என் மலர்

    நீங்கள் தேடியது "graduation ceremony"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லதா மாதவன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முடிவில் துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.

    மேலூர்

    அழகர் கோவில் அருகே கிடாரிப்பட்டிலுள்ள லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடந்தது. சேர்மன் டாக்டர் டத்தோ மாதவன் தலைமை தாங்கி னார். இதில் டாஃபே நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் மணி கண்டன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முருகன் வர வேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சரவணன் கலந்து கொண்டு மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    கல்லூரி முதல்வர்கள் வரத விஜயன், தவமணி, அனிதா, டீன் ஹேமலதா செயல் அலுவலர்கள் முத்துமணி மீனாட்சி சுந்தரம், காந்தி நாதன், பி.ஆர்.ஓ. பிரபாகரன் துறை தலைவர்கள், பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழாவில் மொத்தம் 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
    • அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் .

    சென்னை:

    வி.ஐ.டி சென்னையில் வருடாந்திர பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமையில்

    துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் முனைவர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர் ராம் பாபு கோடாலி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் கலந்து கொண்டு 33 மாணவ- மாணவிகளுக்கு தங்க பதக்கங்களை வழங்கினார். விழாவில் மொத்தம் 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் பேசுகையில், பட்டமளிப்பு விழா என்றென்றும் மாணவர் வாழ்வில் மறக்க முடியாத நாளாகவும், ஒரு வரலாற்று நிகழ்வாகவும் திகழும். பிரதமர் மோடியின் விருப்பப்படி இளைஞர்கள் வேலை தேடுவதை விட வேலை வாய்ப்பினை உருவாக்கி பலருக்கு வேலை அளிக்க வேண்டும்.

    மாணவர்கள் சிந்தனைகளில் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். கவனச்சிதறல்களுக்கு மத்தியில் நல்லொழுக்கப் பாதையைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக வால்மார்ட் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் (இந்தியா) பாலு சதுர்வே துலா கலந்து கொண்டார்.

    முன்னதாக வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் முனைவர் கோ.விசுவநாதன், சிறப்பு விருந்தினர் கவர்னர் இல.கணேசன் ஆகியோர் சுவாமி விவேகானந்தா மாணவர் விடுதி கட்டிடம் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி வளாகக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், வி.ஐ.டி. வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாக ராஜன், வி.ஐ.டி. வேலூர் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக், வி.ஐ.டி பதிவாளர் டி.ஜெய பாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2022-23ல் பட்டம் முடித்த மாணவர்கள் சுமார் 80ஆயிரம் பேரும் பட்டம் பெறாமல் இருந்து வருகின்றனர்.
    • பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

    கோவை,

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2020-21 கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டது.

    அதன்பின் 2021-22-ம் கல்வியாண்டிற்கான பட்ட மளிப்பு விழா நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பட்டம் முடித்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் பலர் வெளிநாடுகளில் உயர் கல்வியை தொடர முடியாமலும், பிற பல்கலைக்கழகத்தில் சேர முடியாமலும் வேலை வாய்ப்புகளில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாமலும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதுதவிர 2022-23ல் பட்டம் முடித்த மாணவர்கள் சுமார் 80ஆயிரம் பேரும் பட்டம் பெறாமல் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. அதன்படி பல்கலைக்கழகம் சார்பில் வருகிற 24-ந் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 2021-2022 மற்றும் 2022-23 ஆகிய 2 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கும், பட்டங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம்.
    • மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 2010 முதல் 2017 வரை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

    கல்லூரி இயக்குனர் உதயசங்கர் வரவேற்றார். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற 626 பேருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

    விழாவில் பேசிய கல்லூரி இயக்குனர் உதயசங்கர், முதலமைச்சர் ரங்கசாமியால்தான் இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டது. அவரது கையால்தான் பட்டமளிப்பு விழா நடக்க வேண்டும் என இறைவனின் ஆசி இருந்துள்ளது என்றார்.

    அடுத்து முதுநிலை மருத்துவ மாணவி மணிமொழி பேசும்போது, நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரில் 3 பேர் பெண்கள். 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம். இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி தான் காரணம் என்றார். இவர்களின் பேச்சை கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி, உணர்ச்சி வசப்பட்டு வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார். இதைப்பார்த்து மேடையில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

    புதுவையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளே இருந்தது. மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார். இதற்கு பல தடைகளும், முட்டுக்கட்டைகளும் எழுந்தது.

    ஒரு கட்டத்தில் மருத்துவ கல்லூரியை மாநில அரசு கைவிடும் நிலைக்கு சென்றது. இதனையெல்லாம் தாண்டியே இந்த கல்லூரி திறக்கப்பட்டது. இதன் நினைவாகவே முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை டாக்டர் ராகேஷ் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
    • கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி தலைமையில், பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பொது அறுவை சிகிச்சை டாக்டர் ராகேஷ் பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 35 மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    செயற்கை நுண்ணறிவு

    புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது. எதிர்காலத்தில் மருத்துவ துறையிலும் செயற்கை நுண்ணறி வின் தாக்கம் இருக்கும். எனவே செவிலி யர்களும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு அறிவை வளர்த்து கொ ள்ள வேண்டும். செவிலியர்கள் எப்போதும் மனித நேயத்துடனும், சேவை மனப்பான்மை யுடனும் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உறுதிமொழி ஏற்பு

    பின்னர் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி தலைமையில், பட்டம் பெற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்கப்பட்டன.

    விழுப்புரம்:

    இந்திய தேசத்தின் 76-வது சுதந்திர தின ஆண்டிணை முன்னிட்டு யூனிவர்சிட்டி ஆப் நியூ ஜெருசலம் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் இஸ்ரேல் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்க ப்பட்டன. இவர்களில் கண்டமங்கலம் ஒன்றியம் வாணியம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை சரசு கல்விப்பணி, சமூகப்பணி, மற்றும் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஆற்றிய மனித நேயப் பணி இவற்றினை பாராட்டி சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை மாநிலம் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. விவிலியம் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் , சென்னை நீதிமன்ற நோட்டரி வக்கீல் தண்டபாணி , ரவிச்சந்திரன் , தேவமூர்த்தி இயக்குனர் அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குநர் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகிம் முன்னிலை வகித்தார். முதல்வர் சதக்கத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர், ரவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெறும் பட்டதாரிகள் தாங்கள் கற்ற கல்வியின் மேன்மையையும்,முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டு சமூக சிந்தனையுடன் கூடிய அறிவுத்திறனுடன் செயல்பட வேண்டும். அனைவரும் சமுதாயத்தில் நற்குடிமகன்களாகவும் நமது நாட்டின் பெருமை பண்பாடு சமூக நெறி மற்றும் பாரம்பரியத்தை காக்க உறுதி கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல்திட்ட அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் சதக்கத்துல்லா பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசிக்க பட்டதாரிகள் அதனை பின் மொழிந்தனர்.பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்களும், பட்டங்களும் வழங்கப்பட்டது. இதில் 926 இளங்கலை மாணவ,மாணவிகளுக்கு 70 முதுகலை மாணவ,மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களும் செய்திருந்தனர்.விழாவிற்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், முகமது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் சர்மிளா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்னை பாத்திமா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.
    • வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை என்று பேசினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுவை மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு 2020-21, 2021-22-ம் கல்வியாண்டில் படித்த

    600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:-

    கல்லூரிகளில் நான் வைக்கும் கோரிக்கை நன்றாக படியுங்கள். அதிக மாக புத்தகங்களை படியுங்கள் என்பதுதான். வரலாற்று புத்தகம், நல்ல புத்தகங்களை தேடி தேடி படியுங்கள். புத்தகங்களை படிக்க படிக்கத்தான் வாழ்க்கை முறை தெளிவாகும். வீட்டி லும், வேலை நேரத்திலும் புத்தகங்களை படியுங்கள்.

    தற்போது இந்தியாவை சேர்ந்த திறமை வாய்ந்தவர்கள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க பிரதமர் இன்று புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறார். வேறொரு மொழியை கற்றுக்கொண்டால் மிழ் மொழியில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பலமொழிகள் கற்கும் பொழுதுதான் தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று தெரியும். பாரதி பல மொழிகளை கற்றுக் கொண்டுதான் தமிழ் உயர்ந்தது என்று சொன்னார்.

    நானும் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன். எதையுமே அரசியல் ஆக்காமல் ஒரு திட்டம் வந்தால் அதை அலசி ஆராய்ந்து நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வரவேற்கும் நிலை உங்களி டம் இருக்க வேண்டும்.

    வாய்ப்புகள் அதிகம் வர வேண்டும் என்றால் பிற மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை. பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் மகிழ்ச்சியை மட்டும் தொலைத்து விடாதீர்கள். மாணவ செல்வங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

    யோகா பயிற்சியை தினமும் செய்தால் இன்று வாங்கிய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெறலாம். யோகா செய்தால் மனம் ஒருநிலைப்படும். யோகா செய்யாத நாள் இன்றோடு கடைசி நாளாக இருக்கட்டும். நாளை முதல் சின்ன சின்ன யோகாவை செய்ய முயற்சியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேராசிரியர் ராம.சீனிவாசன் பங்கேற்றனர். கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, தலைமை அதிகாரி, செயலாளர் ஷகிலா ஷா முன்னிலை வகித்தனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தபசுகண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    முடிவில் முதல்வர் வெண்ணிலா நன்றி கூறினார். முன்னாள் முதல்வர் நவராஜ் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    மதுரை

    மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் எம்.எஸ்.ஷா , தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் வெண்ணிலா ஆகியோர் பேசுகிறார்கள்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். பேராசிரியர் ராம சீனிவசான் சிறப்புரை யாற்றுகிறார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழாவை பள்ளி பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • சிவப்பிரியா மாதேஸ்வரனும் பரிசுகளை வழங்கினர், முடிவில் பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'பிரோடிகி அவார்டு -2023' என்ற பெயரில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவை பள்ளி பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றி  தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் வி.பொன்ராஜை வாழ்த்தி வரவேற்றுப்பேசினார். விழாவில் மழலையர் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் நடனம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி செயலாளர் ராமசாமி–மாதேஸ்வரனும், துணை செயலாளர் சிவப்பிரியா- மாதேஸ்வரனும் பரிசுகளை வழங்கினர். முடிவில் பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp