search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் மாயமான 2 சிறுமிகள் ஈரோட்டில் மீட்பு
    X

    சேலத்தில் மாயமான 2 சிறுமிகள் ஈரோட்டில் மீட்பு

    • சேலம் குகை பஞ்சாங்கி ஏரி பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
    • இதில் மாயமான 2 சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சேலம்:

    சேலம் குகை பஞ்சாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவரின் 14 வயது மகள், குகை பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதேபோல், குகை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு 14 வயது சிறுமியும் மாயமானார். இதுகுறித்து சிறுமிகளின் தந்தை இருவரும் செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் மாயமான 2 சிறுமிகளும் ஈரோட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈரோட்டுக்கு விரைந்த போலீசார், சிறுமிகளை மீட்டு வந்து, அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×