search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "graduation ceremony"

    • கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
    • பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 75 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலை க்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூ ரியில் மாணவ ர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    அண்ணா பல்கலை க்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்க ல்வித்துறை அமைச்சரும், அண்ணா பல்கலை க்கழகத்தின் இணை வேந்தருமான பொன்முடி பட்டு க்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 3 அண்ணா பல்கலைக்கழக பொறியி யல் கல்லூரியை சேர்ந்த 333 மாணவ- மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

    முன்பெல்லாம் இன்ஜினியரிங் படிப்ப தற்கு நுழைவு தேர்வு கட்டாயமா க்கப்ப ட்டிருந்தது. இதனால் கிராமப்புற இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கஷ்டப்பட்டு வந்த நிலையை கருத்தில் கொண்டு நுழைவு தேர்வை கலைஞர் ரத்து செய்தார். இதன் மூலம் பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 25,000 இருந்து 75 ஆயிரம் ஆக உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
    • விழாவில், 596 மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டங்கள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    கல்லூரியின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கி னார். செயலாளர் சி.சங்கர நாராயணன், தாளாளர் கே.ஆர்.அருணாசலம், தொழிலதிபர் சி.ராமசாமி, இயக்குநர் எஸ்.சண்முக வேல் மற்றும் முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தி கல்லூரியின் சிறப்பு அம்சங்களை விவரித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா சிறப்புரை நிகழ்த்தினார்.

    சிறப்பு விருந்தினர் பட்ட தாரிகளை வாழ்த்தி தனது உரையை துவங்கினார், அவர் தமது உரையில் பட்ட தாரிகள் பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவை பெறவேண்டும் என்றும் அவற்றின் முக்கி யத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.

    மாணவ தொழில்முனை வோர்கள் நிதி ஆயோக் போன்ற அரசாங்க திட்டத்தின் மூலம் நிதி ஆதரவை பெற்று சிறந்த தொழில்முனைவோராக வேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவில் தனித்துவமான, புதுமை யான தயாரிப்புகளை உரு வாக்க வேண்டும் என்றும், நன்கு வரையறுக்கப்பட்ட வணிகத் திட்டங்களே வெற்றிக்கான பாதைகளாக அமையும் என்றும் அறிவுறுத்திக் கூறினார்.

    விழாவில், 596 மாணவர்க ளுக்கு இளநிலை பொறியியல் பட்டங்களையும், 24 மாணவர்களுக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களை யும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

    மேலும், பட்டம் பெற்றவர்களில் 41 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், பட்டதாரி கள் அனைவரும் பட்ட மளிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரி யர் ஏ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரது வழிகாட்டு தலின்படி ஒருங்கிணைப்பா ளர்கள் பேராசிரியர் டி.வெங்கட்குமார், உதவிப் பேராசிரியர் எ.ஆண்ட்ரூஸ், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விளா அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

    முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன் கல்லூரியின் சாதனைகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பற்றி விரிவாக எடுத்து ரைத்தார். இதில் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் க.ரவி, முன்னாள் துணை வேந்தர் சொ.சுப்பையா,பூமி குழுமம் தலைவர் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தினர்.

    சோகோ இந்தியா நிறு வன தலைவர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாண வர்களை காணொலி காட்சி மூலம் வாழ்த்தினார்.இந்த பட்ட மளிப்பு விழாவில் மொத்த மாக 465 மாணவர்கள், 379 மாணவி கள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற்றனர். 16 பேர் பல்கலைக்கழக அள வில் ரேங்க் எடுத்து தங்க பதக்கம் பெற்றனர்.

    இக்கல்லூரியானது பிற்பட்ட கிராமப்புற இளை யோர் நலம் கருதி, கடந்த 2016-ம் ஆண்டு 40 என்ற எண்ணிக்கையில் இளங் கலை (கணிதம், கணினி யியல், வணிகப் பயன் பாட்டியல், தகவல் தொழில் நுட்பம்) ஆகிய பாடப் பிரிவுடன் ஆரம்பிக்கப் பட்டது.

    இன்று இளங்கலையில் 19 பிரிவுகளும், முதுகலை யில் 7 பிரிவுகளும் ஆய்வுப் பிரிவு கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகி யவை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பன்முகத் திறனுடன் மாநில அளவி லும், மாவட்ட அளவிலும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற னர். மேலும் மாவட்ட கலெக்டர், மாநில முதல்- அமைச்சர்கள், அமைச்சர் கள், துணை வேந்தர்கள், பல்வேறு ஆளுமை களிட மும் பொற் கரங்களால் பண முடிப்பு களையும், விருதுகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

    பட்டமளிப்பு விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேம மாலினி சுவாமிநாதன். முன்னாள் எம். எல். ஏ. எச்.ராஜா, நகர்மன்ற தலைவர் சே.முத்துதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • 16 பேர் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெறுகின்றனர்

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் கலை யரங்கில் நடைபெறுகிறது.

    இதில் சிறப்பு விருந்தினர் களாக சோகோ நிறுவனத் தலைவர் பத்ம ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, பூமி குழுமம் பன்னாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெய்குமார், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    விழாவில் 465 மாண வர்கள்,379 மாணவிகள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற உள்ளார்கள்.இதில் 16 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று தங்கப் பதக்கம் பெற இருக்கிறார்கள்.பிற்பட்ட கிராமப்புற இளையோர் நலன் கருதி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இன்று இளங் கலையில் 19 பிரிவு களும், முதுகலையில் 7 பிரிவுகளும் உள்பட ஆய்வுப்பிரிவு, கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகியவையுடன் சிறப்பாக கல்வி பணியாற்றி வருகிறது.

    பட்டமளிப்பு விழா விற்கான ஏற்பாடுகளை பள்ளிக்குழு தலைவர் கிருஷ்ணன்,முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் சுவாமிநாதன்,பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • செக்கானூரணி அரசு ஐ.டி.ஐ.யில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • கோச்சடை ஜெ.கே பென்னர் இந்தியா லிமிடெட் செல்வன் தினேஷ் டேவிட்சன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021- 23-ம் வருடம் வரை தொழிற்பயிற்சிகள் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா செக்கானூரணியில் நடைபெற்றது. விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அசோகன் தலைமை வகித்தார். மண்டல பயிற்சி இணை இயக்குநர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். உடற்பயிற்சி அலுவலர் செல்வராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோச்சடை ஜெ.கே பென்னர் இந்தியா லிமிடெட் செல்வன் தினேஷ் டேவிட்சன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் மாவட்டத் திறன் அலுவலக உதவி இயக்குநர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ஜெயா, அரசு கள்ளர் கல்லூரி விடுதி காப்பாளர் சிவக்குமார், சாய் பர்னிச்சர் உரிமையாளர் தனசேகரன், பயிற்சி அலுவலர் குபேந்திரன், அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், லோகோ பைலட் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

    • லதா மாதவன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முடிவில் துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.

    மேலூர்

    அழகர் கோவில் அருகே கிடாரிப்பட்டிலுள்ள லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடந்தது. சேர்மன் டாக்டர் டத்தோ மாதவன் தலைமை தாங்கி னார். இதில் டாஃபே நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் மணி கண்டன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முருகன் வர வேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சரவணன் கலந்து கொண்டு மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    கல்லூரி முதல்வர்கள் வரத விஜயன், தவமணி, அனிதா, டீன் ஹேமலதா செயல் அலுவலர்கள் முத்துமணி மீனாட்சி சுந்தரம், காந்தி நாதன், பி.ஆர்.ஓ. பிரபாகரன் துறை தலைவர்கள், பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • விழாவில் மொத்தம் 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
    • அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் .

    சென்னை:

    வி.ஐ.டி சென்னையில் வருடாந்திர பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமையில்

    துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் முனைவர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர் ராம் பாபு கோடாலி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் கலந்து கொண்டு 33 மாணவ- மாணவிகளுக்கு தங்க பதக்கங்களை வழங்கினார். விழாவில் மொத்தம் 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் பேசுகையில், பட்டமளிப்பு விழா என்றென்றும் மாணவர் வாழ்வில் மறக்க முடியாத நாளாகவும், ஒரு வரலாற்று நிகழ்வாகவும் திகழும். பிரதமர் மோடியின் விருப்பப்படி இளைஞர்கள் வேலை தேடுவதை விட வேலை வாய்ப்பினை உருவாக்கி பலருக்கு வேலை அளிக்க வேண்டும்.

    மாணவர்கள் சிந்தனைகளில் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். கவனச்சிதறல்களுக்கு மத்தியில் நல்லொழுக்கப் பாதையைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக வால்மார்ட் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் (இந்தியா) பாலு சதுர்வே துலா கலந்து கொண்டார்.

    முன்னதாக வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் முனைவர் கோ.விசுவநாதன், சிறப்பு விருந்தினர் கவர்னர் இல.கணேசன் ஆகியோர் சுவாமி விவேகானந்தா மாணவர் விடுதி கட்டிடம் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி வளாகக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், வி.ஐ.டி. வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாக ராஜன், வி.ஐ.டி. வேலூர் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக், வி.ஐ.டி பதிவாளர் டி.ஜெய பாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2022-23ல் பட்டம் முடித்த மாணவர்கள் சுமார் 80ஆயிரம் பேரும் பட்டம் பெறாமல் இருந்து வருகின்றனர்.
    • பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

    கோவை,

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2020-21 கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டது.

    அதன்பின் 2021-22-ம் கல்வியாண்டிற்கான பட்ட மளிப்பு விழா நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பட்டம் முடித்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் பலர் வெளிநாடுகளில் உயர் கல்வியை தொடர முடியாமலும், பிற பல்கலைக்கழகத்தில் சேர முடியாமலும் வேலை வாய்ப்புகளில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாமலும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதுதவிர 2022-23ல் பட்டம் முடித்த மாணவர்கள் சுமார் 80ஆயிரம் பேரும் பட்டம் பெறாமல் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. அதன்படி பல்கலைக்கழகம் சார்பில் வருகிற 24-ந் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 2021-2022 மற்றும் 2022-23 ஆகிய 2 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கும், பட்டங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம்.
    • மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 2010 முதல் 2017 வரை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

    கல்லூரி இயக்குனர் உதயசங்கர் வரவேற்றார். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற 626 பேருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

    விழாவில் பேசிய கல்லூரி இயக்குனர் உதயசங்கர், முதலமைச்சர் ரங்கசாமியால்தான் இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டது. அவரது கையால்தான் பட்டமளிப்பு விழா நடக்க வேண்டும் என இறைவனின் ஆசி இருந்துள்ளது என்றார்.

    அடுத்து முதுநிலை மருத்துவ மாணவி மணிமொழி பேசும்போது, நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரில் 3 பேர் பெண்கள். 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம். இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி தான் காரணம் என்றார். இவர்களின் பேச்சை கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி, உணர்ச்சி வசப்பட்டு வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார். இதைப்பார்த்து மேடையில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

    புதுவையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளே இருந்தது. மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார். இதற்கு பல தடைகளும், முட்டுக்கட்டைகளும் எழுந்தது.

    ஒரு கட்டத்தில் மருத்துவ கல்லூரியை மாநில அரசு கைவிடும் நிலைக்கு சென்றது. இதனையெல்லாம் தாண்டியே இந்த கல்லூரி திறக்கப்பட்டது. இதன் நினைவாகவே முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

    • தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை டாக்டர் ராகேஷ் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
    • கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி தலைமையில், பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை டாக்டர் ராகேஷ் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    செயற்கை நுண்ணறிவு

    புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது. எதிர்காலத்தில் மருத்துவ துறையிலும் செயற்கை நுண்ணறி வின் தாக்கம் இருக்கும். எனவே செவிலி யர்களும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு அறிவை வளர்த்து கொ ள்ள வேண்டும். செவிலியர்கள் எப்போதும் மனித நேயத்துடனும், சேவை மனப்பான்மை யுடனும் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உறுதிமொழி ஏற்பு

    பின்னர் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி தலைமையில், பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்கப்பட்டன.

    விழுப்புரம்:

    இந்திய தேசத்தின் 76-வது சுதந்திர தின ஆண்டிணை முன்னிட்டு யூனிவர்சிட்டி ஆப் நியூ ஜெருசலம் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் இஸ்ரேல் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்க ப்பட்டன. இவர்களில் கண்டமங்கலம் ஒன்றியம் வாணியம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை சரசு கல்விப்பணி, சமூகப்பணி, மற்றும் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஆற்றிய மனித நேயப் பணி இவற்றினை பாராட்டி சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை மாநிலம் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. விவிலியம் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் , சென்னை நீதிமன்ற நோட்டரி வக்கீல் தண்டபாணி , ரவிச்சந்திரன் , தேவமூர்த்தி இயக்குனர் அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்கள்

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். முதல்வர் சதக்கத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வியின் மேன்மையையும்,முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டு சமூக சிந்தனையுடன் கூடிய அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டும். அனைவரும் சமுதாயத்தில் நற்குடிமகன்களாகவும் நமது நாட்டின் பெருமை பண்பாடு சமூக நெறி மற்றும் பாரம்பரியத்தை காக்க உறுதி கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் சதக்கத்துல்லா பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அதனை பின் மொழிந்தனர்.பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது. இதில் 926 இளங்கலை மாணவ,மாணவிகளுக்கு 70 முதுகலை மாணவ,மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் செய்திருந்தனர்.விழாவிற்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், முகமது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் சர்மிளா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×