search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Text"

    • இன்றைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டிருக்கிறது என நூலக இயக்குனர் பேசினார்.
    • சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் செயல்பட்டு வரும் 'உலகம் சுற்றிய தமிழர்' சோமலெ நினைவு கிளை நூலகத்தில் நூலகர் தின விழாவும், 'தொல்காப்பியச்செம்மல் தமிழண்ணலின் 95- வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

    நூலகர் அகிலா வரவேற் றார். சிறப்பு விருந்தி னராக புதுக்கோட்டை மாவட்ட ஞானாலயா ஆய்வு நூலகத்தின் இயக்குநர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் கிளை நூலகர் செல்வகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நூலக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

    நெற்குப்பையில் பிறந்த மும்மூர்த்திகளான அறிஞர் சோமலெ, தமிழண்ணல், சம்பந்தம் ஆகியோர் தமிழ் மொழி பற்றாளர்களாகவும், சமூக சிந்தனை உடைய வர்களாகவும், கல்விக்காக தங்கள் வாழ்நாள் முழுவ தையும் அர்ப்பணித்ததோடு பெரும் புரவலர்களாகவும் வாழ்ந்து சென்றுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது இந்நேரத்தில் மட்டற்ற மகிழ்ச்சி அடை கின்றேன். மேலும் இன்றைய இளைய சமுதாயம் நூல்களை விட்டு தூரமாக சென்று கொண்டி ருக்கிறார்கள்.

    இதை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. பெற்றோர்களாகிய நாம் என்னதான் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினாலும் உலக அறிவு சார்ந்த விஷயங்களை ஒவ்வொரு வருக்கும் கற்றுத் தருவதும் அதன் மூலம் பல சாத னைகள் புரிந்திட வழிவகை செய்வதும் இந்த நூலகம் தான். எனவே மாணவர்கள் ஆகிய நீங்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு பெரிய அறிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் சமூக சிந்தனை உடையவர் களாகவும் மாற அன்றாட வாழ்வில் நீங்கள் நூலக தொடர்புடையவராக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நல் மாணவ வாசகர் களுக்கான விருதுகள் நெற்குப்பை நூலகத்தை நன்கு பயன்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

    இதில் சோமலெ சோமசுந்தரம், பேராசிரியர் விஸ்வநாதன், சிவகங்கை மாவட்ட நூலக கண்காணிப் பாளர் சு.சண்முக சுந்தரம், மாவட்ட நூலக இருப்பு சரிபாப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பங்குபெற்றனர். நிறைவாக சேதுக்கரசி வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றி கூறினார்.

    • சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் குறித்து விமர்சித்து வருகிறார்.
    • அனைவருக்கும் பொதுவான நூல் என்பதால் அது உலக பொதுமறை என போற்றப்படுகிறது.

    கும்பகோணம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற நிலையில் தத்துவாஞ்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு வருகை தந்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    திருக்குறள் உலகப் பொதுமறை. அதற்கு ஜி. யூ. போப் மொழி பெயர்த்தது குறித்து கவர்னர் ரவி விமர்சிக்கிறார்.

    சமயத்தை பற்றி அவர் கூறவில்லை என்று கூறுகிறார்.திருக்குறளுக்கு திரு. வி. க.,  மு.வரதராசனார், கருணாநிதி, நாவலர் உள்ளிட்ட பலர் உரை எழுதியுள்ளனர்.

    இந்துக்களுக்கு பகவத் கீதை, கிறிஸ்தவர்களுக்கு பைபிள், இஸ்லாமியர்களுக்கு குரான் என்பது சமய நூல்கள்.  ஆனால் திருக்குறள் சமய நூல் அல்ல.

    அனைவருக்கும் பொதுவான நூல் என்பதாலேயே அது உலகப் பொதுமறை என போற்றப்படுகிறது.

    சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக அரைகுறையாக தெரிந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இது தேவையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    • பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.
    • மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பேரணியாக சுற்றி வந்து நிறைவடைந்தது.

    தஞ்சாவூர்,

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மனநல மருத்துவத்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.

    மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பேரணியாக சுற்றி வந்து நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், நிலையை அலுவலர் செல்வம், கண்காணிப்பாளர் மத்தியாஸ், சென்னை மனநலத்துறை பேராசிரியர் டாக்டர் அசோகன், மனநலத்துறை தலைவர் மீனாட்சி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×