search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் பிணமாக மிதந்த பெண் பிணம்
    X

    ஆற்றில் பிணமாக மிதந்த பெண் பிணம்

    • வேலாயுதம்பாளையம் அருகே ஆற்றில் பிணமாக மிதந்த பெண் பிணத்தால் பரபரப்பு ஏற்பட்டது
    • பிணத்தை கைப்பற்றி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றில் தண்ணீரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கரை ஓரமாக ஒதுங்கியது. அதேபோல் சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த திட்டில் மிதந்தது. போலீசார் பிணங்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காவிரி ஆற்றில் நடு திட்டில் சிக்கிக்கொண்ட வாலிபர் நாமக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்த ஜெகநாதன் ( 32) என்பது தெரியவந்தது. இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும்அவரது உறவினர்கள் 15 பேருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் காவேரி ஆற்று தடுப்பணை குளித்தனர். அப்போது ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த ஜெகநாதனை காணவில்லை. இந்நிலையில் ஜெகநாதனின் உடல் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றுப்பகுதியில் ஒதுங்கியிருப்பது தெரியவந்தது.

    அதேபோல் காவிரி ஆற்றின் ஓரத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் யார், அவர் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? அல்லது தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் இவரை கொலை செய்து காவிரி ஆற்று தண்ணீரில் வீசி சென்று விட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சுமார் 35 வது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெணை கடந்த 3 நாட்களாக காணவில்லை. எனவே கொடுமுடி அருகே காணாமல் போன பெண்ணின் பிணமா? என்பது அவரது உறவினர் வந்த பிறகு தெரியவரும். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

    Next Story
    ×