என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shifa hospital"

    • ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் பட்டமளிப்பு விழா நடை பெற்றது.
    • விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனையின் 52-வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

    இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, 52-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.

    முதல் பிரதியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். விழாவில் தொழில் அதிபர் எம்.கே.எம். முகம்மது நாகிப், எம்.கே.எம். முகம்மது நாசர், அகமது கபீர், நெல்லை லாட்ஜ் நிக்மத்துல்லா, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மருத்து வர்கள் முருகன், அழகேசன், கிரிஷ் தீபக், அகமது யூசுப், முகம்மது இப்ராஹீம், முகம்மது கனி, ஜியாவுல்லாஹ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவமனை மற்றும் ஷிபா கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

    • பேரணியானது கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கியது.
    • தலைகாய முதலுதவி சிகிச்சை முறைகளை பற்றி மருத்துவர் ஷியாவுல்லா விளக்கினார்.

    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக தலைகாய விழிப் புணர்வு வாகன பேரணி இன்று நடைபெற்றது. கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு ஷிபா மருத்துவமனைகள் மருத்துவ இயக்குநர் டாக்டர் முஹம்மது அராபத் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுப்பிரமணியன், முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பாளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியானது வண்ணார்பேட்டை, சமாதானபுரம் வழி யாக மேட்டுத்திடல் முஸ்லீம் அனாதை நிலைய வளாகத்தில் நிறை வடைந்தது. நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், சதக்அப்துல்லா கல்லூரி மாணவ-மாணவிகள், மருந்து விற்பனை பிரதிநிதி சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் தலைகாய முதலுதவி சிகிச்சை முறைகளை பற்றி ஷிபா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஷியாவுல்லா விளக்கினார்.

    உலக தலைகாய தின சிறப்பு செய்தியினை மருத்துவமனையின் மூளை நரம்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ், நரம்பியல் நிபுணர் டாக்டர் அழகேசன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக எம்.கே.எம். செய்யது அஹமது கபீர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மார்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

    • நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
    • முகாமில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

    நெல்லை:

    பாளை-சீவலப்பேரி ரோட்டில் அமைந்துள்ள ஷிம்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நெஞ்சக நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமில் ஷிபா மருத்துவமனையின் நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் நெஞ்சக நோய் கண்டறியும் பி.எப்.டி. பரிசோதனை கள் இலவசமாக செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹாஜி முகம்மது ஷாபி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கே.டி.சி. நகர், சாந்திநகர், திம்மராஜபுரம், கீழப்பாட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • விழாவிற்கு ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவ மனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் நெல்லை கிளை சார்பில் ஷிபா மருத்துவமனையில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவமனை யின் பங்குதாரர் ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் பிரேம சந்திரன் கலந்து கொண்டு செவிலியர் தின சிறப்பு செய்தி வழங்கினார்.

    இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சுப்பிர மணியன், செயலாளர் டாக்டர் முகம்மது இப்ராஹிம், பொருளாளர் டாக்டர் பிரபுராஜ், மருத்துவமனை தலைமை செவிலியர் ஜெமிமா, ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீதார ண்யா மற்றும் மருத்துவ மனை எலும்பு மூட்டு மருத்துவர் அகமது யூசுப் ஆகியோர் செவிலியர் தின வாழ்த்து செய்தி வழங்கினர்.

    ஷிபா மருத்துவ மனையின் செவிலியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவ மனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

    உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு ஷிபா மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    நெல்லை:

    உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை சார்பில் தைராய்டு நோய்க்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் தைராய்டு சுரப்பி குறைபாடுகள், முன் கழுத்தில் வீக்கம் மற்றும் கட்டி, தைராய்டு புற்று நோய், உடல் பருமன் அல்லது மெலிதல், படபடப்பு, கை நடுக்கம், தூக்கமின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், நகம் உடைதல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

    முகாமில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தைராய்டு பரிசோதனைகளை எடுத்துக் கொண்டனர். 

    முகாமில் தைராய்டு நோயியல் சிறப்பு மருத்துவர்கள் அருண் விஸ்வநாத், ராகேஷ் சந்துரு, ஸ்டேன்லி ஜேம்ஸ் ஆகியோர்  இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர். 

    சிறப்பு முகாமிற்கு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முகம்மது ஷாபி அனைத்து ஒருங்கிணைப்புகளும் செய்திருந்தார்.

    பரிசோதனையில் தைராய்டு அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு  முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் அதிநவீன முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் இந்த முகாமில்  ரூ.800 க்கு தைராய்டு நோய் கண்டறியும் பரிசோதனைகள் ரூ.300 க்கு செய்யப்பட்டது.
    நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின வாகன கையெழுத்து இயக்க பிரசாரம் தொடங்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின வாகன கையெழுத்து இயக்க பிரசாரம் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.  கையெழுத்து பிரசார நிகழ்ச்சியை போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    புற்றுநோய் மருத்துவர்கள் தெய்வநாயகம், முகம்மது இப்ராகிம் புகையிலை எதிர்ப்பு தின செய்தியை பற்றி கூறினர்.

    நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனையின் டாக்டர்கள் அகம்மது யூசுப்,  பாலா, ஸ்டேன்லி ஜேம்ஸ் மற்றும் செவிலியர்கள், ஷிபா பாராமெடிக்கல் கல்லூரியின் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஷிபா மருத்துவ மனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது அரபாத் நன்றி கூறினார்.
    ×