என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடாளுமன்றம்"

    • நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
    • கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, நாய்க்குட்டி ஒன்றுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

    கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள் என மறைமுகமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்ததற்கு ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியும் அதே பொருள்படும் கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,

    "நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நாய் என்ன செய்தது? அது இங்கே வந்ததா? அதற்கு அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியவர், ஆனால் அவை உள்ளே அனுமதிக்கப்படுகின்றன என எதிர்க்கட்சிகளை குறிப்பிடுமாறு கிண்டலாக கூறினார். இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

     

    • நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
    • மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    கடந்த கூட்டத்தொடரின்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வரும் 30ம் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

    • பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.
    • மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது. ஆபரேசன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி வருகிறார்கள்.

    இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியது. அப்போது பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.

    இவ்விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதியில் நின்று பதாகைகளை காட்டினர்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களை இருக்கைகளுக்கு செல்லுமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். விதிகளின்படி பிரச்சினைகளை எழுப்ப அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

    கோஷமிடுவதும், பதாகைகளைக் காண்பிப்பதும் சபையின் கண்ணியத்திற்கு ஏற்றதல்ல. இதுபோன்ற செயல்கள் என்ன மாதிரியான செய்தியை அனுப்பும் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறினார்.

    ஆனால், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்காததால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மக்களவை கூடிய 6 நிமிடங்களில் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4-வது நாளாக பாராளுமன்ற மக்களவை முடங்கியது.

    மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபை துணைத் தலைவர் ஹரி வன்ஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இதற்கிடையே மேல்-சபையிலும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.
    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

    காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக, சமாஜ்வாதி, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்)எல் போன்ற காட்சிகள் சிறப்பு கூட்டத்தொடரைக் கோரியுள்ளன.

    இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர். பின்னர் அவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    பயங்கரவாத தாக்குதல்கள், பூஞ்ச், உரி மற்றும் ரஜோரியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், போர் நிறுத்த அறிவிப்புகள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக நாடு எதிர்கொள்ளும் பிரசனைகள் குறித்து விவாதிக்க கூட்டு அமர்வுக்கு ஏற்பாடு செய்யவும் கோரிக்கை வைக்கவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

    • இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.
    • சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார். சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து மாநிலங்களைவை எம்.பி.யான இளையராஜா மாநிலங்களவையில் பங்கேற்றார்.

    அப்போது, சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை பாராட்டிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், "சிம்பொனியை இசையமைத்து, பதிவு செய்து, அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். அவரால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்தார். 

    • காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில் 2,50,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 


    இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை, 2021-22-ம் ஆண்டில் 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    • உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் நடைபெறுகிற அனைத்து உரைகளும், நிகழ்வுகளும் செய்கை மொழியுடன் ஒளிபரப்பப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 500 ரூபாய் உதவித்தொகை என்பதை போராடி பெற்றுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலை கேட்டு விண்ணப்பம் 6 என்ற படிவத்தை கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வேலை கேட்டு அந்தந்த மாவட்டங்களில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு வருகிற மே மாதம் 9-ந் தேதி மனு கொடுக்க உள்ளோம்.

    100 நாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10-ந் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டு
    • உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் பொன்னாளாகும்.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை (28-ந்தேதி) திறந்து வைக்கிறார். இக்கட்டிடத்தில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செங்கோல்இடம் பெறுகிறது.

    தமிழர்களின் பெருமை பேசும் செங்கோலுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் தருணத்தை எப்படி அடையாளப்படுத்து வது என்பது குறித்து ஜவகர்லால் நேரு, ராஜாஜி யிடம் கருத்து கேட்டார்.

    அப்போது தமிழகத்தில் மன்னர் ஆட்சி மாற்றம் நிகழும் போது ராஜகுருவிடம் இருந்து செங்கோல் பெறும் மரபு இருப்பதை ராஜாஜி எடுத்து கூறினார். அதன்படி மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து ஆட்சி அதிகாரம் மாற்றத்தை ஒரு செங்கோல் வழியாக செய்யலாம் என்பதை ஜவகர்லால் நேரு ஒப்பு கொண்டார். ராஜாஜி நேரடியாக தமிழகத்தில் முக்கிய ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு செங்கோல் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.அதன்படி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி அதிகாரம் மாறியதற்கான அடையாளமாக அளிக்கப்பட்ட செங்கோலை தயாரித்து அளித்த பெருமை திருவாவடுதுறை ஆதீ னத்துக்கு உண்டு. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலையில் அன்றைக்கு அளிக்கப்பட்ட செங்கோலும் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இந்த செங்கோல் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே காட்சியளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நீதிக்கும், நேர்மைக்கும் அடையாளமாக விளங்கும். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. நாடாளு மன்றத்தில் செங்கோல் அலங்கரிக்கும் நாள் உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் பொன்னாளாகும்.

    இதற்காக பிரதமர் மோடிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
    • பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

    அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் பாராளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது. அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர். தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    இன்னும் சில நாட்களில் ஜனாதிபதியாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே அரசை பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட KMT கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

     

    தைவான் நானடாளுமன்றத்தில் கைகலப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு KMT கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

     

    • 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
    • நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

    ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிவாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "கால அவகாசம் அளிக்காமல், உரிய ஆலோசனைகளை பெறாமல் அவசர கதியில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரப்பட்டுள்ளன. 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அனைத்து துறைகளுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் தேவை.

    3 குற்றவியல் சட்டங்களிலும் தவறுகள் உள்ளன. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
    • இப்போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியையும் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

    ஆந்திரா, பீகார் மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்தன.

    இதனையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    ×