என் மலர்
நீங்கள் தேடியது "girls"
- நரிக்குடி அருகே வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
இந்த போட்டிகளில் நரிக்குடி ஓடம் கஸ்தூரி பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் இறகு பந்து, எறிபந்து, கோகோ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகளான ரோகிணி குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், லாவண்யா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், இலக்கியா தட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜனனி 2-ம் இடமும், 80 மீட்டர் தொலைவிலான தடை ஓட்டப்போட்டியில் அருணா 3-ம் இடமும், காவியா ஸ்ரீ, ஜனனி, பிரமிளா மற்றும் அருணா ஆகியோர் 100 மீட்டர் தொலைவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு 3-ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
- மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்தபோது, அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மண்எண்ணை கேனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் முத்தழகி என்பவர், தனது நிலத்தில் விவசாயம் செய்து வருவதும், அதற்காக அருகில் உள்ள மற்றொரு நிலத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்து வருவதும், தற்போது அந்த நிலத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார்.
இதனால் 2 ஆண்டுகளாக பயிர் செய்ய முடியாமல் சிரமப்படுகிறேன். எனவே ஆழ்துளை கிணற்றிலிருந்து பயிர் செய்யக்கூடிய நிலத்திற்கு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்ததாக கூறினார். உடனே போலீசார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு பகுதியை சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தோழி 15 வயது சிறுமி. இருவரையும் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் 2 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததால் ஊரை விட்டு சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டு 2 சிறுமிகள் சென்றதாக போலீசாருக்கு தெரியவந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாதென சிறுமிகளிடம் அறிவுரை கூறிய போலீசார், அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.
- மாதம் தோறும் 2-வது செவ்வாய்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
- வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல்
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயது நிறைவடைந்தும் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்காமல் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கும் மாவட்ட கலெக்டர்வளாகம், மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் மாதம் தோறும் 2-வது செவ்வாய் கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை எனில் ரூ. 50 ஆயிரத்திற்கான நிலை வைப்புத் தொகையும், 2பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிலை வைப்புத் தொகை செய்யப்பட்டு வருகிறது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் ஆக மொத்தம் மூன்று பெண் குழந்தைகளுக்கும் சிறப்பு அனுமதியின் பெயரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் பெற்று பயனடையலாம்.
முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்த்தல், விண்ணப்பித்த 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வைப்புத் தொகை ரசீதுகள் பெறாமல் இருப்பவர்களுக்கு வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல், வைப்புத் தொகை ரசீதுகளில் பெயர், பிறந்த தேதி மாற்றம் இருப்பின் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளு வதற்கு இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
- டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.
சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
டி.எச்.ரோடு பகுதியில் பள்ளியின் பின்பக்க கேட் உள்ளது. மாணவிகள் பலர் இந்த வாசல் வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். இங்குள்ள பாசுதேவ் தெருவில் பள்ளியில் இருந்து 40 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாணவிகள் இந்த பகுதி வழியாக செல்லும்போது மது குடித்துவிட்டு வருவோரால் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இங்கு பயிலும் மாணவி இந்த வாசல் வழியே பள்ளி முடிந்து சென்றபோது மதுபோதையில் 4 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். அந்த மாணவி கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு செல்லும்வரை அந்த வாலிபர்கள் பின்னால் தொடர்ந்து சென்றுள்ளனர். தினமும் பள்ளி முடியும் வேளையில் மாணவிகளிடம் பேசுவதற்காக சில ஆசாமிகள் காத்திருப்பதும், மாணவிகளை பின்தொடர்ந்து செல்வதும் வாடிக்கையாகி உள்ளது.
இந்த பிரச்சினை அதிகமானதால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியின் கேட் மூடப்பட்டது. இது மதுப்பிரியர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. ஆனால் மாணவிகள் பிரதான கேட் அமைந்துள்ள டி.எச்.சாலையை எம்.சி.எம்.கார்டன் 1-வது தெருவழியாக 400 மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாக குழுவில் உள்ள அந்த பகுதி வார்டு கவுன்சிலர் ரேணுகா கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மாணவிகளின் பாதுகாப்பு கருதியே பள்ளியின் பின்பக்க கேட் மூடப்பட்டு உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு பின்னால் ஒரு நூலகம் உள்ளது. டாஸ்மாக் கடை இயங்குவதால் பள்ளி நேரத்தில் கூட நூலகத்தில் மாணவிகள் உட்கார முடியவில்லை என்றார். பள்ளி தலைமை ஆசிரியை கோகிலா கிரேஸ் கூறுகையில், டாஸ்மாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால்தான் பின்பக்க கேட்டை திறக்க முடியும் என்றார். இதுபற்றி ராயபுரம் எம்.எல்.ஏ. ஆர்.மூர்த்தி கூறுகையில், மாணவிகளுக்கு இடையூறாக இருந்தால் அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்றார்.
- இந்த முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்.
- ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடா்பாக தமிழக முதல்வா் அறிவிப்பின்படி இன்று சிறப்பு முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த முகாம் நாளை (சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.
இந்த முகாம்களில் விடுபட்ட விண்ணப்ப தாரா்கள் மற்றும் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மனைவி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை பொறுப்பாளராக உள்ளார்.
- கழிவறைக்கு வரும் 2 சிறுமிகளுக்கு காதர்பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் தாதாகப்பட்டி கார்ப்பரேசன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காதர்பாஷா வயது 54, இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை பொறுப்பாளராக உள்ளார். இதனால் அங்கு காதர்பாஷா அடிக்கடி சென்று வந்தார். அப்போது கழிவறைக்கு வரும் 2 சிறுமிகளுக்கு காதர்பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியான பள்ளி மாணவி ஒருவர் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினார். தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளான 2 சிறுமிகளுக்கும் காதர்பாஷா ப ாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து காதர்பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
- மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
- பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.
பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.
புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.
மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.
பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
- தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
நாகப்பட்டினம்:
பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான நடனம் மற்றும் பல்வேறு போட்டிகள் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி உள்ள ஆண்டவர் கல்லூரியில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து 12 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கல்வி மற்றும் பிற செயல்பாடுகளில் மாணவிகள் மேலோங்கி வர மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஊக்குவிப்பு தொடர்பான பாடல்கள் முதல் பின்னல் கோலாட்டம் என வித்தியாசமான மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வை யாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
தொடர்ந்து 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளுக்கு இடையில் நடைபெற்ற சிகை அலங்கார போட்டியில் வித்தியாசமான முறையில் பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
இதைப்போல சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை தங்களின் முகங்களில் வரைந்து முக ஓவிய போட்டியில் வண்ணமயமான முகங்களுடன் மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற மெஹந்தி போட்டியில் கை முழுவதும் மருதாணிகள் போட்டு தங்களுடைய திறமைகளை நர்சிங் கல்லூரி மாணவிகள் வெளிப்படுத்தினர்.
மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் அடுத்த மாதம் மாநில அளவில் சேலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
- காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெக்கலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கு கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இளம்பெண் இருந்தார்.
சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரி இல்லை என கூறி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மகள் வீட்டில் இல்லாதது கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் இளம்பெண்ணை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரி இளம்பெண். இவர் உடுமலையை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் அவரது காதலனுடன் சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.