search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deadbody"

    • ஸ்ரீரங்கம் பகுதியில் வாலிபர் பிணம் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
    • பிணத்தை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி கும்பகோணத்தான் சாலையில் ஒரு மரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் தூக்கில் தொங்குவதாக பொது மக்கள் ஸ்ரீரங்கம் போலீசா ருக்கு தகவல் அளித்து உள்ளனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் தூக்கில் தொங்கிய அந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலையா? அல்லது அவரை யாராவது அடித்து கொன்று தூக்கில் பிணமாக தொங்க விட்ட னரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். கும்பகோணத்தான் சாலையில் மரத்தில் வாலிபர் தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சியில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம் கிடந்தது
    • பாசத்தில் உடல் அருகே காத்திருந்து பாதுகாத்த வளர்ப்பு நாய்

    திருச்சி,

    திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உடனடியாக இன்று காலை திருச்சி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டின் அறை கதவு லேசாக சாத்தப்பட்டு இருந்தது. பின்னர் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு அந்த வீட்டில் வசித்து வந்த மதியழகன் (வயது 50) என்பவர் இறந்து கிடந்தார்.மேலும் அங்கு ஒரு நாய் இருந்து கொண்டு அவரை நெருங்க விடாமல் போலீசை கண்டு குரைத்து கொண்டு இருந்தது. தனது எஜமானர் இறந்த நிலையிலும் அவரை விட்டுப் பிரியாமல் அந்த நாய் கடந்த இரு தினங்களாக அங்கேயே படுத்திருக்கலாம் என கூறப்பட்டது.

    பின்னர் ஒரு வழியாக போலீசார் நாயை துரத்தி விட்டு உடலை மீட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த அவரது சகோதரர் சம்பவ இடம் விரைந்து வந்தார்.

    அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்த மதியழகன் கோவில்களில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு காலம் தள்ளி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது தாய் இறந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து வீட்டில் முடங்கிய அவர் உடல் நலக்குறைவால் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டை அருகே மர்மமாக இறந்த தொழிலாளி உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது
    • தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோவிலில் சந்தேகத்தின் பேரில் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இறந்து புதைக்கப்பட்ட மகனின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர்.

    புதுக்கோட்டை அருகே குன்றாண்டார் கோவிலை சேர்ந்த சங்கிலி முத்து என்பவரின் மகன் அறிவழகன்(வயது 36). கூலித் தொழிலாளரான இவர், கடந்த நவம்பர் 10-ந்தேதி உயிரிழந்தார். உறவினர்கள் முன்னிலை யில் அங்குள்ள மாயா னத்தில் அவரின் உடல் புதைக்கப்பட்டது. இந்நிலை யில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அறிவழகனின் தாய் சாந்தி உடையாளிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கொளத்தூர் வருவாய் துறையினர் முன்னிலையில் அறிவழகனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், உடல் மீண்டும் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அறிவழகனின் மரணம் குறித்த விபரங்கள் தெரிய வரும் என உடையாளிபட்டி போலீசார் தெரிவித்தனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே முந்திரி காட்டில் எரிந்து கொண்டிருந்த மனித உடலால் பரபரப்பு நிலவியது
    • தீயை அணைத்து பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காட்டில் இருந்து தீ எரிந்து புகை வெளியாவது குறித்து, அந்த பகுதியாக சென்ற பொதுமக்கள் உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு வந்து போலீசார், பார்த்த போது மனித உடல் எரிந்து கொண்டிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே சாக்கு உதவியுடன் உடலின் மீது எந்த தீயை அணைத்து உள்ளனர். இருப்பினும் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கருகிற எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தது. இறந்தது ஆணா, பெண்ணா, என்பது கூட தெரியவில்லை.

    இதனை அடுத்து உடையார்பாளையம் போலீசார் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைத்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் டிக்சி, மோப்பம் பிடித்தவாறு, வெண்மான் கொண்டான் கிராமம் மில் வரை சென்றது.

    நேற்று காலை வடகடல்- குடிகாடு பிரிவு சாலையில் ரத்தம் அதிக அளவில் கொட்டிகிடந்தது குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.இந்த இரண்டு சம்பவங்களுக்கும் சாலை மார்க்கமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரமும், வயல்வெளி மார்க்கமாக சுமார் 3 கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது.இது குறித்தும் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • வேலாயுதம்பாளையம் அருகே ஆற்றில் பிணமாக மிதந்த பெண் பிணத்தால் பரபரப்பு ஏற்பட்டது
    • பிணத்தை கைப்பற்றி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றில் தண்ணீரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கரை ஓரமாக ஒதுங்கியது. அதேபோல் சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த திட்டில் மிதந்தது. போலீசார் பிணங்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காவிரி ஆற்றில் நடு திட்டில் சிக்கிக்கொண்ட வாலிபர் நாமக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜெகநாதன் ( 32) என்பது தெரியவந்தது. இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும்அவரது உறவினர்கள் 15 பேருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் காவேரி ஆற்று தடுப்பணை குளித்தனர். அப்போது ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ஜெகநாதனை காணவில்லை. இந்நிலையில் ஜெகநாதனின் உடல் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றுப்பகுதியில் ஒதுங்கியிருப்பது தெரியவந்தது.

    அதேபோல் காவிரி ஆற்றின் ஓரத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் யார், அவர் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? அல்லது தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் இவரை கொலை செய்து காவிரி ஆற்று தண்ணீரில் வீசி சென்று விட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சுமார் 35 வது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெணை கடந்த 3 நாட்களாக காணவில்லை. எனவே கொடுமுடி அருகே காணாமல் போன பெண்ணின் பிணமா? என்பது அவரது உறவினர் வந்த பிறகு தெரியவரும். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • விராலிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்ம மரணமடைந்துள்ளார்
    • விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து கொலையா ?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா மிரட்டு நிலையை சேர்ந்தவர் குடியரசு மகன் சிதம்பரம் (வயது 39). இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெம்மணி கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.பின்னர் விராலிமலையை அடுத்த வெம்மணி கிராமம் அருகே உள்ள நீர்பழனியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    தற்போது இவர் விரா லிமலை அருண் கார்டன் பகுதியில் வீடு வாட கைக்கு எடுத்து தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிதம்பரம் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை யடுத்து கிராம உதவியாளர் பன்னீர் என்பவர் அருண்கா ர்டனில் உள்ள சிதம்பரம் தங்கியிருந்த வீட்டில் சென்று பார்த்துள்ளார். அப்போது சிதம்பரம் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார்.இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி ஜீவானந்தத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண் டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விரா லிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
    • கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி,

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடு த்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பிண த்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் ?எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மேலபுதூரில் காருக்குள் டிரைவர் பிணமாக கிடந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி, 

    திருச்சி பாலக்கரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் வாழவந்தான் கோட்டையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது காருக்கு திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த ராஜா என்கிற எட்வர்டு ஆரோக்கியராஜ் என்பவர் ஆக்டிங் டிரைவர் ஆக இருந்து வந்தார் .சம்பவத்தன்று இவரது காரை எடுத்துக்கொண்டு திருச்சி மேலப்புதூர் பகுதி யில் உள்ள பள்ளி அருகில் நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் காருக்குள் இருந்த ராஜா என்கிற எட்வ ர்டு ஆரோக்கியராஜ் மயங்கி ய நிலையில் பிணமானார்.இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே மாயமான முதியவர் குட்டையில் பிணமாக மீட்பு
    • குடிபோதையில் கால் கழுவ சென்றபோது, குட்டையில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செட்டிக்குழிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 75). இவர் மின்சார வாரியத்தில் இளமின் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவி பழனியம்மாளுடன் வசித்து வந்தார்.கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ெபரியசாமி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் ராஜ்குமார், பெரியசாமியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இந்நிலையில் கோரியாம்பட்டியில் இருந்து செட்டிக்குழிபள்ளம் செல்லும் சாலையில் கல்லுக்குழி குட்டையில் ஒருவர் பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அங்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குட்டையில் பிணமாக மிதந்தது பெரியசாமி என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், பெரியசாமியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெரியசாமி குடிபோதையில் கால் கழுவ சென்றபோது, குட்டையில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வானதிரையன் கிராமம் கோவில் மண்டபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் டிரைவர் பிணம் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
    • கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வானதிரையன் குப்பம் கிராமத்தில் அய்யனார் கோவில் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்காக, நேற்று முன்தினம் மாலை பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த பொக்லைன் எந்திரத்தை டிரைவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் காட்டு கொட்டகை கிராமத்தை சேர்ந்த திருஞானத்தின் மகன் வெங்கடேசன்(வயது 28) ஓட்டி வந்து நிறுத்தியிருந்தார். நேற்று காலை அப்பகுதியில் மண் அள்ளப்பட இருந்தது. இந்நிலையில் அய்யனார் கோவில் மண்டபத்தில் தூக்குப்போட்ட நிலையில் வெங்கடேசன் பிணமாக தொங்கினார். கோவிலுக்கு வந்த பொதுமக்கள் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்து மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
    • தகவல் தர ரெயில்வே போலீசார் அறிவிப்பு

    திருச்சி, 

    திருச்சி பாலக்கரை ரயில் நிலையம் அருகே காஜாபேட்டை பகுதிடியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு, உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்கைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நபர் மஞ்சள் நிற சட்டையும், சிமெண்ட் கலர் கையிலியும் அணிந்துள்ளார். அவர் வலது கையில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்ற சீட்டு, பிங்க் கலரில் உள்ளது. இடது கை நெருப்பில் பட்டு சற்று எரிந்த நிலையில் சுருங்கியுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் 9498139826, 9498101978 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • திருச்சியில் அழுகிய நிலையில் வீட்டுக்குள் எலக்ட்ரீசியன் பிணம் கிடந்தது
    • பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பாண்டியன் தெரு பகுதியைச் சேர்ந்தவன் சகாயராஜ் (வயது 40 )எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அவரதுபூட்டிய வீட்டுக்குள் இருந்து இன்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சகாயராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் சகாயராஜ் தூக்கில் பிணமாக தூங்கி கொண்டிருந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.மனைவி கோபித்துச் சென்ற அன்றைய தினமே அவர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனக் கூறப்பட்டது.பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×