என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிஷோர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- மோர்பாளையம், தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). இவரது மகன் கிஷோர் (19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பக்ரீத் பண்டிகை விடுமுறைக்காக கிஷோர் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை கிஷோர், தனது பாட்டியை வைகுந்தத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் பெத்தாம்பட்டி கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.
மோர்பாளையம், தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், கிஷோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்