search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம நிர்வாக அதிகாரி மர்ம சாவு
    X

    கிராம நிர்வாக அதிகாரி மர்ம சாவு

    • விராலிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்ம மரணமடைந்துள்ளார்
    • விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து கொலையா ?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா மிரட்டு நிலையை சேர்ந்தவர் குடியரசு மகன் சிதம்பரம் (வயது 39). இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெம்மணி கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.பின்னர் விராலிமலையை அடுத்த வெம்மணி கிராமம் அருகே உள்ள நீர்பழனியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    தற்போது இவர் விரா லிமலை அருண் கார்டன் பகுதியில் வீடு வாட கைக்கு எடுத்து தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிதம்பரம் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை யடுத்து கிராம உதவியாளர் பன்னீர் என்பவர் அருண்கா ர்டனில் உள்ள சிதம்பரம் தங்கியிருந்த வீட்டில் சென்று பார்த்துள்ளார். அப்போது சிதம்பரம் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார்.இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி ஜீவானந்தத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விராலிமலை கிராம நிர்வாக அதிகாரி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்து கொண் டாரா? அல்லது யாரேனும் கொலை செய்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விரா லிமலை அருகே கிராம நிர்வாக அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×