என் மலர்
நீங்கள் தேடியது "அனைத்துக் கட்சி கூட்டம்"
- நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
- மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த கூட்டத்தொடரின்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வரும் 30ம் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது.
- தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
SIR நடவடிக்கைக்கு எதிராக கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம்.
- தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள், தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று!
ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.
திமுகவின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த SIR எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்!
ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை மறுநாள் (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்படும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 64 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க, டாக்டர் அன்புமணி (பா.ம.க.), டி.டி.வி.தினகர னின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
அழைப்பு அனுப்பப்பட்ட கட்சிகளில் விஜய்யின் த.வெ.க., டாக்டர் ராமதாசின் பா.ம.க. சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
அதன்பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்த கால கட்டத்தில் நடத்துவது சரியாக இருக்காது என்றும் இதனை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை விளக்கி பேசினார்கள்.
வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாக செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறை சிக்கல் இல்லாமல் செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போதே இதனை செய்யத் தொடங்குவது சரியாக இருக்காது. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத் தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித்திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இதுபோன்ற எந்த சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. எனவே வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் தேர்தல் ஆணையம் மோசடியாக செயல்படுகிறது.
பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது.
நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது.
குடியுரிமை சான்றிதழை கொடு என்றால் என்னால் கூட தற்போது கொடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 மாநில தேர்தல் காரணமாக இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி டிசம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரின் போது பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- 5 மாநில சட்டசபை தேர்தலால் இந்த ஆண்டு டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு 5 மாநில தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தொடரின் போது 5 மாநில தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
- பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.
நாளை மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே இந்த தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பீகாரில் ஆட்சி மாற்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாராடாளுமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
- மழைக்கால கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
- இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான ஜூலை 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பாராளுமன்ற கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையே, இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் தியாகிகள் தினம் என்ற பெயரில் ஜூலை 21-ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. இதனால் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
- மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம்.
- கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எழுப்பிய கருத்துகளின் உரையில் கூறியிருப்பதாவது,
1. முதலில், நீட் முறைகேடு குறித்த விவாதத்தின் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். NEET-UG 2024 முடிவுகளின் பகுப்பாய்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் ராஜஸ்தானில் அமைந்துள்ள குறிப்பிட்ட மையங்களில் குவிந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம். 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அதிக சதவீத விண்ணப்பதாரர்களைக் கொண்ட 50 நீட்-யுஜி தேர்வு மையங்களில், 37 மையங்கள் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் மட்டும் அமைந்துள்ளன. 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 30,204 மாணவர்களில், 2,037 பேர் சிகாரைச் சேர்ந்தவர்கள். இந்த அரசு நீட் தேர்வை மறைக்க முயல்கிறது என்ற கருத்து நிலவுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் மிக முக்கியமானது.
2. ஒவ்வொரு உறுப்பினரும் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவாத மேடையாக பாராளுமன்றம் செயல்படுகிறது. எனவே, சபையில் ஒவ்வொரு உறுப்பினரையும் சமமாக நடத்த வேண்டும். சிறிய கட்சிகளுக்கு 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்குவது நெறிமுறைக்கு புறம்பானது. ஒவ்வொரு உறுப்பினரும் அமர்வு நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் பேசும் நேரத்தையும் நான் வலியுறுத்துகிறேன்.
3. தற்போது, ஒரு மணி நேர கேள்வி நேரத்தில் வாய்வழி பதில்களுக்காக ஒரு நாளைக்கு 20 கேள்விகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன, பொதுவாக 5 முதல் 6 கேள்விகள் மட்டுமே விவாதிக்கப்படும். எனவே, கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
4. எல்லை நிர்ணய நடவடிக்கையால், மீனவர் சமூகம் உட்பட பல சமூகங்களுக்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அவர்களின் படகுகள் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். மத்திய அரசு அவர்களை இந்திய மீனவர்களாக அங்கீகரிக்காதது வருத்தமளிக்கிறது. இந்த அமர்வில் இந்த விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
5. பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2023-ம் ஆண்டு இந்தியா மீதான மத சுதந்திர அறிக்கை, சிறுபான்மைக் குழுக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், தாக்குதல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையில், உத்தரப் பிரதேச அரசு, கடை உரிமையாளர்கள் தங்கள் அடையாளங்களை பெயர்ப் பலகைகளில் காட்ட வேண்டும் என்று மதப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினரின் நிலை குறித்து சபையில் விவாதம் அவசியம்.
6. இறுதியாக, எஸ்சி மற்றும் எஸ்டிகளின் நிலை குறித்த விவாதத்திற்கு ஒரு நாள் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஆட்சியில் இருந்த அரசுகள் தவறிவிட்டன. NITI ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட SDG அறிக்கை, நாட்டில் சமத்துவமின்மையைக் குறைப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மோசமான தோல்வியைக் குறிக்கிறது. எனவே, இந்த முக்கியமான பிரச்சினையில் விவாதம் அவசியம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
- அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு (2026) பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
அதே நேரத்தில், மக்கள்தொகை உயர்வை கட்டுக்குள் வைக்காத மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.






