என் மலர்
நீங்கள் தேடியது "தடம்புரண்டு விபத்து"
- பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.
- தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டில் பயணிகள் விரைவு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பயணிகள் விரைவு ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை.
பெட்டிகளை இணைப்பதற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழித்தடத்தில் வேறு எந்த ரெயில்களும் வராது என்பதால் போக்குவரத்து சேவையில் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.
தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாகிஸ்தானில் நடந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.
- ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தொடர்பாக 6 ரெயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர்.
ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதன் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தொடர்பாக 6 ரெயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.






