என் மலர்
நீங்கள் தேடியது "rally"
- பாஜக-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்.
- காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
வாக்கு மோசடிக்கு எதிராக டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நமது அரசியலமைப்பை அழிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு செய்தியை அனுப்ப டிசம்பர் 14 அன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் 'வோட் சோர் காடி சோட்' என்ற பிரமாண்ட பேரணியை காங்கிரஸ் நடத்தும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
மேலும், "போலி வாக்காளர்களைச் சேர்ப்பது, எதிர்க்கட்சிகளுக்குச் சார்பான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மாற்றங்களைச் செய்வது போன்ற பாஜக-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேரணி நடத்துவது என்று முன்னதாக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கொல்கத்தா:
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள மந்திரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பா.ஜ.க. கண்டிப்பாக யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.
- பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
- அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின் நினைவு தினத்தை முன்னிட்டு பலுசிஸ்தான் தேசிய கட்சி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
பேரணி முடிந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது, மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பேரணியில் கலந்து கொண்ட அத்தாவுல்லா மெங்கல்-லின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- அவற்றில் சுபம் என்பவருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
- இந்த விஷயம் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17- ந் தேதி முதல் செப்டம்பர் 1 வரை 16 நாள் 'வாக்காளர் அதிகார யாத்திரை' மேற்கொண்டார்.
இடையில் 27 ஆம் தேதி பீகாரின் தர்பங்காவில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தொண்டர்கள் புடை சூழ புல்லட் பைக் பேரணி நடத்தினர்.
பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளூரில் கிடைக்கும் சில பைக்குகளை பேரணிக்காக எடுத்துச் சென்றிருந்தனர். அவற்றில் சுபம் என்ற இளைஞருக்கு சொந்தமான பல்சர் 220 பைக்கும் இருந்தது.
பேரணிக்கு பின் பிறகு பைக் திருப்பித் தரப்படும் என்று பாதுகாப்பு ஊழியர்கள் உறுதியளித்ததாக சுபம் கூறினார்.
இருப்பினும், பேரணி முடிந்ததும், தனது பைக்கை எடுத்துச் சென்ற பாதுகாப்பு ஊழியர்களை காணவில்லை
பேரணிக்கு சென்ற மற்ற பைக்குகள் திரும்பியபோதிலும், அவரது வாகனம் மட்டும் கிடைக்காததால் அவர் கவலையில் ஆழ்ந்தார்.
இந்த விஷயம் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவின் கவனத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து சுபம் பாட்னாவிற்கு அழைக்கப்பட்டார்.
அங்கு, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யின் நிறைவு விழாவில், ராகுல் காந்தி புதிய பைக் ஒன்றை சுபம்க்கு பரிசளித்தார்.
சாவியை ராகுலிடம் இருந்து பெற்றுக்கொண்ட சுபம் அதே பழைய பைக் மாடலை பரிசாக பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
- இந்தியர்கள் அதிகளவில் குடியேறுவதாகக் கூறி பல்வேறு நகரங்களில் பேரணி நடத்தினர்.
- இந்தியர்களுக்கு எதிரான பேரணிக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியர்கள் குடியேற்றத்துக்கு எதிராக அந்த அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மார்ச் பார் ஆஸ்திரேலியா அமைப்பினர் பேரணி நடத்தினர். இதில் தேசியக் கொடிகளை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கான்பெராவில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதேபோல், சிட்னியில் நடந்த பேரணியில் பங்கேற்றோர் குடியேற்றத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் குடியேற்றத்துக்கு எதிராக பேரணிகள் நடந்தன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பில் குவிக்கப்பட்டனர்.
இந்தியர்களுக்கு எதிரான இந்தப் பேரணிக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்றும், இது வெறுப்புணர்வை பரப்புவதாகவும் குற்றம்சாட்டியது.
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2.72 கோடியாகும். இதில் 10 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பூர்னியா மாவட்டத்தில் புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார்.
- தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர்.
பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை வலியுறுத்தி, வாக்கு திருட்டை கண்டித்து, 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம் பகுதியில் யாத்திரையை தொடங்கினார்.
செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் யாத்திரையை முடிக்கிறார். ராகுல்காந்தி இன்றயை யாத்திரையின் போது பூர்னியா மாவட்டத்தில் புல்லெட் பைக்கில் பேரணியாக சென்றார்.
பீகார் முன்னாள் துணை முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்களும் அவருடன் புல்லெட்டில் ஊர்வலமாக சென்றனர்.
இந்நிலையில் பைக்கில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியை நெருங்கிய இளைஞர் ஒருவர் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
உடனே அங்கிருந்து ஓடிய அவரை துரத்திய ராகுலின் பாதுகாப்பு அதிகாரி அவரது கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
- எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பீகாரில் யாத்திரை தொடங்கியுள்ளார்.
- இந்த யாத்திரையில் வரும் 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பாட்னா:
வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதேபோல் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல் மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சுகு (இமாசலப் பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்
- தேர்தல் ஆணையத்திடம் முழு நாடும் பிரமாணப் பத்திரம் கேட்கும்
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே, பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
நேற்று பீகாரின் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காந்தி, "தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் கயாவில் மூன்றாவது நாள் 'வாக்காளர் உரிமை' யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். ஜீப்பில் சென்ற ராகுல் காந்திக்கு இருபுறமும் நின்ற பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- வாக்கு திருட்டு என்பது 'பாரத மாதாவின்' ஆன்மா மீதான தாக்குதல்.
- தேர்தல் ஆணையத்திடம் முழு நாடும் பிரமாணப் பத்திரம் கேட்கும்.
நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே, பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பீகாரின் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காந்தி, "வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிடிபட்ட பிறகும் என்னிடம் பிராமண பத்திரம் தாக்கல் செய்யுமாறு கேட்கிறார்கள். வாக்கு திருட்டு என்பது 'பாரத மாதாவின்' ஆன்மா மீதான தாக்குதல்.
தேர்தல் ஆணையத்திடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், முழு நாடும் உங்களிடம் ஒரு பிரமாணப் பத்திரம் கேட்கும். நாங்கள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதியிலும் உங்கள் வாக்கு திருட்டை நாங்கள் கண்டுபிடித்து, மக்கள் முன் வைப்போம்.
தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்
- தெரு நாய்களை பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
- வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதை நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இன்று திருச்சி மற்றும் சென்னையில் இந்த முடிவை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அம்மு ராமச்சந்திரன், வாயில்லா ஜீவன் என்று நாய்களை சொல்வதற்கு காரணம் அவற்றால் பேசவோ, தனது தேவைகளை கூறவோ முடியாது என்பதற்காகக்தான். அதனால் குழைக்கவும், கடிக்கவும் தான் முடியும்.
உடம்பில் அவ்வளவு வலி மற்றும் பசியுடன் அவை இருக்கின்றன. 6 அறிவு படைத்த நமக்கே பசித்தால் கோபம் வருகிறது. அவற்றுக்கு வராதா?. அப்படி கோபத்தில் உர்ர் என்றால் உடனே குறை சொல்கிறீர்கள்.
சாலையில் அவ்வளவு வேகமாக செல்லும் யாராவது அவற்றுக்கு உதவி இருக்கிறீர்களா?.. நாய்கள் சாலையில் இல்லை என்றால் இன்னும் வேகமாக சென்று விபத்து தான் ஏற்படும்.
நாய்கள் குழந்தைகளை பாதுகாக்கின்றன. அப்படி ஏதாவது குழந்தையை கடித்திருந்தால் அதற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்தார்.
- இதற்கு வழங்கப்பட்ட நிதி மாநகராட்சிகளால் சரியாக பயனப்டுத்தப்படவில்லை.
- தெருக்களை சுத்தமாக வைத்திருந்தாலே பிரச்சனை தீரும்
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதை நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இன்று திருச்சி மற்றும் சென்னையில் இந்த முடிவை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு, இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்கள்களிடம் பேசிய வினோதினி, "ரேபிஸ் தொற்றால் மனிதர்கள் பாதிக்கப்படுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் எப்படி மனிதர்களில் 1 லட்சம் பேரில் ஒரு ரேப்பிஸ்ட் இருக்கிறானோ அதேபோல 1 லட்சம் நாய்களில் ஒரு நாய்க்கு ரேபிஸ் இருக்கலாம்.
அந்த நாய்களை மட்டும் பிடித்து அவற்று சிகிச்சை அளிக்கலாம். இதற்கு வழங்கப்பட்ட நிதி மாநகராட்சிகளால் சரியாக பயனப்டுத்தப்படவில்லை.
கருத்தடை செய்து நாய்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். நாம் தெருக்களில் உணவு குப்பைகளை கொட்டுவதும் நாய்களின் பெருக்கத்துக்கு காரணம். தெருக்களை சுத்தமாக வைத்திருந்தாலே பிரச்சனை தீரும்" என்று தெரிவித்தார்.
- 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- வாக்கு திருட்டுக்கு எதிராக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது
நிதிஷ் குமார் தலைமை யில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று யாத்திரையை தொடங்கி வைத்தார்.
வாக்கு திருட்டுக்கு எதிராகவும் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் பகுதி யில் தொடங்கிய யாத்திரை 16 நாட்கள் 1,300 கி.மீ. தொலைவை கடந்து 20 மாவட்டங்கள் வழியாக செப்டம்பர் 1-ல் தலைநகர் பாட்னாவில் முடிவடையும்.
இதற்கிடையே பாஜகவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.






