search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nurses Day"

    • விழாவிற்கு ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவ மனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் நெல்லை கிளை சார்பில் ஷிபா மருத்துவமனையில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவமனை யின் பங்குதாரர் ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் பிரேம சந்திரன் கலந்து கொண்டு செவிலியர் தின சிறப்பு செய்தி வழங்கினார்.

    இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சுப்பிர மணியன், செயலாளர் டாக்டர் முகம்மது இப்ராஹிம், பொருளாளர் டாக்டர் பிரபுராஜ், மருத்துவமனை தலைமை செவிலியர் ஜெமிமா, ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீதார ண்யா மற்றும் மருத்துவ மனை எலும்பு மூட்டு மருத்துவர் அகமது யூசுப் ஆகியோர் செவிலியர் தின வாழ்த்து செய்தி வழங்கினர்.

    ஷிபா மருத்துவ மனையின் செவிலியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவ மனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

    • மதுரையில் இன்று செவிலியர் தின பேரணி நடந்தது.
    • கல்லூரி மாணவிகள் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மதுரை

    இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கில் என்பவர் 1900 ஆம் ஆண்டு கால கட்டத்தில் போர் முனையில் காயமடைந்த வீரர்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு இடையே சேவையாற்றினார்.

    அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அவரது சேவையை நினைவு கூறும் வகையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ந் தேதி உலக செவிலியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

    மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் பேரணியை தொடங்கி வைத்தார்.மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய பேரணி கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் ஆஸ்பத்திரியை வந்தடைந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். பேரணியில் சேவை குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாடு செவிலியர் சங்க மாநில செயலாளர் திலகவதி, மாவட்ட தலைவர் ஜெயசத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் செல்வராஜன், பொருளாளர் நாகலட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி முடிந்த பின் செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×