என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்லாந்து"

    • தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
    • பல அமெரிக்க, ஐரோப்பிய பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் தயரிப்புகளை பயனப்டுத்தி வருகின்றனர்.

    பிரிட்டனின் பிரபல ஆன்லைன் பேஷன் மற்றும் அழகுசாதன பொருட்கள் நிறுவனமான ASOS உடைய இணை நிறுவனர் குவென்டின் கிரிஃபித்ஸ்.

     58 வயதான இவர் தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று குடியிருப்பு கட்டிடத்தில் அவர் வசித்து வந்த 17-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான உயிரிழநதார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதில் சதி இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும்.

    2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ASOS நிறுவனம், இன்று முன்னணி பேஷன் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பல அமெரிக்க, ஐரோப்பிய பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் தயரிப்புகளை பயனப்டுத்தி வருகின்றனர்.

    பிரிட்டனை சேர்ந்த குவென்டின், தனது முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்ற பிறகு, 2007ல் தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.

    அங்கு ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  

    • துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
    • அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான்.

    தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பள்ளியில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று மாலை, துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்த அந்த இளைஞன் துப்பாக்கியால் சுட்டத்தில் பள்ளியின் தாளாளர் காயமடைந்தார். மேலும் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த இளைஞன் பள்ளிக்குள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தான்.

    தகவலறிந்து விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பெற்றோர்கள் பள்ளியின் முன் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இறுதியில் அந்த இளைஞன் ஆயுதத்தை கீழே போட்டு போலீசாரிடம் சரணடைந்தான். அவனை கைது செய்த போலீசார் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். காயமடைந்த பள்ளி தாளாளர் மற்றும் 2 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தாக்குதல் நடத்த பள்ளிக்குள் நுழைவதற்கு முன் அந்த இளைஞன் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞன் தனது தங்கையை கண்டித்த ஆசிரியரை தேடி அங்கு வந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.   

    • ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.
    • கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின.

    பாங்காங்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர்.

    அந்த ரெயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.

    இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின. மேலும் ரெயில் தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.

    இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    • கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின.
    • ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர்.

    அந்த ரெயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.

    இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின. மேலும் ரெயில் தீப்பிடித்து எரிந்தது.

    உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரெயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    தாய்லாந்தின் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங்குடன் இணைக்கும் அதிவேக ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்கியோ மாவட்டத்தில் கட்டுமான பணி நடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இத்திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்று கணித்துள்ளார்
    • தாய்லாந்து கலாச்சாரத்தில், ஜோதிடம் ஆழமாக வேரூன்றியது

    தான் சொன்ன ஜோசியத்தை உண்மை என நிரூபிக்க பெண்ணின் ஃபோனை திருடிய ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.

    தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் 38 வயதான உடோம்சாப் முயாங்கேவ் என்ற ஜோசியர் புத்தாண்டு அன்று, 19 வயதான பிம் என்ற இளம்பெண்ணிற்கு சீட்டுப் பார்த்து பலன் கூறியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு விரைவில் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், அவர் ஒரு விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்றும் கணித்துக் கூறியுள்ளார்.

    பின்னர் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க ஒரு சடங்கு செய்ய வேண்டும். அதற்கு பணம் செலவாகும் எனக் கூறியுள்ளார். ஆனால் சடங்கு வேண்டாம் என்று தவிர்த்து அப்பெண் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே தனது ஐபோன் காணாமல் போனதை பிம் அறிந்தார். ஜோசியம் பார்க்கும்போது ஃபோனை தனது அருகில் வைத்ததை நினைவுக்கூர்ந்த பிம், மீண்டும் அங்கு சென்று ஜோசியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.

    அதற்கு, தனது வார்த்தைகள் பலித்ததாக உடோம்சாப் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த பிம் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து ஜோசியரின் பையைச் சோதனையிட்டபோது, முகக்கவசம் வைக்கும் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐபோனை மீட்டனர். விசாரணையில் பணத்திற்காக இவ்வாறு செய்ததாக உடோம்சாப் முயாங்கேவ் தெரிவித்துள்ளார்.

    தாய்லாந்து கலாச்சாரத்தில், ஜோதிடம் ஆழமாக வேரூன்றியது. அங்கு இது முக்கிய தொழிலாகவே, குறிப்பாக லாபகரமானதாக, முதலீடுகள் எல்லாம் போடப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. 

    • இரு நாடுகளும் கடந்த சனிக்கிழமை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • இதுவரை தாய்லாந்து தரப்பில் 26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த டிசம்பர் 7 முதல் எல்லையில் மோதல் தொடங்கியது.

    எல்லையில் நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் கடந்த சனிக்கிழமை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

     ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக, கடந்த ஜூலை மாதம் சிறைபிடிக்கப்பட்டு தனது பிடியில் இருந்த 18 கம்போடிய வீரர்களை தாய்லாந்து விடுவித்துள்ளது.

    விடுவிக்கப்பட்ட 18 பேரும் எல்லைப் பகுதியில் பணியாற்றிய கம்போடிய நாட்டு இராணுவ வீரர்கள் ஆவர்.

    டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கிய இந்த எல்லை மோதல்களில் இதுவரை தாய்லாந்து தரப்பில் 26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    தற்போது இந்த வீரர்கள் விடுவிக்கப்பட்டதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • கடந்த ஒரு வாரமாக எல்லையில் இருநாட்டு வீரர்கள் மோதிக் கொண்டனர்.
    • ஜூலை மாதத்திற்கு பிறகு தற்போது பெரிய அளவில் சண்டை ஏற்பட்டது.

    தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லையில் உள்ள நகரை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக மோசமான போர் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, இரு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

    கடந்த ஜூலை மாதம் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டனர். ஐந்து நாள் சண்டைக்குப் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அதன்பின் எல்லையில் பதற்றம் சற்று தணிந்தது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் சண்டை தொடங்கியது. இந்த நிலையில் இரு நாடுகளும் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் எல்லையில் நடைபெற்ற ஒருவார சண்டை முடிவுக்கு வருகிறது.

    கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சண்டையின்போது 18 கம்போடிய ராணுவ வீரர்களை தாய்லாந்து கைது செய்தது. அவர்களை 72 மணி நேர போர் நிறுத்தத்திற்குப் பிறகு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தாய்லாந்து நிபந்தனை விதித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அழுத்தத்தின்படி மலோசியா மதியஸ்தராக செயல்பட்டு ஜூலை மாதம் போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்தது.

    கம்போடியாவில் உள்ள விஷ்ணு சிலையை தாய்லாந்து இடித்து தள்ளியது. இதற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்தது. பின்னர் பாதுகாப்பிற்காகவே சிலையை உடைத்தோம் என தாய்லாந்து சமாளித்தது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எல்லையோர மாகாணங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

    கம்போடியா உடனான மோதல் எதிரொலியாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தாய்லாந்து அரசாங்கம் மூடி உள்ளது.

    தாய்லாந்து-கம்போடியா எல்லையான தா முயென் தாம் என்ற இந்து கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த கோவிலுக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.

    இதனால் அடிக்கடி எல்லை பிரச்சினை நிலவுகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதனையடுத்து மலேசியாவில் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கடந்த 7-ந்தேதி இந்த மோதல் மீண்டும் வெடித்தது. இதனால் தாக்குதலை தூண்டியதாக ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    எனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு தரப்பினரும் பரஸ்பரம் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் உயிருக்கு பயந்து எல்லை பகுதியில் வசித்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார். எனினும் எல்லையோர மாகாணங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

    எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி புரிராம் உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தற்காலிகமாக மூடுமாறு தாய்லாந்து கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    • தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது
    • இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர்.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டு ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டு போர் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் சேர்ந்து 48 பேர் உயிரிழந்தனர். அதன்பின் அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்தியஸ்த்தால் இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த 8-தேதி தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் எல்லையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

    தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்-கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மோதல் தொடர்பாக மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனை நடத்தினேன்.

    இதன் பயனாக தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன. இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளன. 2 நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போராக உருவாகி இருக்கக்கூடியதைத் தீர்ப்பதில் பணியாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்த மரியாதை ஆகும் என்றார்.

    • கம்போடியா உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக தாய்லாந்து அறிவித்தது.
    • புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

    பாங்காங்:

    ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையே 1907-ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இருப்பினும் எல்லையில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன

    இந்த மோதல், கடந்த ஜூலையில் முற்றியது. இருதரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். 5 நாட்கள் நீடித்த இந்த போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா சென்றபோது டிரம்ப் முன்னிலையில் இருநாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாகக்கூறி அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி இருநாட்டு வீரர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இருதரப்பை சேர்ந்த 8 வீரர்கள் பலியாகினர்.

    புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், தாய்லாந்து நாடாளுமன்றத்தை அந்நாட்டு அரசு கலைத்துள்ளது. இதையடுத்து, சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதுவரை பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையில் இடைக்கால அரசு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
    • இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்தது.

    தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.

    இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

    எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.

    மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று

    இதனையடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்நிலையில், தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உபோன் ரட்சதானி மாகாணத்தில் கம்போடியா படைகள் தாய்லாந்து படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதற்கு தாய்லாந்து வீரர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்தது. ஆனால் தாய்லாந்து தான் முதலில் தாக்கியதாக கம்போடியா கூறியது. இந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து கூறியுள்ளது.

    பின்னர் போர் விமானங்களை பயன்படுத்தி கம்போடியா மீது தாய்லாந்து பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் கம்போடியா - தாய்லாந்து நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    • இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
    • மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

    தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.

    இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

    எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.

    மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் கலந்துகொண்டார்.

    மாநாட்டின் ஒரு பகுதியாக டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

    கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

     இந்த ஒப்பந்தம் மூலம் தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

    மேலும் கம்போடியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.  

    ×