என் மலர்
நீங்கள் தேடியது "rescue"
- தாரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
- தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பாப்பம்பாடி கிராமம் சின்னப்பம்பட்டி சந்தை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் ,விவசாயி. இவருக்கு சொந்தமான பசுமாடு சந்தை பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தது.
அப்போது அருகில் இருந்த 60 அடி கிணற்றில் தவறி விழுந்தது .இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- தெரு நாய்கள் விரட்டியதால் புள்ளிமானை கிணற்றில் விழுந்தது.
- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பாளையம்பட்டி
அருப்புக்கோட்டை அருகே பெரியநாயகபுரம் கிராமத்தில் இன்று காலை தண்ணீர் தேடி புள்ளிமான் வந்தது. இதை பார்த்த தெரு நாய்கள் அந்த மானை விரட்டியது. இதில் பயந்த அந்த மான் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
இதை பார்த்த பொது மக்கள் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளி மானை பாது காப்பாக உயிருடன் மீட்டனர்.
பின்னர் மான் வனத்துறை அதிகாரி களிடம் ஒப்படை க்கப்பட்டது. கிணற்றுக்குள் புள்ளிமான் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களி டையே சிறிதுநேரம் பரபரப்பு ஏற்படுத்தியது
- பவானிசாகர் அருகே வெற்றிலை வாங்க சென்று மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்.
- இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அடுத்த கறி தொட்டம்பாளையம், ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (30). இவர் தனது பாட்டி ரங்கம்மாள் (73) உடன் வசித்து வருகிறார். ரங்கம்மாள் தினமும் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நால் ரோடு பகுதிக்கு சென்று தனக்கு தேவையான வெற்றிலை பாக்கு வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி ரங்கம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மாங்கள் மொக்கைக்கு கீழ்புறம் உள்ள காய்ந்த குட்டை பக்கமாக மூதாட்டி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தேவராஜிக்கும் தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது தனது பாட்டி என உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து பவானிசாகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள வசிஷ்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அழகம்மாள் (வயது 75). தற்போது இவர்கள் வசிஷ்டபுரம் ஊராட்சியை சேர்ந்த ரெட்டிகுடிக்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை அழகம்மாள், விறகுகள் சேகரிக்க வெள்ளாற்றுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொழுதூர் அணைக்கட்டில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அகரம்சிகூர் வெள்ளாற்றின் இரு கரையிலும் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அழகம்மாள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.
இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் ஆகியோர் திட்டக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் வசந்தராஜன், சிறப்பு நிலை அலுவலர் நடராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், கலைஅமுது, பாட்ஷா ஜான் ஆகியோர் ஆற்றில் இறங்கி, ரப்பர் டியூப் போன்றவற்றை பயன்படுத்தி நடு ஆற்றில் தவித்த அழகம்மாளை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அழகம்மாள் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேகாலயாவின் கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கடந்த மாதம் 13-ந் தேதி திடீரென தண்ணீர் புகுந்ததால், 15 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சுரங்கத்தில் சிக்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகளை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒகேனக்கல்:
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்துள்ள நடு வேட்டந்தன்பட்டியை அருணாசலம். இவருடைய மகன் நவீன் (வயது18). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நவீன் மற்றும் அவருடைய உறவினர்கள் கடந்த 27-ந் தேதி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ஊட்டமலை பரிசல் துறைக்கு சென்றனர். அங்குள்ள காவிரி ஆற்றில் நவீன் உறவினர்களுடன் குளித்தபோது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நவீனை தேடும் பணியில் பரிசல் ஓட்டிகள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாக ஈடுபட்டனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. பின்னர் இன்று காலை 3-வது நாளாக அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நவீனின் உடல் ஊட்டமலை பரிசல் துறை அருகே கிடைத்தது. உடனே நவீனின் உடலை பரிசல் ஓட்டிகள் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ஆதி (வயது 14). இவர் சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற ஆதி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.
பின்னர் பள்ளியில் வந்து விசாரித்தபோது அவர் பள்ளிக்கு செல்லாமல் மாயமானது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேலம் மாநகர போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தனியாக சுற்றி திரிவதை பார்த்த சென்னை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சேலத்தில் மாயமான ஆதி என்பது தெரிய வந்தது.
அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே சேலம் போலீசார் நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். மாணவனை இன்று சேலத்திற்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் படிக்க விருப்பம் இல்லாமல் மாணவன் சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் நேற்றிரவு வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது 1-வது பிளாட்பார்மில் ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் தனியாக நீண்ட நேரமாக சுற்றி சுற்றி வந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த காளியப்பன் மகள் பிரியா (8) மற்றும் அவரது தம்பி அருள் (5) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் எதற்காக வீட்டில் இருந்து அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து ரெயில்வே போலீசார் 2 பேரையும் சேலம் மாநகர சைல்ட் லைன் அமைப்பிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமி மற்றும் சிறுவனை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து தனிஷா என்ற 17 வயது பள்ளி மாணவி திடீரென காணாமல் போனார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த சந்தீப்பிரசாத், அவரது சகோதரர் சுஜித் சுரேந்திர பிரசாத் இருவரும் மாயமானார்கள்.
இது தொடர்பாக அவர்களது பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்திய செல்போன் மூலம் அம்மாநில போலீசார் 3 பேரும் சென்னையில் இருப்பதை உறுதி செய்தனர். ஆயிரம்விளக்கு பகுதியில் அவர்கள் தங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி நாசிக் போலீஸ் சூப்பிரண்டு திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் செல்வ நாகரத்தினத்திடம் தகவல் தெரிவித்தார். 3 பேரையும் கண்டுபிடிக்க உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அம்மாநில போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, ஆயிரம் விளக்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் ஆகியோர் மாணவர்கள் பயன்படுத்திய செல்போனை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.
3 பேரும் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டு மகாராஷ்டிரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
3 பேரும் சென்னை வந்து இங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்தது விசாரணையில் தெரிய வந்தது.
வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 3 பேரும் சென்னைக்கு ஓடி வந்துள்ளனர். #StudentsRescue
தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையோரம் சுமார் 1 அடி உயரம் உள்ள அம்மன் சிலை கிடந்தது. அந்த பகுதியில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்பவர் இதை பார்த்து தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிலையை மீட்டு தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த சிலை சுமார் 5 கிலோ எடையில் இருந்தது. இந்த சிலை கோவில்களில் இருந்து திருடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் பாதுகாப்புக்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் சிலையை திருடி வந்த மர்ம நபர்கள், போலீசாருக்கு பயந்து அதனை சாலையோரம் வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த சிலையை வீசிச்சென்றது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Ammanstatue