என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சடலம்"

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலாயுதம் பாளையம் அருகே காவிரி ஆற்றில் பெண் சடலம் மிதந்துள்ளது.
    • வெள்ளைநிற சேலை அணிந்திருந்த படி மிதந்த சடலத்தை பார்த்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கி பகுதியை சேர்ந்த சிலர் காவிரி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளனர்.அப்போது காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் தண்ணீரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்துள்ளது. வெள்ளைநிற சேலை அணிந்திருந்த படி மிதந்த அந்த சடலத்தை பார்த்தவர்கள், இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்த பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர், குளிக்கும் போது தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாரா அல்லது எவரேனும் அவரை கொலை செய்து காவிரி ஆற்றில் வீசிவிட்டனரா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோகைமலை அருகே மரத்தடியில் சடலம் மீட்கபட்டது
    • இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்

    கரூர்:

    திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (47) கூலி தொழிலாளி. இவர் தோகைமலையில் உள்ள தனது அக்கா சந்திராவை பார்ப்பதற்காக சென்றார். இந்நிலையில் பாதிரிப்பட்டி ஒயின்ஷாப் செல்லும் சாலையில் மரத்தடியில் பெரியசாமி இறந்து கிடந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பெரியசாமி மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    • வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து பி.ஏ. பி., வாய்க்கால் தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.
    • சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில்:

    காங்கயம், ஏ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(30). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா இவர்களது 3 1/2 வயது மகன் ரிதன் .

    இந்த நிலை இந்த மாதம் பிப்ரவரி 2-ந் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரிதன் மாயமானார்.இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை யாராவது கடத்தி சென்றுள்ளார்களாக அல்லது அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் சிறுவனை தேடி வந்தனர்.

    ஆனால் சி.சி.டி.வி காட்சிகளில் சிறுவன் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.ஏ.பி வாய்க்காலில் தேடி வந்தனர். இருப்பினும்வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து பி.ஏ. பி., வாய்க்கால் தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது.பின்னர் போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் வாய்க்காலில் தேடியும் சிறுவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் ஏ.சி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நிலத்தடி தொட்டிகள், புதர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் படியான பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் அழுகியநிலையில் ஒரு சிறுவனனின் உடல் கிடப்பதாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வாய்க்காலில் கிடந்த சிறுவனின் பிணம் பிப்ரவரி 2-ந் தேதி காங்கயத்தில் மாயமான 3 வயது சிறுவன் ரிதன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காங்கயம் பகுதியில் மாயமான 3 வயது சிறுவன் வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது52). இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் நகரியம் பகுதியில் உள்ள கடற்கரையில் பழனியப்பன் பிணமாக கிடந்தார். அவர் கடலில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தலைமை ஆசிரியர் பழனியப்பன் கூவத்தூரில் இருந்து கல்பாக்கம் கடற்கரைக்கு எதற்காக வந்தார்? அவர் கடலில் இறங்கியபோது அலையில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந் தாரா? அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விராலிமலை அருகே மாயமான இளம்பெண்ணின் பிணம் கிணற்றில் மிதந்தது
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விராலிமலை.

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுநகரை சேர்ந்தவர் காஜாமைதீன் இவரது மகள் தஜ்லீன்பானு (வயது24). இவர் தாய் தந்தை இறந்த நிலையில் சகோதர்களுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில், இவரை திருமணம் செய்துகொள்ள சொல்லி சகோதரர்கள் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் இருந்த தஜ்லீன்பானு திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவரது சகோதரர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டு கிணற்றில் தஜ்லீன்பானு பிணமாக கிடந்துள்ளார்.உடனடியாக இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி பெண்ணின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின்னர் போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஜ்லீன் பானுவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குளித்தலை:

    திருச்சி கோணக்கரை பகுதி சாலையில் 4 நாட்களாக ஒரு கார் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காருக்குள் பார்த்தபோது, காருக்குள் ஆண் ஒருவர் படுத்து இருந்தார். ஏ.சி. ஓடிக்கொண்டு இருந்தது. துர்நாற்றம் வீசியது.

    இதனால் அச்சம் அடைந்த அவர்கள் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, காருக்குள் இருந்தவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி விதைப்பண்ணை ரோட்டை சேர்ந்த ஆடலரசு (வயது 38) என்பதும் இவர் மார்கெட்டிங் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விசாரணையில், அவர் தனது மனைவி லட்சுமி பிரியா, 2 வயது மகளை தஞ்சை திருப்பந்துருத்தி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 31-ந்தேதி காலை 7 மணிக்கு குளித்தலைக்கு புறப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி குளித்தலை போலீசில் தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது. அவர் காரை ஓட்டி வந்தபோது உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவா என முழக்கமிட்டனர்.
    • ஓயாமரி சுடுகாட்டில் அரங்கேறிய சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது.

    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 60). டீ மாஸ்டரான இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உறவினர்கள் திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு உடலை எரியூட்ட வந்தனர்.

    இதனிடையே இறந்த பாலசுப்பிரமணியனின் உடலுக்கு அகோரி முறைப்படி ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என அவரது உறவினரான சரவணன் என்பவர் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள அகோரி மணிகண்டனிடம் கேட்டுக் கொண்டார்.

    அதன்படி காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் தன் சீடர்களுடன் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு ஓயாமரி சுடுகாட்டிற்கு வந்தார். அப்போது இறந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் தங்களது வழக்கமான இறுதி சடங்குகளை முடித்தனர்.

    அதன் பிறகு அகோரி மணிகண்டன் தகன மேடையில் உள்ள பாலசுப்ரமணியனின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோர மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார். அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவா என முழக்கமிட்டனர்.

    பின்னர் பாலசுப்பிரமணியனின் உடலுக்கு தீபாராதனை காண்பித்து பூஜை நிறைவு செய்யப்பட்டது. காசியில் நடைபெறக்கூடிய இந்த ஆன்ம சாந்தி பூஜையானது , திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அரங்கேறிய சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது.

    மேலும் அகோரி மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் தன் தாயார் சடலத்தின் மீது அமர்ந்து ஆன்ம சாந்தி பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.
    • அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த காடுவெட்டி தரைப்பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் பெண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். சுடிதார் அணிந்து இருந்தார்.அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

    அவர் கொலை செய்யப்பட்டு கூவம் ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருவேற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 2 நாட்களில் மாயமான பெண்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • மற்றொருவரின் உடல் முழுவதும் சிதைந்து கிடந்ததால் அவரை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
    • இரண்டு பேரின் உடல்களும் தண்டவாளத்தின் இருபுறத்திலும் தனித்தனியாக கிடந்தது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை 2 வாலிபர்கள் பிணமாக கிடந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர்களில் ஒருவரது செல்போன் எண்ணை வைத்து அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மற்றொருவரின் உடல் முழுவதும் சிதைந்து கிடந்ததால் அவரை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.

    உடல்கள் கிடந்த இடம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை இல்லை. மேலும் இரண்டு பேரின் உடல்களும் தண்டவாளத்தின் இருபுறத்திலும் தனித்தனியாக கிடந்தது. எனவே அவர்கள் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்ததில் இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ரெயிலில் பயணம் செய்த போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டு வேல் (44) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி இளம் பெண்ணின் உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த இளம் பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பிணமாக கிடந்த பெண் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் ஆசிகா (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

    ஆனந்தாயி அம்மன் மாணவியின் குல தெய்வம் ஆகும். சம்பவத்தன்று தனியாக மாணவி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுள்ளார். இந்த காட்சி கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இந்த நிலையில் தான் மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
    • திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    தேனி மாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 33). திருநங்கையான இவர் கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வீர புலி பகுதியில் வசித்து வந்தார்.

    கூலி வேலை செய்து வந்த சுமன் இன்று காலை வீரபுலி பகுதியில் ரோட்டோரத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    ரோட்டோரத்தில் பிணமாக கிடந்த சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பலியான திருநங்கை சுமனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும். கடந்த வாரம் கன்னியாகுமரி பகுதியில் ரோட்டோரத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்த நிலையில், மேலும் ஒரு திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×