட்டியை தாங்கும் பகுதி) விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர்.

    பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது. எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

    இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் ரெயில் கோர விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
    • நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாகவும் பணப்பயிர்கள் செழித்தோங்கும் வேளாண்மைப் பகுதியாகவும் மற்றும் கடல் சார் பகுதியாகவும் விளங்குகின்ற வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வருகின்ற 8-ந் தேதி ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் இந்த ரெயில் சேவையால் பலரும் பயன்பெறுவர்.

    புகழ் பெற்ற வேதாரண்யம், அகத்தியன் பள்ளி, திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    கன்னியாகுமரி போன்று வேதாரண்யமும் இந்திய நாட்டின் கடைசி எல்லையாக குறிப்பாக தென்கிழக்கு முனையாக, எல்லைப்பகுதியாக சிறப்பிடம் பெற்று இருப்பதால் வட இந்தியாவை யும் தென்னிந்தியாவையும் இணைக்கக்கூடிய வகையில் வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயிலை இயக்குவதற்கும், வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தின் நினைவாக தியாகி சர்தார் வேதரத்தனம் பெயரில் வாரம் இருமுறை வேதாரண்யத்தில் இருந்து புதுடெல்லிக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை வழியாக வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விரைவு ரயிலை இயக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்திற்கு தீபாவளி பரிசாக கிடைத்த செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்ட ங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ரெயில் வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வந்த 16847/16848 ரெயிலையும், மதுரை - செங்கோட்டை 06665/06662 ரெயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ரெயிலாக இணைத்து தீபாவளி முதல் இயங்க தொடங்கியது.

    செங்கோட்டை - மயிலாடுதுறை ரெயில் பயணிக்கும் வழித்தடம் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. தற்போது 12 பெட்டிகளுடன் இயங்கி வரும் இந்த ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    செங்கோட்டையில் இருந்து திருத்தங்கல் வரை உள்ள ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் தற்போது திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறைக்கு நேரடியாக செல்ல முடிகிறது. அதைபோல் டெல்டா மாவட்ட பகுதிகளை சார்ந்தோர் சிவகாசி, ராஜபா ளையம், சங்கரன்கோவில். தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வருவதற்கு நல்ல இணைப்பாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி - விருதுநகர் 2004-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன.

    தென்காசி:

    தென்காசி - விருதுநகர் வழித்தடம் 1927 ஆண்டு மீட்டர்கேஜ் ஆக தொடங்கப்பட்டு பின்னர் 2004-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது இந்த விருதுநகர் - தென்காசி வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகிய 3 ரெயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்திற்கும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரந்திர சிறப்பு ரெயிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை -மதுரை இடையே இரு ஜோடி பயணிகள் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் 2020 மற்றும் சமீபத்தில் நடைபெற்ற ரெயில்கள் கால அட்டவணை சந்திப்புகளின்போது, தென்னக ரெயில்வே சார்பாக வண்டி எண் 16327/16328 குருவாயூர் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் வண்டி எண் 56733/56734 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரெயில் ஆகிய இரு ரெயில்களையும் ஒன்றாக இணைத்து குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே விரைவு ரெயிலாக இயக்க முன்மொழிவு செய்யப்பட்டது. மேலும் குருவாயூர் - புனலூர் ரெயில் புதிதாக இயக்கப்பட்ட போது நடைபெற்ற விழாவில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் கேரள எம்.பி.க்கள் இந்த ரெயில் புனலூர் செங்கோட்டை ரெயில் பாதைகள் முடிந்தவுடன் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.

    இருக்கைகள் காலி

    இந்த குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன. புனலூரில் இருந்து மதுரை வரை நீட்டிக்கப் பட்டால்தான் பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும். ரெயில்வே வருமானமும் அதிகரிக்கும்.

    மேலும் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் புனலூர், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பேரும் உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி இந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், ஆரியங்காவு, சபரிமலை அய்யப்பன், குருவாயூர் போன்ற அனைத்து கோவில்களை இணைக்கும் வகையில் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்.

    பொங்கி வழியும் பாலருவி

    நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கொல்லம் வழியாக பாலக்காடு வரை இயங்கும் பாலருவி விரைவு ரெயிலில் தமிழகப் பகுதிகளில் இருந்து ரெயில் பயணிகள் முன்பதிவு நிரம்பி வழிகிறது.

    சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்

    மேலும் சுற்றுலாவிற்கு குற்றாலம் மற்றும் அதை சுற்றி உள்ள அருவிகள், கேரளாவில் உள்ள பாலருவி, தென்மலை , 13 கண் பாலம் என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இதனால் பயணிகள் போக்குவரத்து சுற்றுலா ஆகிய அனைத்தும் மேம்படும். ரெயில்வேக்கும் நல்ல வருமானம் ஈட்டித் தரும்.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, இந்த மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை - கொல்லம் இடையே உள்ள வழித்தட மக்களுக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரெயில் போல செயல்படும். தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களுக்கு இந்த ரெயில் மிகவும் உதவியாக இருக்கும். சபரிமலை சீசன் தொடங்க இருப்பதால் அய்யப்ப பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் வகையில் கண்ணாடி மேற்கூரைகளால் ஆன விஸ்டாடோம் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். மேலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மதுரை குருவாயூர் ரெயிலுக்கு ரெயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லையில் இருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • நாக்பூர் தென்கிழக்கு ரெயில் நிலைய பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து பிலாஸ்பூருக்கு வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாக்பூர் தென்கிழக்கு ரெயில் நிலைய பகுதியில் நடைபெற்று வரும் பணி காரணமாக அந்த ரெயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று நெல்லையில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் (22620) ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதே போல் மறுமார்க்க மாக பிலாஸ்பூரில் இருந்து நாளை மறுநாள் சேலம் வழியாக நெல்லைக்கு 6-ந் தேதி வந்து சேரும் விரைவு ரெயிலும் (22619) ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிராம் தங்க கம்மல் மீட்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அம்பை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 39).

    இவர் தனது மனைவி மற்றும் மகள் ஷாலினியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று மாரியப்பன் ஊருக்கு திரும்பினார். இரவு கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் குடும்பத்தோடு பயணம் செய்தார். இன்று அதிகாலை ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் மாரியப்பன் குடும்பத்தோடு ரெயிலை விட்டு இறங்கி வீட்டிற்கு சென்றார்.

    வீட்டிற்கு சென்று பார்த்த போது மகள் ஷாலினியின் காதில் கிடந்த 2 கிராம் கம்மலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை ரெயில் நிலையத்திற்கு வந்து தேடி பார்த்தார்.

    இது தொடர்பாக நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிராம் தங்க கம்மல் மீட்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.

    இதையடுத்து நெல்லை போலீசார் மாரியப்பனை நாகர்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக அவர் அங்கிருந்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். மாரியப்பனிடம் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாபு, சோம சேகர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். கம்மலின் அடையாளங்களை தெரிவித்ததையடுத்து மாரியப்பனிடம் கம்மலை போலீசார் ஒப்படைத்தனர்.

    கம்மலை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மாரியப்பன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரெயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தொப்பூர்:

    கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இன்று காலை 4 மணியளவில் தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே ரெயில் வந்தது. அப்போது மழை காரணமாக மலைப்பாதையில் இருந்த பாறைகள் திடீரென ரெயில் பெட்டிகள் மீது விழுந்தன. இதில் 6 பெட்டிகள் மீது விழுந்ததால் ரெயில் தடம்புரண்டது.

    இதைத்தொடர்ந்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் பெட்டிகள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 6 பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு இறங்கினர்.

    அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் நடுவழியில் பயணிகள் தவித்தனர். மேலும் மலையில் இருந்து உருண்ட பாறைகள் தண்டவாளத்தில் கிடந்தன.

     மழை காரணமாக ரெயில் பெட்டிகள் மீது பாறைகள் விழுந்து சரிந்துள்ளதை காணலாம்

    இதுபற்றி பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோட்ட மேலாளர் ஸ்ரீஷ்யாம் சிங் தலைமையில் மருத்துவ உபகரண வேனுடன் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் விரைந்து வந்து ரெயில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்தும் மீட்பு குழுவினரும் வந்தனர்.

    தடம்புரண்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரும், பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ரெயிலில் 7 பெட்டிகள், மாற்று என்ஜீன் மூலம் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல் 4 பெட்டிகள் தருமபுரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பாறைகள் விழுந்து கிடக்கும் 6 பெட்டிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரெயில்வே ஊழியர்கள் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரெயில் தடம் புரண்ட விபத்தில் ரெயில் இருந்த 2348 பயணிகளும் காயம் எதுவுமின்றி உயிர்தப்பினர்.

    நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக பயணிகள் தவித்தனர்.

    பெங்களூருவில் இருந்து பிரத்யேக ரெயில் வந்த பிறகே தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக சேலம்-பெங்களூரு ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பயணிகள் குறித்து தகவல்களை பெற தருமபுரி, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டைக்கு விரைவு ரெயிலாக இயக்கப்பட்டாலும் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    நெல்லை:

    கொரோனா தொற்று ஊரடங்கை தொடர்ந்து இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.தற்போது இந்த ரெயில்கள் விரைவு ரெயில்களாக மாற்றப்பட்டு இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டது. தூத்துக்குடிக்கு கட்டணமாக ரூ.35-ம், குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30-ம் வசூலிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று முதல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், செங்கோட்டைக்கும் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது.

    இன்று முதல் நாள் என்பதால் இந்த ரெயில்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. டிக்கெட் கவுண்டர்களிலும் கூட்டம் இல்லை. எனவே இன்று இயக்கப்பட்ட இந்த ரெயில்களில் குறைந்த பயணிகள் சென்றனர். பல பெட்டிகள் காலியாக சென்றது.

    இந்த ரெயில்கள் விரைவு ரெயிலாக இயக்கப்பட்டாலும் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.