என் மலர்

    நீங்கள் தேடியது "Corpse"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி வெள்ளாற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் சூர்யா (வயது 30) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இவருக்கு காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியாவின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோகதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சூரியாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் ரத்த பரிசோதனை லேப் வைத்துள்ளார். இவரது மனைவி வசந்தி, இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    ஏரி

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார். பின்னர் போலீசார் அவரது செல்போன் எண்ணை வைத்து அவரை தேடினர். அப்போது கன்னங்குறிச்சி புது ஏரி பகு தியை காட்டியது. தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஏரிக்கரையில் சர ணின் மோட்டார் சைக்கிள், செல்போன், செருப்பு, ஐ.டி.கார்டு ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் தேடினர். பிற்பகல் 3 மணி யளவில் சரணின் உடலை தீயணைப்பு வீரர்கள் பிண மாக மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் உற வினர்கள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் சோகம் நிலவி வருகிறது.

    இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சரண் சரியாக படிக்காத தால் சரணை மன வேதனை யில் இருந்த சரண் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் 77 தவறிய அழைப்புகள் கிடந்தன. ஆனால் அவரது செல்போன் பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யப்பட்டிருந்ததால் யார், யாரிடம் இருந்து போன் வந்தது. கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விவரத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. சரணின் செல் போனில் 77 தவறிய அழைப்புகள் கிடந்ததால் சரணை காணாததால் அவ ரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு போன் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

    செல்போன் ஆய்வு

    மேலும் இன்று அந்த செல்போனை திறந்து பார்த்து ஆய்வு செய்ய போலீ சார் முடிவு செய்துள்ளனர். அப்போது தான் யார், யாரி டம் பேசி னார், யார் யாரிடம் இருந்து போன் வந்தது என்ற முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்த னர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் இன்று சாலை மறியல்
    • அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள பரதன் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் ஜனனி (வயது 16). ஆலம்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவர் மீண்டும் வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் மாணவி ஜனனி பள்ளி சீருடையுடன் ஏரியில் உள்ள பொதுக் கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதானைக்காக அனுப்பி வைத்தனர். மேற்படி மாணவி தானாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசீனார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இறந்த ஜனனியின் உறவினர்கள் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ேடார் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் குறித்து அவர்கள் கூறியதாவது:- பள்ளிக்கு சென்ற ஜனனி பள்ளி சீருடையுடன் கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கை ேபாலீசார் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இந்த சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
    • இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் வக்கீல் புதுத்தெரு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தர். திலகர் திடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்

    மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் அருகே பிணத்துடன் சாலையில் அமர்ந்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
    • பேச்சுவார்த்தைக்கு பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே பத்தி ராதரவை மேற்கு தெருவை சேர்ந்தவர் பனைத் தொழி லாளி முனியசாமி (65). கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் போது எதிர்பாராமல் தவறி விழுந்து காயமடைந்தார். அதனால் அவருக்கு ஏற் பட்ட உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

    பத்திராதரவையில் அவரை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அப் பகுதியில் வாக்குவாதம் ஏற்பட்டது. முதியவரின் சடலத்துடன் அவரது உறவினர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டக்குழுவின் ஒருங் கிணைப்பாளரான இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலையில் இரு தரப்பி னரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அதனை தொடர்ந்து அரசு புறம் போக்கு இடத்தை தாசில்தார் பழனிக்குமார் ஒதுக்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரச்சினைக்கு தீர்வாக சுடுகாட்டிற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் புதைத்துக் கொள்ளலாம். இனி வரும் காலங்களில் தகன மேடை மற்றும் காம்பவுண்டு சுவர், சாலை வசதி அமைத்து தரப்படும், என்றார்.

    போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு தாசில்தார் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் நடந்தது. திருப்புல்லாணி சப்- இன்ஸ்பெக்டர் கர்த்திகை ராஜா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜபாளையத்தில் புதுப்பெண் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • மோட்டார் சைக்கிள் கேட்டு துன்புறுத்தியதால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்த வர் பொன்னன். இவரது மகள் லட்சுமி (வயது 24).

    இவருக்கும் ராஜபாளை யம் தெற்கு தேவதானம் கீழ மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சிவநேசன் என்பவருக்கும் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சனை யாக கொடுக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக சிவநேசன் தனக்கு மோட்டார் சைக்கிள் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி லட்சுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோரின் குடும்ப சூழ்நிலையால் ேமாட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என லட்சுமி மறுத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து சம்பவத்தன்று லட்சுமி தனது தந்தை பொன்னையா விடம் செல்போனில் கூறி யுள்ளார். அப்போது அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் லட்சுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த நிலையில் சேத்தூர் போலீசில் பொன்னன் புகார் அளித்துள்ளார். அதில் எனது மகள் லட்சமி சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து லட்சமி வரதட்சணை பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேலூர் அருகே தொழிலாளியை கொன்று கிணற்றில் பிணம் வீசப்பட்டது.
    • பிணமாக கிடந்தவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பனங்காடி கிராமத்தில் உள்ள வட்டக்கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிணற்றில் மிதந்த வாலிபரை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பிணமாக கிடந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது51) என தெரியவந்தது. தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

    கடந்த 3 நாட்களாக மாயமாகி இருந்த மணிகண்டன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள் ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த சொரத்தூரில் முந்திரி தோப்புஒன்றில் பெண்பிணம் ஒன்றுஅழுகியநிலையில் கிடப்பதாக முத்தாண்டி குப்பம் போலீசாருக்குதகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தாண்டி குப்பம்போலீசார்அழுகிய நிலையில் கிடந்த பெண்பிணத்தை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை செய்தனர்.

    விசாரணையில்அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததுநெய்வேலிமாற்றுகுடியிருப்பு"ஏ"பிளாக்கை சேர்ந்த குப்புசாமி மனைவிசின்னபொண்ணு(80), என்பது தெரிய வந்தது .இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனது தெரியவந்தது. இவரது மகன்சூடாமணி நேரில் வந்து பார்த்து தாயின் உடலைஅடையாளம் காட்டியுள்ளார். சின்ன பொண்ணு தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வயது முதிர்வு காரணமாக மயங்கி விழு ந்து இறந்தாரா என்பது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் சின்னாபின்னமானது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது நரசிங்கம்பட்டி. இங்குள்ள நான்கு வழிச்சாலையில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் சின்னாபின்னமாகி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மேலூர் போலீஸ் நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப் பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு சாலையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்ட னர். அந்த வாலிபர் நேற்று நள்ளிரவு அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் மோதி இறந்திருக்கிறார். அந்த இடம் இருட்டாக இருந்ததால் அவ்வழியாக சென்ற மற்ற வாகனங்களும் வாலிபரின் உடல் மீது ஏறி சென்றுள்ளது.

    இதில் அந்த வாலிபரின் உடல் அடையாளம் தெரி யாத அளவுக்கு சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கி றது. அந்த வாலிபர் யார்? அவர் மீது மோதிய வாகனம் எது? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்தில் தான் அந்த வாலிபர் இறந்தாரா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் கொன்று சாலையில் வீசி சென்றார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo