என் மலர்
நீங்கள் தேடியது "student"
- சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி, கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர்.
செய்துங்கநல்லூர்:
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.
நெற்றிப்பட்டயம்
இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் நடந்து வருகிறது.
சி சைட் என அழைக்கப்படும் பகுதியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழியில் தங்கத்தால் ஆன 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே முதுமக்கள் தாழியில் வெண்கலத்தால் ஆன ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜாடியில் அலங்காரமாக சுற்றி ஐந்து இடத்தில் ஜாடியின் மேல் கொக்கு, வாத்து பறவைகள் நீர் அருந்துவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலெட்சுமி, கல்லூரி முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் 2-ம் ஆண்டு மாணவிகள் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையை பார்வையிட வந்தனர். சிவகளையில் தொல்லியல் இயக்குனர் பிரபாகரன், இணை இயக்குனர் விக்டர் ஞானராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
பின்னர் அவர்கள் ஆதிச்சநல்லூரில் தங்கம் கிடைத்த குழி, தங்க நெற்றி பட்டயம் மற்றும் வெண்கல பொருள்கள் கிடைத்த குழியை பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், தொல்லியல் ஆய்வாளர் யத்தீஸ் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதன் பின் ஆர்வத்தோடு கல்லூரி மாணவர்கள் ஆய்வாளர்களுடன் குழு படம் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏ.பி.சி. மகாலெட்சுமி கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் சுப்புலெட்சுமி, உதவி பேராசிரியர் புஷ்பக வல்லி, வரலாற்று துறை தலைவர் சங்கீதா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கந்தசுப்பு, வரலாற்றுதுறை ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் மற்றும் ஆய்வாளர் யத்தீஸ்குமார் மற்றும் தொல்லியல் குழுவினரை பாராட்டியுள்ளார்.
தொல்லியல் ஆர்வலர்கள் சார்பிலும் ஆய்வாளர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை தாங்கினார். முனைவர் கந்தசுப்பு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாளால் வெட்டினர்.
- இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
கருப்பாயூரணி நொண்டி கோவில் தெரு மூர்த்தி மகன் பரத்வஜன் (வயது 23). இவர் சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் காளவாசலை சேர்ந்த ஷீபா என்பவருக்கும் திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பரத்வஜன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பரத்வஜன் ஆண்டார் கொட்டாரம் மலைப்பகுதிக்கு வந்தார். அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டினர்.
இதில் பரத்வஜனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கருப்பா யூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே பிளஸ்-1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த நன்னிகுப்பத்தை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது மகள் சுகப்பிரியா (வயது 16). இவர், உளுந்தூ ர்பேட்டையில் உள்ள தனியார்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சுகப்பிரியா 2 நாள் விடுமுறையாக கடந்த 6-ந் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் இவரது தாயாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகமன உளைச்சலில் இருந்த இவர் வீட்டில் தூக்குபோட்டுக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டி யம் பாக்கம் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செஸ் போட்டி: 3ம் இடம் பிடித்த மதுரை மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
- கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
மேலூர்
தமிழக அரசின்பள்ளி கல்வித்துறை சார்பில் 44-வது சதுரங்க ஒலிம்பி யாட்-2022 மாநில அளவிலான சதுரங்க போட்டி சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இப் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மற்றும் 2 இடங்களை பிடித்த 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு விளை யாடினர். மொத்தம் 6 சுற்றுகள் கொண்டதாக போட்டி நடைபெற்றது.
இப்போட்டியின் முடிவில் மதுரை மேலூர் ஒன்றியம், அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி அ.சோலையம்மாள் 5 சுற்றுகளில் வெற்றி பெற்று, 3-ம் இடம் பெற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகுமார், இணை இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் பதக்கமும், சான்றிதழும், ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கினர்.
ஏற்கனவே மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பிரதீப், தேவ்நாத், .கலைச்செல்வி ஆகிய 3 பேர் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டு வெளிநாட்டு வீரர்களை அழைத்து வந்து அறிமுகம் செய்யும் வாய்ப்பும், விமானத்தில் செல்லும் வாய்ப்பும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரடியாக காணும் வாய்ப்பும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர், மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மேலூர் வட்டார கல்வி அலுவலர்கள் மீனா, குளோரி, அ.வல்லா ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியை மணிமேகலை, இம்மாணவிக்கு சதுரங்க பயிற்சி அளித்தவரும், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமான செந்தில்குமார், அ.வல்லா ளப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், சேர்மன் குமரன், உதவித் தலைமை ஆசிரியர்
வாசிமலை, உடற்கல்வி ஆசிரியர்கள் சேதுபதி ராஜா, அறிவரசன், கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- சின்னசேலம் அருகே 6-ம் வகுப்பு மாணவி மாயமானார்.
- அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தில் தனது மகளை தேடினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 39) விவசாயி. அவரது மகள் பொன்னி (வயது14) இவர் புக்கிரவாரி யில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி இரவு வழக்கம் போல் இரவு வீட்டில் தூங்கினார். அதிகாலை 3:30 மணி அளவில் அவருடைய தந்தை அய்யப்பன் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை. இதனால். அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் அக்கம் பக்கத்தில் தனது மகளை தேடினார். இதனால் சந்தேகம் அடைந்த அய்யப்பன் கீழ்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி பொன்னி என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.
- முதலிடம் பிடித்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கௌசிகா, இராண்டாமிடம் பிடித்த ஹரிணி ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
வேதாரண்யம் :
வேதாரண்யம்அடுத்த ஆயக்காரன்புலம் பெ ண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்சென்னை மாமல்லபுரத்தில் நடை பெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைபள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் கெளசிகா, ஹரிணி சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.
மாணவி கெளசிகாவை தமிழக அரசு சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் இலவசமாக அழைத்து சென்று மீண்டும் சென்னை போட்டியில் பங்குபெறச் செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததனர்.
இதில் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் 19 வயதுக்கு ட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்ற ஆயக்காரன்புலம் அரசு பெண்கள்மேல்நி லைப்பள்ளி மாணவி கௌசிகா இராண்டாம் இடம்பெற்ற ஹரிணி ஆகியோ ருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது .பள்ளி தலைமை ஆசிய ர்ஸ்டெல்லாஜேனட் தலை மையில் நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு சால்வை, திருக்குறள் நூல்பரிசளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை யாசிரியர் பரஞ்ஜோதி, ஆசிரியர் சிலம்புசெல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் பொற்றோர்கள் கலந்துகொண்டனர்.
- மதுரையில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை மதிச்சியத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. எனவே அவரை பெற்றோர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போதுஅவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், மதுரை தல்லாகுளம் அனைத்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் இது தொடர்பாக மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் மாணவியும், மேளக்காரர் தெருவை சேர்ந்த பாபு மகன் வசந்தகுமார் (வயது 19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், அவரது வீட்டிற்கு மாணவி சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது.
இது தொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி செல்வதாக காலை வீட்டை விட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
- இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள ஆய் கவுண்டம் பாளையத்தில் தறி தொழிலாளியாக வேலை செய்து வருபவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்து வருகிறார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி செல்வதாக காலை வீட்டை விட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. இவரது தாய் மற்றும் தந்தை உறவினர்கள், நண்பர்கள் வீடு மற்றும் பல இடங்களில் தேடி பார்த்தும் மகள் கிடைக்காததால் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்.
- சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள காப்பரத்தாம் பட்டி. கணபதி நகர் பகுதியை சேந்தவர் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பாலியானர்.
- இவர் கே ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள காப்பரத்தாம் பட்டி .கணபதி நகர் பகுதியை சேந்தவர் வேல்முருகன்.
இவருடைய மகன் சுதர்சன கிருஷ்ணன் (வயது 16). இவர் கே ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.
இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பிற்கு சென்ற மாணவர் மதியம் பள்ளியின் அருகில் உள்ள ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்த கிணற்றில் இறங்கி குளித்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சுதர்சன கிருஷ்ணன் கிணற்றில் மூழ்கி பலியானான். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து மாணவன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 4 மாயமாகினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அரசு மருத்துவமனை நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 19 வயதுடைய மாணவி நேற்று பிற்பகலில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவியின் தோழிகள் செல்போனில் தொடர்பு கொண்டபோது தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுல்தான் அலாவுதீன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்
சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் ஜக்கம்மாள்புரம் ஆகாஷ் நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது 22 வயது மகள் சம்பவத்தன்று மாயமானார்.
இவர் ராயகிரி ஆவுடையா புரத்தை சேர்ந்த குமார் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மகள் மாயமானது குறித்து கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் மாயம்
சிவகாசி டி.கான்சா புரத்தை சேர்ந்தவர் மாணவி அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு செல்போன் மூலம் தேனி சின்னமனூரை சேர்ந்த பிரதீப் என்பவர் பழக்க மானார்.
நாளடைவில் இவர்க ளுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி சம்பவத்தன்று மாயானார். உடனே அவரது தந்தை தேனிக்கு சென்று போலீஸ் உதவியுடன் தனது மகளை மீட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அந்த மாணவி மீண்டும் மாயமானார். இதுகுறித்து மாரனேரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மகனுடன் இளம்பெண்
ராஜபாளையம் தொம்ப குளத்தை சேர்ந்தவர் பெரு மாள். இவரது மகள் நிகிதா தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தனது மகனுடன் நிகிதா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை கீழராஜகுலராமன் போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் அருகே 12-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டுள்ளார்.
- சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மாணவி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரில், சமிட்டிக்குப்பம் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது மகளை பெண் கேட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியில் சென்ற எனது மகளை சுரேஷ் கடத்தி சென்று இருக்கலாம் என புகார் அளித்ததன் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- டெல்லியில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
- விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
உடுமலை :
வருகிற 15 ந் தேதி டெல்லியில் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதை யொட்டி அணிவகுப்பை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் .இந்த சுதந்திர தின விழா அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு உடுமலை ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் தேசிய மாணவர் படை மாணவி ஆர்.அபர்ணா மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளரான இந்த கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியரான தேசிய மாணவர் படை அலுவலர் பி.கற்பகவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் காருண்யா பல்கலைக்கழகத்தில் பயிற்சி முடித்து இன்று கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகின்றனர்.
இவர்கள் இருவரையும் உடுமலை ஸ்ரீ. ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி செயலாளர் சுமதிகிருஷ்ணபிரசாத், இயக்குனர் ஜெ.மஞ்சுளா, முதல்வர் என்.ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியைகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.