என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "autopsy"

    • லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகள் வெளியாகி வருகின்றன.
    • எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அந்த நேரத்தில் நியூயார்க் நகர முதன்மை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக அறிவித்தது.

    ஆனால் அது தற்கொலையா என்பது குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

    எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    எனவே எப்ஸ்டீன் உண்மையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வழக்கில் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அவற்றை மறைக்க கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் மீண்டும் பரவலாக எழுந்துள்ளது.

    இந்நிலையில் பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் 'தி டெலிகிராப்' இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், எப்ஸ்டீனின் மரணம் தூக்கு போட்டதால் நிகழ்ந்ததுபோல் தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

    எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன என்று கூறிய அவர், தனது 50 ஆண்டுகால மருத்துவப் பணியில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட எவருடைய கழுத்திலும் இதுபோன்று மூன்று முறிவுகளைத் தான் பார்த்ததே இல்லை என்று பேடன் கூறியுள்ளார்.

    தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா சாம்சன், பிரேதப் பரிசோதனையை நேரில் பார்க்காமலேயே இது தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகப் பேடன் குற்றம் சாட்டியுள்ளார்.

    2023-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், எப்ஸ்டீன் இருந்த சிறையில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை உறுதிப்படுத்தியது. அவரது அறையில் வழக்கமான சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    எப்ஸ்டீனின் வழக்கறிஞர்களும் இந்த அதிகாரப்பூர்வ பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றனர்.  

    • பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம்.
    • நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும்.

    விபத்து, இரத்தம், கொலை, தற்கொலை... இதுபோன்ற சம்பவங்கள் பெண்கள், ஆண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரின் மனநிலையையுமே சற்று பாதிக்கும். அதிலும் சில பெண்களுக்கு சொல்லவே வேண்டாம்... இதுபோன்ற சம்பவங்களை கடந்துவர மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இதையெல்லாம் ஆராய்வதையே தொழிலாக கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதுபோன்ற துறைகளில் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே இருக்கும் சூழலில், தடயவியல் பிரேத பரிசோதனை அறுவை சிகிச்சை நிபுணராக தைரியத்துடன் பணியாற்றிவரும் இளம்பெண் மருத்துவரான நிவ்யாழினி, அண்மையில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். 

    அதில் பிரேத பரிசோதனை செய்யும் போது தாங்கள் எதிர்கொள்ளும் தயக்கங்கள், அருவருப்பு, முக சுளிப்புகள், பிரேத பரிசோதனையின் போது எதிர்கொள்ளும் சவால்கள், கொலையுண்டவருக்கு எதிர்தரப்பிலிருந்து வரும் கொலைமிரட்டல்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பகிர்ந்துள்ளார் மருத்துவர் நிவ்யாழினி. தனக்கு இதுவரை கொலைமிரட்டல்கள் எதுவும் வந்ததில்லை எனவும், ஆனால் தன்னுடன் பணியாற்றிய சிலருக்கு பிரேத பரிசோதனை அறிக்கை தகவலை மாற்ற சொல்லி கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொலைக்கும், உயிரை மாய்த்துக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள், சந்தேக மரண வழக்குகளில் அவை கொலை என எப்படி உறுதிப்படுத்துகிறார்கள் உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்தார். மேலும் 8 மாத குழந்தை ஒன்றின் கொலை பற்றியும் பேசியிருந்தார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு முன், உடல்களை எப்படி கையாள்வது குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.


    நிகழ்ச்சி ஒன்றில் நிவ்யாழினி

    பிரேத பரிசோதனை என்றால்? என்ன செய்வீர்கள்?

    தற்கொலை செய்து உயிரிழந்த உடல் ஒன்று வருகிறது என்றால், முதலில் ஃபோட்டோ எடுப்போம். அனைத்து பக்கங்களில் இருந்தும் எடுப்போம். முதலில் ஆடையுடனும், பின்னர் ஆடைகளை நீக்கிவிட்டும் அந்த புகைப்படங்களை எடுப்போம். பின்னர் கழுத்தில் மார்க் இருக்கிறது என்றால் அதனை ஆராய்வோம். உடல் உறுப்புகள் அனைத்தையும் வெளியே எடுத்துவிட்டு ஆராய்வோம். எப்படி என்றால், கழுத்திலிருந்து தொப்புளுக்கு முன்புவரை கத்தியால் கிழித்து, உறுப்புகளை ஒவ்வொன்றாக வெளியே எடுப்போம். பின்னர் அந்த உறுப்புகளை கழுவி, அதனை வெட்டி ஆராய்ச்சி செய்வோம். இதயம், நுரையீரல், கிட்னி என அனைத்து உறுப்புகளையும் ஆராய்வோம். பின்னர் அந்த உறுப்புகள் அனைத்தையும் ஒரு கவரில் போட்டு, உடலுக்குள் வைத்து தைத்து, உடலை முழுமையாக கொடுத்துவிடுவோம். உறுப்புகளை ஆராய்ச்சி செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரின் இறப்பு இயற்கையானதா? கொலையா? தற்கொலையா? என கண்டுபிடிப்போம். 

    முதல்முதலில் நீங்கள் பார்த்த கேஸ் எது? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

    நான் முதலில் பார்த்த கேஸ், ஹேங்கிங்தான். முதல் அனுபவம் சற்று சிரமமாகத்தான் இருந்தது. அதிலும், ஸ்மெல்தான் எனக்கு கஷ்டமாக இருந்தது. வயிற்று பகுதியை ஆராயும்போது, அவர் இறுதியாக என்ன சாப்பிட்டார் என்று தெரிந்துகொள்ள, அதனை முகர்ந்து பார்க்க வேண்டும். முதலில் கஷ்டமாக இருந்தாலும், பிறகு பழகிவிட்டது. அது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலல்லவா... தைரியமாக அனைத்தையும் பழகிக்கொண்டேன். ஒரு விஷயத்தை நான் இங்கு உங்களிடம் சொல்கிறேன், பிரேத பரிசோதனை அறையில் கைகளுக்கு நாங்கள் க்ளவுஸ் போட்டுக்கொள்வோமே தவிர, முகத்தில் மாஸ்க் அணியமாட்டோம். அதனால், நீரில் மூழ்கி உயிரிழந்து அழுகிய உடல்கள் வரும்போது, அதனை பரிசோதிப்பது சிரமமாக இருக்கும். 

    எப்படி இவ்வளவு தைரியம்?

    நான் ஏற்கனவே சொன்னதைப்போல ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது. கொலையானவர்களின் உறவினர்கள் அழும்போது அதனை பார்க்கும்போது கவலையாக இருக்கும். முதலில் எல்லாம், யுவனின் ஒரு பாடலை கேட்டுவிட்டுதான் நான் உடல்களை பரிசோனை செய்ய அறைக்குள் செல்வேன். இப்போது நிறைய கேஸ்களை பார்த்துவிட்டேன்.

    இந்த துறைக்கு செல்ல குடும்பத்தினர் எப்படி ஒப்புக்கொண்டார்கள்?

    பொதுவாக எல்லாவற்றுக்குமே எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். நாம்தான் அதனை சரியாக செய்து நம்மை நிரூபிக்க வேண்டும்.  இந்த துறையில் எனக்குத் தெரிந்து பெண்கள் மிகவும் திறமையாக செயலாற்றுகிறார்கள். பெண்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. 

    • சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

    மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    ஏப்ரல் 18, 2024 அன்று கக்னர் சமூக சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் மாதத்தில் மருத்துவமனை ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்தச் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

    சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட பில்லாலா நள்ளிரவில் பிரேதப் பரிசோதனை மையத்திற்குள் நுழைந்து, சடலத்தை ஸ்ட்ரெச்சரில் இருந்து இழுத்து, கேமராவின் பார்வையில் படாத ஒரு மூலைக்குக் கொண்டு சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு சடலத்தை மீண்டும் ஸ்ட்ரெச்சருக்கு அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

    இந்தக் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

    இந்நிலையில் மருத்துவ அதிகாரி டாக்டர் ஆதியா தாவர் என்பவர் October 7, 2025,கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலேஷ் பில்லாலாவை கைது செய்து செய்தனர்.

    அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

    • அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.
    • ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    அவரது உடல் சொந்த மாநிலமான அசாமுக்கு கொண்டுவரப்பட்டு தலைநகர் கவுகாத்தியில் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மறுபுறம் கார்க்கின் மரணம் குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. இதனால் ஜூபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று தெரிவித்தார்.

    மேலும் அவரது உடலுக்கு 2 வது முறையாக பிரேத பரிசோதனை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    சிங்கப்பூரில் நடந்த முதல் பிரேதப் பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவர்களால் இந்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஹிமாந்தா தெரிவித்தார்.

    கார்க்கின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 முதல் 10 மணிக்குள் சருசஜாய் மைதானத்தில் இருந்து இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

    மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இறுதிச் சடங்கில் பங்கேற்பார்.

    சிஐடி போலீசார் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்கும். இச்சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹந்தா மற்றும் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கவியரசனும், ராம்குமாரும் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் உள்ள பாரில் மது அருந்தியுள்ளனர்.
    • 5 பேருடன் ஏரியிலேயே பள்ளம் தோண்டி ராம்கு மார் புதைத்து விடுவது போலீசாருக்கு தெரிய வருகிறது.

    விழுப்புரம்: 

    விக்கிரவாண்டி வெங்க டேஸ்வரா நகரைச் சேர்ந்த வர் கவியரசன் (வயது 26). இவர் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் தீவிர விசாரணையில், ஆவுடை யார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நண்பர் ராம்குமார் (வயது 20) என்பவருடன் கவியரசன் சென்றது தெரிய வந்தது. ராம்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, கடந்த அக்டோபர் 2-ந் தேதி கவியரசனும், ராம்குமாரும் விக்கிரவாண்டி பஸ் நிலையம் அருகில் உள்ள பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ராம்குமாரை கவியரசன் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அக்டோபர் 5-ந் தேதி ஆவுடையார்பட்டு ஏரியில் அமர்ந்து ராம்குமார் அவரது நண்பர்கள் 7 பேருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது கவியரசனுக்கு போன் செய்து, நாம் சமாதானமாக சென்று விடலாம் என்று நைசாக பேசி ஏரிக்கு வர வழைத்துள்ளார். கவியர சனுக்கு மது வாங்கி கொடுத்து, அவருக்கு போதை ஏறியபின்பு ராம்குமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கவியரசனை தாக்கியு ள்ளனர். இதில் மயங்கி விழும் கவியரசன் இறந்து விடுகிறார். இதனை மறைக்க தனது நண்பர்கள் 5 பேருடன் ஏரியிலேயே பள்ளம் தோண்டி ராம்கு மார் புதைத்து விடுவது போலீசாருக்கு தெரிய வரு கிறது.

    இதையடுத்து கவியரசன் உடலை மீட்பதற்காக ராம்கு மாரை ஆவுடையார்பட்டு ஏரிக்கு போலீசார் நேற்று அழைத்து சென்றனர். ஏரியின் மையப்பகுதியில் உள்ள முட்புதர் அருகே கவியரசனை புதைத்ததாக ராம்குமார் கூறினார். தொடர் மழையால் ஏரி நிரம்பி இருந்ததால், விக்கிரவாண்டி போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். தீயணைப்பு வீரர்களுடன் இணைந்த அந்து ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் ஏரியின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்றனர். அங்கு கவியரசனை புதைத்த இடத்தை அடையாளம் கண்டனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இ்ன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இத்தகவலறிந்த விக்கிர வாண்டி வட்டாட்சியர் இளவரசன், ஏரியில் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் வட்டாட்சியர் இளவரசன் முன்னிலையில் புதைக்க ப்பட்ட இடத்திலிருந்து கவியரசன் உடலை தோண்டி எடுத்து அங்கேேய அமைக்கப்பட்ட தற்காலிக கூடத்தில் முண்டியம்பா க்கம் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், ராம்குமார் உட்பட 3 பேரை கைது செய்துள்ள விக்கிர வாண்டி போலீசார். தலை மறை வாகியுள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

    • இவர் பண்ருட்டி பேக்கரி ஒன்றில் வேலை செய்துவந்தார்.
    • இவர் உடல்நிலை,குடும்ப சூழ்நிலை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் லைன் 7-வது தெருவை சேர்ந்தவர் வாசு பிரசாத் (வயது55). இவர் பண்ருட்டி பேக்கரி ஒன்றில் வேலை செய்துவந்தார். இவர் உடல்நிலை,குடும்ப சூழ்நிலை காரணமாக தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார்

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் ரோட்டியில் தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தின் வேலி அருகில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது. அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். இது குறித்து முள்ளிகிராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நெல்லிக்குப்பம் போலீசார் சென்றனர். அங்கு இறந்து கிடந்த 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? போன்றவைகள் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை.
    • ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர்.

    கடலூர்:

    தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் ராஜதுரை (வயது 28). என்ஜீனியரிங் பட்டதாரி. இவர் வடலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஷேர் மார்க்கெட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை வெகுநேரமாகியும் விடுதி அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டி குரல் கொடுத்தனர். இருந்தபோதும் அவர் வெளியில் வரவில்லை. இது குறித்து தனியார் விடுதி ஊழியர்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவரை காணவில்லை.

    அவரை தேடியபோது குளியலறைக்குள் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதயைடுத்து வடலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குளிக்கும் போது திடீர் மாரடைப்பால் இறந்தாரா? என்பது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வடலூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெரியசாமி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை விருத்தாசலத்தில் இருந்து சொந்த ஊரான வி.அலம்பலம் கிராமத்திற்கு செல்ல நைனார்பாளையம் கிராமம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர்.
    • அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் ரியாஸ் (வயது 26), யாசின் (32), சராபுதீன் (28) ஆகியோர் காரில் புதுவைக்கு வந்தனர். இந்த காரினை யாசின் ஓட்டி வந்துள்ளார். புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர். புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் மொளசூர் இடையன்குளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் சென்ற ரியாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். யாசின், சராபுதீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிளியனூர் போலீசார் விரைந்து வந்தனர். ரியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்ககள் தெரிவித்தனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாளந்தா மருத்துவமனையில் இறந்து போன ஒருவரின் இடதுபக்க கண் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நவம்பர் 14 அன்று பன்டூஷ் என்ற நபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாளந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 15 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு அவர் உயிரிழந்தார்.

    இதனையடுத்து நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது இடது கண் காணாமல் போனதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை பிளேடு ஒன்று சடலத்துக்கு அருகில் இருந்ததாக உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

    உயிரிழந்தவரின் கண்ணை எலி கடித்திருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக கூறி, பன்டூஷ் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.

    இது தொடர்பாக பேசிய நாளந்தா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் வினோத் குமார், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாராவது அவர் கண்ணை வெளியே எடுத்திருப்பார்களோ அல்லது எலி கண்ணை கடித்ததா என்ற 2 கோணத்தில் விசாரித்து வருகிறோம். இது இரண்டில் எது நடந்திருந்தாலும் அது தவறு தான். விசாரணைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×