என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train accident"

    • ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
    • மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இ

    தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங் நகரில் ரெயில் மோதி 11 பேர் உயிரிழந்தனர்.

    குன்மிங்கில் உள்ள லுயோயாங்ஜென் ரெயில் நிலையம் அருகே அங்கு இன்று அதிகாலை ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழித்தடத்தில் வந்த சோதனை ரெயில் ஒன்று பராமரிப்பு பணியாளர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது  

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
    • ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ரா மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.

    இந்த சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அண்மையில் தனது யூடியூப் சேனலில் ரெயில்வே துறை குறித்து பேசிய குணால் கம்ரா, 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 ரெயில் விபத்துகளில் சுமார் 22,000 பேர் இறந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் கூறுவதாக தெரிவித்தார். 

    அவரின் கூற்று குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ரெயில்வே வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்பில், 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 விபத்துகள் நடந்ததாக கூறப்படுவது தவறானது, அந்த ஆண்டில் நடந்த உண்மையான விபத்துகளின் உண்மையான எண்ணிக்கை 24,678 ஆகும். அதேபோல், 22,000 இறப்புகள் என்ற கூற்றுக்கு மாறாக, 21,803 இறப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளது என தெளிவுபடுத்தியது.

    இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.

    2023 இல் நடந்து மிக மோசமான ரெயில் விபத்து ஒடிசாவில் நிகழ்ந்தது. ஜூன் 2 அன்று பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா பஜார் ரெயில் நிலையம் அருகே மூன்று ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் பிழை காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

    • நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
    • உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    அந்த கோர விபத்தின் தாக்கம் மறைவதற்குள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் உள்ள சனார் ஜங்ஷன் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று 4-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் 3-வது நடைமேடையை கடந்து சென்று கொண்டி ருந்தனர்.

    பயணிகளில் மற்றொரு பிரிவினர் தண்டவாளத்தை கடந்து அடுத்த பக்கம் செல்வதற்கு நடந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர் திசையில் இருந்து மிக வேகமாக ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    ரெயில் மிக அருகில் வந்த போதுதான் பயணிகள் கவனித்து அலறினார்கள். 4-வது நடைமேடைக்கும், 3-வது நடைமேடைக்கும் இடையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அதற்குள் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சனார் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய ரெயில் ஆகும். இதனால் அந்த ரெயில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

    ரெயில் மோதிய வேகத்தில் 3 பயணிகளின் உடல்கள் கடுமையாக சிதறி போனது. பலியான 6 பயணிகளும் இன்று பவுணர்மி தினத்தை முன்னிட்டு வாரணாசியில் புனித நீராடி சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    6 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள அவர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.

    சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    • இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

     மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 9ஆம் தேதி காலை, தானேவின் கசாராவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினல் ரெயில் நிலையத்திற்கு புறநகர் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

    மும்பை புறநகர் பகுதியான மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், படிக்கட்டுகளில் நின்றிருந்த சிலர் ஓடும் ரெயில் இருந்து கீழே விழுந்தனர்.

    இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், விபத்து தொடர்பாக ரெயில் போலீசார் நேற்று முன்தினம் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    அதில், 'விபத்துக்கு சில நாட்களுக்கு முன் அந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படவில்லை என்பது தொழில்நுட்ப அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

    இதில் கவனக்குறைவாக செயல்பட்ட, உதவி கோட்டப் பொறியாளர் விஷால் டோலாஸ் மற்றும் மூத்த பிரிவு பொறியாளர் சமர் யாதவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்ட்டுள்ளது.

    ரெயில்வே வரலாற்றில் அதன் ஊழியர்கள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்திருப்பது இதுவே முதன்முறை ஆகும்.  

    • ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார்.
    • நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (அக். 13) கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.

    ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.

    அப்போது வேகமாக ரெயில் வந்துகொண்டிருந்த நிலையில் அருகில் வருவதற்குள் தனது பைக்கை தூக்க முயற்சித்துள்ளார்.

    ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அதற்குள் நேரம் கடந்துவிட்டது.

    வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2023-ல் நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.  

    • 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
    • விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

    மகாராஷ்டிராவில் மும்பை சென்ட்ரல்-வல்சாத் பயணிகள் ரெயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்த ரெயில்  7.56 மணியளவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள கெல்வே ரோடு ரெயில் நிலையத்தை அடைந்த போது மின்சார என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு புகை கிளம்பியது.

    உடனடியாக ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.

    பாதுகாப்பு நடவடிக்கையாக எஞ்சினுக்கு மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

    • தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • 84 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் கீழ் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து நாள்தோறும் 400-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடியோ, ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் கடந்து செல்லக்கூடாது என ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

    என்னதான் விழிப்புணர்வு மற்றும் அபராதம் விதித்தாலும் ரெயில்களில் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள், தண்டவாளங்களை கடந்து செல்பவர்கள் யாரும் தங்களை மாற்றி கொள்ள முன்வரவில்லை. இதனால் பல்வேறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வபோது அரங்கேறி வருகிறது.

    அந்தவகையில், தெற்கு ரெயில்வேயில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில் 8 மாதங்களில் தண்டவாளங்களை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதி 410 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், கடந்த 8 மாதங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்து தவறி விழுந்து 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

    84 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்றால், பயணிகளும், பொதுமக்களும் தாங்களே தங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே தடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    • கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் மின்சார ரெயில்களில் தவறி விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் மின்சார ரெயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் உள்பட அனைத்து முக்கியமான ரெயில் நிலையங்களிலும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள், ரெயில்களில் படிகளில் தொங்கி பயணிப்பவர்கள், தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி இதுகுறித்து ரெயில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை கோட்டத்தில், சுவரொட்டிகள், ஒலி அறிவிப்புகள், டிஜிட்டல் பிரசாரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து ரெயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எந்தச் சூழ்நிலையிலும் ரெயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழையக்கூடாது, ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், ரெயில் வரும்போது தண்டவாளங்களை கடக்க வேண்டாம், ரெயில் நிலையங்களில் நடைமேடையில் உள்ள மஞ்சள் பாதுகாப்பு கோட்டிற்குப் பின்னால் நிற்க வேண்டும் உள்பட பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.

    என்னதான் ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் ஆங்காங்கே ரெயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது ரெயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    அந்தவகையில், நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் மின்சார ரெயில் மோதி உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்தபோது தவறி விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'தண்டவாளங்களில் அத்துமீறி நுழைதல் மற்றும் படிகட்டில் பயணிப்பது போன்ற ஆபத்தான செயல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ரெயில்வே ஊழியர்களை நியமித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். ரெயில்வேயின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்' என்றார்கள்.

    • கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.
    • அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    ராஜஸ்தானின் பீவர் மாவட்டத்தில் உள்ள செந்த்ரா ரெயில் நிலையத்தில் இன்று காலை ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது.

    அதிகாலை 3 மணியளவில், நிலையத்தில் இருந்து கிளம்பியபோது கரிபிரம்மா எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஞ்சினில் திடீரென தீபற்றி எரிந்தது.

    லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அனைத்து பயணிகளும் ரெயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஷார்ட் சர்க்யூட் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தின் காரணமாக, அந்த வழித்தடத்தில் ரெயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.

    இந்த நிலையில் சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

    சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    விபத்துக்குள்ளான சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.

    தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    • மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே சொல்வது அலட்சியத்தின் உச்சம்.
    • பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நாடு முழுவதும் ரயில் விபத்துகள் பெரும்பாலும் ரயில்வே துறையின் அலட்சியத்தாலேயே நிகழ்கின்றன. கடலூர் விபத்தும் அப்படியே நடந்துள்ளது. ரயில் வருவதற்கு முன்பே கேட் மூடப்பட வேண்டும் என்னும் போது, ரயில் வரும்போது கேட் எப்படி திறந்திருந்தது?

    Inter Locking System இல்லாத கேட்களில், ஒரு ஸ்டேசனை ரயில் கடந்தவுடன் அடுத்த ஸ்டேசனுக்கு அந்த ஸ்டேசன் மாஸ்டர் தகவல் கொடுக்க வேண்டும் என்னும் போது இந்த விபத்து எப்படி நடந்தது?

    மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே நிர்வாகம் சொல்வது அலட்சியத்தின் உச்சம். கேட் மூடப்படவே இல்லை என்று வேன் ஓட்டுநரும், மாணவரும், மக்களும் சொல்வதை விசாரிக்காமலேயே ரயில்வே நிர்வாகம் ஒரு சார்பு தகவலை சொல்வது அபத்தம்.

    பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது. போதிய பணியாளர்கள் நியமனங்கள் இன்றி ரயில்வே துறை தள்ளாடுகிறது. பணி இடங்களில் மொழி தெரியாதவர்களை நியமிப்பதன் மூலம் சிக்கல் அதிகரிக்கிறது. விபத்துகளை தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் வந்தபிறகும் அவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது.
    • கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.

    இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

    ரெயில்வே தரப்பில் இருந்து பள்ளி வேன் ஓட்டுநர் மீதும் பெற்றோர் தரப்பில் இருந்து வடமாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

    கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் குற்றம் சுமத்துவதற்கு முன்பு இந்த விபத்திற்கு ரெயில்வே துறையின் அலட்சியம் காரணம் இல்லையா? என்று கேள்வி எழுகிறது.

    இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம்:

    அதிகப்படியான ரெயில் போக்குவரத்து உள்ள பகுதியில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் பாயன்பாட்டில் உள்ளது. இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருக்கும். அதை பார்த்ததும் ரெயில் ஓட்டுனர்கள் பார்த்து ரெயிலை நிறுத்தி விடுவார்கள். .

    ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் திறக்கப்பட்டபோது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொழில்நுட்பம் இல்லாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் ஏன்னு கூறப்படுகிறது. ஆகவே இண்டர் லாக்கிங் சிஸ்டம் முறையை அந்த இடத்தில பயன்பாட்டிற்கு கொண்டு வராத ரெயில்வே துறைக்கு இந்த விபத்தில் பொறுப்பில்லையா?

    ஸ்டேசன் மாஸ்டர் எங்கே?

    தன் எல்லைக்குட்பட்ட ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். ரெயில் வரும்போது ரெயில்வே கேட் திறந்து இருந்தால் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தெரிவித்து ரெயிலை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இந்த வேலையை ஸ்டேசன் மாஸ்டர் செய்தாரா? ரெயில்வே கேட் திறந்திருந்த நிலையில், ரெயில் ஓட்டுநருக்கு அவர் தகவல் தெரிவித்தாரா? அவர் மீது ரெயில்வே துறை எடுத்த நடவடிக்கை என்ன?

    தமிழ் தெரியாத கேட் கீப்பர்:

    தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ரெயில்வே துறை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிக அளவில் பணியமர்த்தி வருகிறது. குறிப்பாக கேட் கீப்பர் பணிகளில் அதிக அளவிலான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

    வடமாநிலத்தை சேர்ந்தவர்களை நியமித்தால் உள்ளூர் மக்களுடன் மொழி பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பணிகளில் அந்தந்த மாநிலந்தை சேர்ந்த அல்லது அந்த மொழி தெரிந்தவர்களை நியமனம் செய்வது தான் சரியாக இருக்கும். .

    வடமாநிலத்தவருக்கு முன்னுரிமை கொடுக்கும் ரெயில்வே துறையின் நடவடிக்கை இந்த விபத்திற்கு காரணமில்லையா?

    கேட் கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் இத்தகைய உண்மையான குறைபாடுகளை களைந்து எதிர்காலத்தில் இதுபோன்றதொரு விபத்து ஏற்படாமல் தவிர்க்க தேவியான நடவடிக்கைகளை ரெயில்வே துறை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பும்.

    ×