என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள்"
- கடந்த பத்து ஆண்டுகளில் அரசின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
- கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா அரசு, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் நீண்டநாட்களாக பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்கள் தற்போது மாதம் ரூ.2 லட்சம்வரை சம்பளம் பெறக்கூடும்.
தெலங்கானா அரசின் இந்த முடிவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மாநிலத்தின் நிதிச் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. அரசுத் தரப்புத் தகவல்களின்படி, தெலங்கானா அரசு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக மாதத்திற்கு சுமார் ரூ. 6,000 கோடி செலவிடுகிறது.
இது 2014-இல் மாநிலம் உருவானபோது செலவிடப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட ஊதிய மாற்றங்கள் மற்றும் தேர்தல் காலங்களில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த உயர்விற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தெலங்கானாவில் அதிக சம்பளம் பெறும் ஊழியர்களாக மின்சாரத்துறையை சேர்ந்தவர்கள் உள்ளனர். தெலங்கானா மாநில மின் உற்பத்தி கழகம் (TGGENCO) மற்றும் மின் விநியோக நிறுவனங்களில் (DISCOMs) பணிபுரியும் மூத்த அதிகாரிகள் இப்போது மாதம் ரூ. 7 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். ஹைதராபாத் மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் சராசரியாக மாதம் ரூ. 70,000 ஊதியம் பெறுகின்றனர். அனுபவம் வாய்ந்த நான்காம் நிலை ஊழியர்கள் ரூ. 2 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனர். மாநகராட்சிப் பணிகளில் புதிதாகச் சேரும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஆரம்ப ஊதியமாக ரூ.28,000 வழங்கப்படுகிறது.
துறைகளுக்கு ஏற்ப சம்பளம் மாறுபடுகிறது. ஆனால் அனைத்து ஊழியர்களுக்கும் 33.67% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அடிக்கடி உயர்த்தி வழங்கப்படும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தால் மாநிலத்தின் நிதிச்சுமை கூறுகிறது என கூறப்பட்டாலும், தெலங்கானாவின் உள்நாட்டு உற்பத்தி வலுவான நிலையிலேயே உள்ளது. வருவாய் ரூ.2.30 லட்சம் கோடி; செலவு ரூ.2.27 லட்சம் கோடி. இதன் மூலம் மாநிலத்தின் நிதி நிலை சமமாகப் பராமரிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குழு வாரியான ஊதிய விவரங்கள்:
Group 1: ரூ. 54,000 முதல் ரூ. 1,33,000 வரை.
Group 2: ரூ. 38,890 முதல் ரூ. 1,18,230 வரை.
Group 3: ரூ. 32,810 முதல் ரூ. 96,890 வரை
Group 4: ரூ. 24,280 முதல் ரூ. 72,850 வரையிலும் அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது.
- 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைத்திருந்தார்.
இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலை உணவில் இட்லி, பொங்கல், கிச்சடி போன்றவையும், மதியம் கலவை சாதம், ரசம், சாம்பார், கூட்டு, பொரியல். இரவில் சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சென்னை உள்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவு கலன்களை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். விழா மேடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர், மதிவேந்தன், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு துறை செயலாளர் சத்தியபிரதா சாகு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- கோவை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
- முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.
கோவை:
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இந்ததிட்டம், வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது.
இதனை முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
கோவை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 100 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். நிரந்தர, தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 454 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
- நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- காலை உணவு தரமற்ற முறையில் துர்நாற்றம் வீசியுள்ளது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கிட சமீபத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சியிலும் கடந்த ஒரு மாத காலமாக தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 750-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் தொடங்கிய சில நாட்கள் மட்டுமே உணவின் தரம் நன்றாக இருந்ததாகவும், அதன் பின்னர் வழங்கப்படும் உணவு சாப்பிட முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்ற முறையில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் அந்த சாப்பாடுகளை சாப்பிடாமல் அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசினர். மேலும் கடந்த சில நாட்களாகவே தரமற்ற முறையில் உணவு இருப்பதாகவும் அதனை சாப்பிட முடியாமல் குப்பை தொட்டியில் வீசி வருவதா கவும் அவர்கள் தெரிவித்தனர்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
- குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
* ரூ.1088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.
* அங்கன்வாடி உதவியாளர், சமையலர், உதவியாளர், தூய்மை பணியாளருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும்.
* அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியத்தொகை ரூ.2,000-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* பணி நிறைவு பெறும் நாளில் தரப்படும் ஒட்டுமொத்தத்தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும்.
* முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி விண்ணப்பிதித 80,000 பேருக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும்.
* உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் அளித்தவர்களில் தேர்வு செய்யப்பட்ட 80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வுத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
- தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
- தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்.
இதனையடுத்து பழச்சாறு கொடுத்து பெண் தூய்மைப் பணியாளரின் உண்ணாவிரதத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இம்மாத இறுதிக்குள் தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பொங்கல் தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக இருக்கும்" என்று வாக்குறுதிஅளித்தார்.
இதனை கேட்டதும் தூய்மைப் பணியாளர்கள்குத்தாட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்மூலம் தனியார்மயமாக்கலை எதிர்த்து 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீர்வை எட்டியுள்ளது.
- தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
- தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பத்தூரில் உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை மாநகராட்சியின் 5வது மற்றும் 6வது மண்டல தூய்மைப் பணியாளர்களை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சந்தித்து பேசினர்.
இதனையடுத்து பழச்சாறு கொடுத்து பெண் தூய்மைப் பணியாளரின் உண்ணாவிரதத்தை அமைச்சர் சேகர் பாபு முடித்து வைத்தார்.
தனியார்மயமாக்கலை எதிர்த்து 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீர்வை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கையிலெடுத்தனர்.
- இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து, அன்று மாலையே விடுவிப்பது வழக்கம்.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
இந்த இரண்டு மண்டலத்தையும் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தை கையிலெடுத்தனர். அதில் அண்ணா சாலையில் அறிவாலயம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆலந்தூர், நந்தம்பாக்கம், புளியந்தோப்பு, சைதாப் பேட்டை, கீழ்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள சமுதாய கூடங்கள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பொதுவாக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து, அன்று மாலையே விடுவிப்பது வழக்கம். ஆனால் தூய்மை பணியாளர்களை பொறுத்த வரையில் இன்று காலை வரையில் விடுவிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுவிக்கப்படாத நிலையில், தாங்கள் தங்கி இருக்கின்ற சமுதாயக்கூடம் மற்றும் கல்யாண மண்டபங்களிலேயே போராட்டத்தை தொடர்கின்றனர். தொடர் மற்றும் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சியின் அனைத்து நுழைவு வாசல்களும் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இன்றுகாலை அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்தினர்.
- போலீசார் இல்லாத இடங்களை பார்த்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றுகாலை அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே மற்றொரு தரப்பினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் கருணாநிதி சிலை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் போலீசார் இல்லாத இடங்களை பார்த்து போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தை எங்கு கையிலெடுக்கிறார்கள் என்பது தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
- சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் சென்னை பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.
குறளகத்திற்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவர்களை வாகனங்களில் ஏற்றினர்.
- நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
- குறளகம் நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.
பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறளகம் நோக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல்துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.
- குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை.
- பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே, ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை தனியாரிடம் வழங்கிய திமுக அரசு, அதற்காக ரூ.2300 கோடி மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வாரிக் கொடுத்தது. இப்போது அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கான ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் கூடுதலான தொகையை வாரி வழங்க இருக்கும் தி.மு.க. அரசு, அதற்கான வெகுமதியை பெற்றுக்கொள்வதற்காகத் தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றுகிறது.
ஆட்சியாளர்கள் லாபம் அடைவதற்காக தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்போது, தூய்மைப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு பறிக்கப்படும்; ஊதியம் சுரண்டப்படும். ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை ஆகும்.
தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






