search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "victim"

    • படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • 12 வயது சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபை நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுகள் வெடித்தன.

    இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    யொகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஊழியரான அவர், அந்த சபையின் நடவடிக்கைகள் பிடிக்காமல் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் அவர் மட்டுமே திட்டமிட்டு குண்டு வெடிப்பை நிகழ்த்திய விவரம் தெரிய வந்தது. குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

    இருந்தபோதிலும் அவர்களில் 12 வயது சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் களமச்ஆசேரி குண்டு வெடிப்பில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார்.

    தொடுபுழா அருகே உள்ள கொடிக்குளம் வண்டமட்டம் பகுதியை சேர்ந்த லில்லி ஜான் (வயது71) என்ற அந்த பெண், கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சாட்சிகள் அமைப்பின் பிரார்த்தனை கூட்டத்தில் தனது கணவர் ஜானுடன் பங்கேற்றார்.

    அப்போது நடந்த குண்டுவெடிப்பில் லில்லி, ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான அவரது கணவர் ஜான் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஜான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    லில்லி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவரும் பரிதாபமாக இறந்துவிட்டார். கணவன்-மனைவி இருவரும் இறந்து விட்டதால் அவர்களது குடும்பத்தினர் கவலைய டைந்தனர். லில்லி இறந்ததை யடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    • சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
    • கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 7 மணி அளவில் ஒரு மினி ஆட்டோ வந்து கொண்டிருந்தது. மினி ஆட்டோவை விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சுதர்சன் மற்றும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாசம் ஆகியோரும் வந்தனர்.

    சேலம்-சென்னை புறவழிச் சாலையில் வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மினி ஆட்டோ வந்தபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் மினி ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் பிரவீன்குமார், சுதர்சன் மற்றும் பிரகாசம் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அங்கிருந்த சுங்கச்சாவடி பணியாளர்களுடன் சேர்ந்து கிரேன் எந்திரத்தை பயன்படுத்தி 3 பேர் உடலையும் மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் டிரைவரான நெல்லையை சேர்ந்த பேச்சிமுத்து பாண்டியன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கரி, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மினி ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • நரிக்குடி- திருச்சுழி பகுதிகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
    • மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பட்ட மங்கலம் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன். இவரது மகன் மாயாண்டி (வயது 30). இவர்கள் தற்போது குடும்பத்துடன் மானா மதுரையில் வசித்து வருகிறார். இவர் மாயாண்டி பார்த்திபனூரில் உள்ள ஹோட்டலில் பணி புரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை வீரசோழன் அருகேயுள்ள பாதனக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற கோவில் திரு விழாவிற்கு மாயாண்டி தனது டூவீலரில் சென்றார். அப்போது மானாச்சாலை அருகேயுள்ள சீனிக்கார னேந்தல் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள வளைவில் வந்த போது அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மாயாண்டி மீது மோதியதில் கால் முறிந்து படுகாயமடைந் தார்.

    இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மாயாண் டியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மாணிக்கனேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராசு என்பவரது மகன் பாண்டி முருகன் (வயது 24). இவர் காரியாபட்டி அருகேயுள்ள எஸ். தோப்பூர் பகுதியிலுள்ள தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊரான மாணிக்கனேந்தல் கிராமத்திற்கு திரும்பிய நிலையில் திருச்சுழி- காரியாபட்டி சாலையில் தனது டூவீலரில் வந்து கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது புலிக்குறிச்சி அருகே மூலக்கரைப்பட்டி சந்திப்பு பகுதியில் வந்த போது அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் பாண்டிமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த பாண்டிமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானுமாமலை சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் வானுமாமலை ( வயது 30). கூலித்தொழிலாளி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் மீது தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, வானுமாமலையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானுமாமலை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சுவிட்சை தொட்ட பொழுது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து ள்ளார்.
    • வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    கடலூர்:

    வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதுஅடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது .கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், லால்பேட்டை, வேப்பூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடும் வெயிலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு ெபாதுமக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    வானமாதேவி - 32.0, குப்பநத்தம் - 31.0,குறிஞ்சிப்பாடி - 30, வடக்குத்து - 30,அண்ணாமலைநகர் - 26.4,விருத்தாசலம் - 26.0, பரங்கிப்பேட்டை - 22.8, கடலூர் - 21,கொத்தவாச்சேரி - 21, பண்ருட்டி - 20, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 18, கலெக்டர் அலுவலகம் - 17.2, லக்கூர் - 15.4,. காட்டுமயிலூர் - 15,காட்டுமன்னார்கோவில் - 14.3, புவனகிரி - 14, மீ-மாத்தூர் - 14, சிதம்பரம் - 11, வேப்பூர் - 10,தொழுதூர் - 8.5, சேத்தியாதோப்பு - 8, லால்பேட்டை - 8, பெல்லாந்துறை - 6.2,கீழ்செருவாய் - 4. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 423.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர்.
    • அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது. இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகரில் விவசாயி வீரப்பன் (62) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மாலை மிளகாய் அறுவடை செய்யும் பணியில் 12 பெண்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    குடிசை சரிந்து விழுந்தது

    இதையடுத்து விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர். அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது.

    இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பெண் பலி

    இந்த விபத்தில் சுமதி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாதம்மாள் (65), லட்சுமி (55), ராணி (50), கலா, மணி (39), சாலம்மாள் (55) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் போலீசார் இறந்த சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை

    படுகாயம் அடைந்த வர்களில் மாதம்மாள் என்ப வர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மீன்பிடி தொழில் செய்து வரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
    • சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால்மேடு சிங்காரவேலர் வீதியைச்சேர்ந்தவர் சரவணன். மீன்பிடி தொழில் செய்துவரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு யோஹனா(12), சஞ்சுஸ்ரீ(9), சஞ்சனா(7), சாய் (5) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இரவு சஞ்சனா மற்றும் சாய் ஆகிய இருவரும், வழக்கம் போல், வாசல் இரும்பு கேட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சுவர் இடிந்து இரும்பு கேட்டுடன் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை மற்றும் உறவினர்கள், சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர். மேல் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இதில், சஞ்சனா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சாய் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்.
    • மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அதிவேகமாக வந்த கார்

    அப்போது அந்தப் பகு

    தியில் உள்ள ஒரு பெட்ரோல்

    பங்கில் பெட்ரோல் போடு வதற்காக திரும்பியபோது பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த கார் ரத்தினம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரத்தினம் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தினம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கைது

    இதுகுறித்து ரத்தினத்தின் மனைவி வசந்தி(54) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு அருகே ஆலாங்குறைகாடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கார் மோதி தூக்கி வீசியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 63 ) விவசாய கூலி தொழிலாளி இவர் நேற்று சைக்கிளில் அரசூர் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை மாமந்தூர் வருவதற்காக. அரசூர் வங்கி எதிரே சைக்கிளை தள்ளி கொண்டு ரோட்டை கடக்கும் போது திருச்சியில் இருந்து சென்னை சென்ற கார் மோதி தூக்கி வீசிதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை திருவெண்ணை நல்லூர் போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயராமன் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்

    • இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.
    • ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வீரமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் சின்னமணி (வயது 32), சென்னையில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றார். அப்போது இரவு இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.

    அவருடன் வந்த நண்பர்கள் சிறிது நேரம் கழித்து உடன் வந்த சின்னமணியை காணவில்லை என தேடினர். இத்தகவல் உறவினர்களுக்கு தெரிந்து அவர்களும் ஏரி பகுதிக்கு வந்து தேடினர். அவர் கிடைக்காததால் இதுகுறித்து கெடார் போலிசாருக்கும். அன்னியூர்தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். கெடார் போலிசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காணாமல் போனவர் ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.

    இதில் ஏரி நீரில் மூழ்கி இறந்து கடந்த சின்னமணியின் உடலை இன்று காலை 8 மணியளவில் தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர். அதனை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனுஷ் தயாநிதி சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் சிவசிவா நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் தனுஷ் தயாநிதி (வயது 22). இவர் சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு அருகில் ராம்நாத் என்பவரின் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.அப்போது அந்த இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த மின்மோட்டாரை தனுஷ் தயாநிதி நிறுத்த சென்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து தனுஷ் தயாநிதியின் தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×