என் மலர்
நீங்கள் தேடியது "autopsy"
- இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை.
- இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு வெளியே சடலத்தின் கால்களை பிடித்து 2 ஆண்கள் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் என்று கூறப்படும் 2 நபர்கள் சடலத்தின் கால்களில் துணியால் கட்டிக்கொண்டு பிரேதப் பரிசோதனை கூடத்திற்குள் நுழைகிறார்கள்.
இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
आपका कलेजा फट जाएगा, इंसानियत शर्मसार हो जाएगी! वायरल वीडियो झांसी के पोस्टमार्टम हाउस की बतायी जा रही है। देखिए कैसे एक डेड बॉडी को अस्पताल के कर्मचारी जमीन पर घसीटते ले जा रहे हैं। इन पर तो सख्त कार्रवाई होनी चाहिए#Jhansi@jmdnewsflash @Manchh_Official pic.twitter.com/ukn2Xdeyym
— Amit Singh (@amit3_singh) January 6, 2025
- பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட சிறுமியின் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது
- இடைப்பட்ட காலத்தில் டெல்லியை ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது
இன்ஸ்டாகிராமில் காதலித்தவரை திருமணம் செய்துகொள்வதற்காகப் பெற்ற மகளை தாய் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடமேற்கு டெல்லியின் அசோக் விஹாரில் 5 வயது மகளை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட சிறுமியின் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குழந்தையின் தாய் உட்பட உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ச்சியான விசாரணைக்குப் பிறகு, தாய் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதை போலீசிடம் ஒப்புக்கொண்டார். ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த பெண் கணவன் கைவிட்டு சென்ற நிலையில் 5 வயது மகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் டெல்லியை ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராகுலை திருமணம் செய்து கொள்ள விரும்பிய அவர் டெல்லிக்கு மகளுடன் இடம் பெயர்ந்தார். ஆனால், ராகுலும் அவரது குடும்பமும் அந்த பெண்ணின் குழந்தையை ஏற்க மறுத்துள்ளனர்.
எனவே திருமணத்துக்குத் தடையாக இருந்த தனது 5 வயது மகளை அந்த பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்ககள் தெரிவித்தனர்.
- இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவமனையில் இறந்து போன ஒருவரின் இடதுபக்க கண் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 14 அன்று பன்டூஷ் என்ற நபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 15 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது இடது கண் காணாமல் போனதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை பிளேடு ஒன்று சடலத்துக்கு அருகில் இருந்ததாக உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி, பன்டூஷ் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக பேசிய நாளந்தா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் வினோத் குமார், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது அவர் கண்ணை வெளியே எடுத்திருப்பார்களோ அல்லது எலி கண்ணை கடித்ததா என்ற 2 கோணத்தில் விசாரித்து வருகிறோம். இது இரண்டில் எது நடந்திருந்தாலும் அது தவறு தான். விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
- பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.
கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.
- புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர்.
- அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் ரியாஸ் (வயது 26), யாசின் (32), சராபுதீன் (28) ஆகியோர் காரில் புதுவைக்கு வந்தனர். இந்த காரினை யாசின் ஓட்டி வந்துள்ளார். புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர். புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் மொளசூர் இடையன்குளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் சென்ற ரியாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். யாசின், சராபுதீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிளியனூர் போலீசார் விரைந்து வந்தனர். ரியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியசாமி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை விருத்தாசலத்தில் இருந்து சொந்த ஊரான வி.அலம்பலம் கிராமத்திற்கு செல்ல நைனார்பாளையம் கிராமம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை.
- ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர்.
கடலூர்:
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் ராஜதுரை (வயது 28). என்ஜீனியரிங் பட்டதாரி. இவர் வடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டி குரல் கொடுத்தனர். இருந்தபோதும் அவர் வெளியில் வரவில்லை. இது குறித்து தனியார் விடுதி ஊழியர்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.
அவரை தேடியபோது குளியலறைக்குள் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதயைடுத்து வடலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளிக்கும் போது திடீர் மாரடைப்பால் இறந்தாரா? என்பது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடலூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது.
- அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்
கடலூர்:
நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். இது குறித்து முள்ளிகிராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீசார் சென்றனர். அங்கு இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? போன்றவைகள் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இவர் பண்ருட்டி பேக்கரி ஒன்றில் வேலை செய்துவந்தார்.
- இவர் உடல்நிலை,குடும்ப சூழ்நிலை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் லைன் 7-வது தெருவை சேர்ந்தவர் வாசு பிரசாத் (வயது55). இவர் பண்ருட்டி பேக்கரி ஒன்றில் வேலை செய்துவந்தார். இவர் உடல்நிலை,குடும்ப சூழ்நிலை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கவியரசனும், ராம்குமாரும் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் உள்ள பாரில் மது அருந்தியுள்ளனர்.
- 5 பேருடன் ஏரியிலேயே பள்ளம் தோண்டி ராம்கு மார் புதைத்து விடுவது போலீசாருக்கு தெரிய வருகிறது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி வெங்க டேஸ்வரா நகரைச் சேர்ந்த வர் கவியரசன் (வயது 26). இவர் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில், ஆவுடை யார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நண்பர் ராம்குமார் (வயது 20) என்பவருடன் கவியரசன் சென்றது தெரிய வந்தது. ராம்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, கடந்த அக்டோபர் 2-ந் தேதி கவியரசனும், ராம்குமாரும் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் உள்ள பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ராம்குமாரை கவியரசன் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அக்டோபர் 5-ந் தேதி ஆவுடையார்பட்டு ஏரியில் அமர்ந்து ராம்குமார் அவரது நண்பர்கள் 7 பேருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது கவியரசனுக்கு போன் செய்து, நாம் சமாதானமாக சென்று விடலாம் என்று நைசாக பேசி ஏரிக்கு வர வழைத்துள்ளார். கவியர சனுக்கு மது வாங்கி கொடுத்து, அவருக்கு போதை ஏறியபின்பு ராம்குமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கவியரசனை தாக்கியு ள்ளனர். இதில் மயங்கி விழும் கவியரசன் இறந்து விடுகிறார். இதனை மறைக்க தனது நண்பர்கள் 5 பேருடன் ஏரியிலேயே பள்ளம் தோண்டி ராம்கு மார் புதைத்து விடுவது போலீசாருக்கு தெரிய வரு கிறது.
இதையடுத்து கவியரசன் உடலை மீட்பதற்காக ராம்கு மாரை ஆவுடையார்பட்டு ஏரிக்கு போலீசார் நேற்று அழைத்து சென்றனர். ஏரியின் மையப்பகுதியில் உள்ள முட்புதர் அருகே கவியரசனை புதைத்ததாக ராம்குமார் கூறினார். தொடர் மழையால் ஏரி நிரம்பி இருந்ததால், விக்கிரவாண்டி போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். தீயணைப்பு வீரர்களுடன் இணைந்த அந்து ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஏரியின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்றனர். அங்கு கவியரசனை புதைத்த இடத்தை அடையாளம் கண்டனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இ்ன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகவலறிந்த விக்கிர வாண்டி வட்டாட்சியர் இளவரசன், ஏரியில் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் வட்டாட்சியர் இளவரசன் முன்னிலையில் புதைக்க ப்பட்ட இடத்திலிருந்து கவியரசன் உடலை தோண்டி எடுத்து அங்கேேய அமைக்கப்பட்ட தற்காலிக கூடத்தில் முண்டியம்பா க்கம் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், ராம்குமார் உட்பட 3 பேரை கைது செய்துள்ள விக்கிர வாண்டி போலீசார். தலை மறை வாகியுள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
- புதர் ஒன்றில், அழுகிய நிலையில், எலும்புக் கூடாக ஆண் நபரின் சடலம் கிடந்தது.
- உடலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நிரவி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட, கருக்களாச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள தனியார் இறால் பண்ணை மற்றும் அக்கரை வட்டம் சுடுகாட்டுக்கு இடையே உள்ள புதர் ஒன்றில், அழுகிய நிலையில், எலும்புக் கூடாக 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நபரின் சடலம் கிடந்தது. இது குறித்து ஜெகதீசன் என்பவர் நிரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அழுகிய நிலையில் கிடந்த எலும்புக்கூடுகள் மற்றும் நீல நிற ஆடை மற்றும் உடைகளை கைப்பற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த நபர் குறித்து விவரம் தெரியாததால், அண்மையில் 45 முதல் 50 வரை வயது வரையி லான காணாமல் போன வர்களின் விவரம் தெரிந்தவர்கள்,உடல் மற்றும் உடை, காலனி மற்றும் பொருட்களைக் கண்டு அடையாளம் கூற வேண்டுகிறோம். என இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி அழைப்பு விடுத்து ள்ளார்.
- பெரியகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இர்வீன் பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர்.
- இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மாணவன் லிதர்சனை தேடினர்.
தஞ்சாவூர்:
சென்னை போரூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் லிதர்ஷன் (வயது 21). இவரது நண்பர் முகப்பேரைச் சேர்ந்த நிதின் (21). இவர்கள் இருவரும் சென்னையிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் தஞ்சாவூரைச் சுற்றிப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் பெரியகோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இர்வீன் பாலம் அருகே கல்லணைக் கால்வாயில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் லிதர்ஷன் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த நண்பர் நிதின் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் லிதர்சனை காப்பாற்ற முயன்றார். ஆனால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிதர்ஷனை காணவில்லை.
இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் குதித்து லிதர்சனை தேடி வந்தனர். இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணியை நிறுத்தினர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மாணவன் லிதர்சனை தேடினர். அப்போது தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி பகுதியில் உள்ள நெய் வாய்க்காலில் லிதர்சன் உடல் பிணமாக மிதந்து சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் லிதர்சன் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் அவரது பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியது.