என் மலர்
நீங்கள் தேடியது "rally"
- கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு
- ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோத்தகிரி,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.
தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது.
அப்போது இந்து முன்னணி சார்பில் 81 சிலைகளும், அனுமன்சேனா சார்பில் 32 சிலைகளும் கோத்தகிரியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் உடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், கடைவீதி, ராம்சந்த் வழியாக உயிலட்டி நீர்வீழ்ச்சியை வந்தடைந்தது. பின்னர் அவை நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தை அடைந்தது.
- பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புகழூர் நகராட்சிப் பொறியாளர் மலர்கொடி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தை அடைந்தது.
பேரணியில் டெங்கு ஒழிப்பு குழுவினர், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கடைக்காரர்கள், வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர் விற்பனை செய்யவும், பயன்படுத்துவும் கூடாது என்றும், புகழூர் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ,எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதேபோல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கும். மேலும் தெருக்களில் கிடக்கும் தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள் , பழையபாட்டில்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மழைநீர் தேங்கினால் அதில் கொசுக்கள் தங்கி முட்டையிட்டு ஏராளமான கொசுக்களை உற்பத்தி செய்து பொதுமக்களை தீண்டும். அவ்வாறு பொது மக்களை கொசுக்கள் தீண்டுவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் துப்புரவு ஆய்வாளர்வள்ளி முத்து, பணி மேற்பார்வையாளர் ரவி மற்றும் டெங்கு ஒழிப்பு குழுவினர், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- பேரணியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
கோவை,
புதை படிவ எரிபொருள்களில் இருந்து உலகிற்கு ஓய்வு அளிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வருடம் தோறும் செப்டம்பர் 21-ந் தேதி சர்வதேச பூஜ்ஜிய உமிழ்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி பல்வேறு இடங்களில் கார்பன் உள்ளிட்ட புதைப்படிவ எரிபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்தப் பேரணியை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.
மேலும் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மஞ்சப்பைகளையும் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் எடுக்கப்பட்டது.
- நாடு முழுவதும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது
- பேரணியில் ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஊட்டி,
நாடு முழுவதும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருப குதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது சேரிங்கிராஸ் வழியாக காபிஹவுஸ் சென்ற டைந்தது.
முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுவினரின் விழிப்புணர்வு ரங்கோலி கோலம், வளரிளம் பெண்களுக்கான ரத்தசோதை முகாம் ஆகியவற்றையும் கலெக்டர் அருணா பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் மருந்துதுறை சார்பில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு விட்ட மின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இது வருகிற 23-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் நடக்க உள்ளது.
நிகழ்ச்சியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி தேவகுமாரி, மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீணாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி (பொ) ஷோபனா, வட்டார மருத்துவ அலுவலர்கள் முருகேசன், ஊட்டி தாசில்தார் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சூலூர் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடத்தப்பட்டது
- 60-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக கலந்து கொண்டனர்
சூலூர்,
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாளை நொய்யல் ஆற்றில் மற்றும் அருகில் உள்ள குளங்களில் கரைக்கப்பட உள்ளது.
இதையொட்டி சூலூர், சுல்தான்பேட்டை போலீசார் சூலூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், பீடம் பள்ளி காங்கேயம் பாளை யம், காடம்பாடி, அப்பநாய க்கன்பட்டி, பாப்பம்பட்டி, சுல்தான்பேட்டை, செஞ்சே ரிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரி புத்தூர், ஜெ.கிருஷ்ணாபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
மேலும் நேற்று மாலை சூலூர் போலீசார் ஆயுதப்படை மற்றும் சிறப்பு ஆயுதப்படைகாவலர்களுடன் சூலூர் சுற்றுவட்டார பகுதி யில் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தினர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியும் என சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தெரிவித்தார்.
இந்த அணி வகுப்பு ஊர்வலத்தில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சூலூர் முக்கிய வீதிகளில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.
- பெரம்பலூர் நகராட்சி சார்பில் குப்பை இல்லா நகரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்கம் 2.0 - வை முன்னிட்டு குப்பை இல்லாத நகரமாக்க வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆணையர் ராமர், துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலம் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி வழியாக பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.இதில் நகராட்சி கவுன்சிலர்கள் துரை காமராஜ், தங்க சண்முக சுந்தரம், சித்ரா, சவுமியா, ரஹ்மத்துல்லா, நல்லுசாமி மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு, வக்கீல் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம்.
- சிலைகளை செய்வதற்கு ரசாயன வண்ணங்கள் பயன்படுத்த தவிர்க்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும் தோப்பு துறை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியும் இணைந்து மாசில்லாத இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
வேதாரண்யம் நகராட்சியில் இருந்து பேருந்து நிலையம் கடைவீதி வழியாக உப்பு சத்தியாகிரகம் நினைவு மண்டபம் வரை நடைபெற்ற பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேரணியை நகராட்சி தலைவர் புகழேந்தி தெரடங்கி வைத்தார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பொழுது களிமண், மஞ்சள் ,அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம், ரசாயன வண்ணங்களை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக், தர்மாகோல், ரங்கோலி ஸ்டிக்கர், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்,
இயற்கையில் கிடைக்கும் மரப்பட்டைகள் இயற்கை வண்ணங்கள் பூக்கள் வண்ணக்கற்கள் தென்னை தோரணங்கள் மாவிலை இவற்றை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம், அலங்காரம் செய்த குப்பைகளை நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம்.
பிளாஸ்டிக் பயன்பாட்டு குறைப்பு ,பிளாஸ்டிக் மறுசுழற்சி, மறு பயன்பாடு இவற்றின், மூலம் பிளாஸ்டிக் நீர் நிலைகளை சென்றடையாமல் தவிர்க்கலாம், மாசில்லாமல் விநாயகர் வழிபட்டு சுற்றுச்சூழலை காப்போம் என்று மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்து பேரணியில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோ கிக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்தவர்கள் அவர்கள்
- ரெயில்வே மந்திரியாக இருந்த போது லல்லு பிரசாத் பல கோடிக்கு ஊழல் செய்தார்
இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்க "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணியும் இப்போதிலிருந்தே மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
பா.ஜ.க.வின் சார்பில் "லோக் சபா பிரவஸ்" எனும் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் ஆங்காங்கே அதன் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆளும் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, பீகார் மாநில மதுபானி மாவட்டத்தில் லோக் சபா பிரவஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜஞ்சர்பூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து அமித் ஷா பேசியதாவது:
"எதிர் கட்சியினர் ஒரு புது பெயரில் பழைய கூட்டணியையே உருவாக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் ஒரு கூட்டணி அமைத்து முன்பு ஆட்சியில் இருந்த போது ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தனர்."
"அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பீகாரின் லல்லு பிரசாத் யாதவ் பல கோடிக்கு ஊழல் செய்தார். அதே பெயரில் மீண்டும் அவர்கள் ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வர முடியாது என உணர்ந்து இந்தியா கூட்டணி என புது பெயரிட்டு உலா வருகிறார்கள். இக்கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்."
"ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்," என்று கூறினார்.
- அலங்காநல்லூரில் காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை பேரணி நடந்தது.
- வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அலங்காநல்லூர்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு வெற்றி விழிப்பு ணர்வு பேரணி மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பில் அலங்காநல்லூர் வட்டார தலைவர் சுப்பாராயலு ஏற்பாட்டில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
வட்டாரத் தலைவர்கள் காந்தி, சண்முகசுந்தரம், பழனிவேல், குருநாதன், சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, திலகராஜ், முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்லப்பா சரவணன், சோனை முத்து, முத்து, நகர் தலைவர்கள் சசிகுமார், வைரமணி, முத்துப்பாண்டி, முருகானந்தம், உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர், கேட்டுக்கடை சந்திப்பில் இருந்து அம்பேத்கர் பஸ் நிலையம் வரை இந்த ஒற்றுமை பேரணி நடந்தது.
- ஓராண்டு நடைபயணம் நிறைவு பேரணி நடைபெற்றது
- காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது
கரூர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் இந்திய ஒற்றுமை நடை பயணம் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் பேரணி நடந்தது.
எம்.பி ஜோதிமணி தலைமை தாங்கினார். மாநகராட்சியின் 9-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவருமான ஸ்டீபன் பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன், நகரத் தலைவர் வெங்கடேஸ்வரன், மாவட்ட சேவாதள தலைவர் தாந்தோணி குமார், மாவட்ட பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் கோகுலே, சண்முகம், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் முனீஸ்வரன், வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், மலையாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.