என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம்,
நெல்லிக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
- நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது.
- அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்
கடலூர்:
நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். இது குறித்து முள்ளிகிராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீசார் சென்றனர். அங்கு இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? போன்றவைகள் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






