search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Corporation"

    • நெல்லை மாநகர பகுதியில் பருவமழையை முன்னிட்டு அங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டெங்கு தடுப்பு மற்றும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் பருவமழையை முன்னிட்டு அங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுரையின்படி உதவி பொறியாளர் வாசுதேவன் வழிகாட்டுதலின்படி டெங்கு தடுப்பு மற்றும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் நிலவேம்பு கசாயம் போலீசாருக்கு வழங்கப்பட்டது. டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை டவுன் ரத வீதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள், டவுன் மார்க்கெட் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் காவலர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரை யாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மேயர் சரவணன் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
    • டவுன் ரத வீதிகள் முழுவதிலும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மாநகராட்சி சார்பில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நிலவேம்பு கசாயம்

    அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.

    டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைக ளுக்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் அந்தோணி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து டவுன் ரத வீதிகள் முழுவதிலும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டது. தொடர்ந்து மாநகரப் பகுதி முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நில வேம்பு கசாயம் வழங்குவ தற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    • நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
    • 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி சார்பாக 4 மண்டல பகுதிகளில் வரிவசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக பொதுமக்களின் நலன் கருதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. 4 மண்டல உதவி கமிஷனர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    நெல்லை மண்டலத்தில் வார்டு 21-ல் உள்ள பேட்டை உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்திலும், தச்சநலல்லூர் மண்ட லத்தில் வார்டு 29-ல் உள்ள மீனாட்சிபுரம் நகர்மன்ற மகளிர் மேல்நிலைப்பள்ளி யிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் வார்டு 31-ல் உள்ள புனித தோமையார் பள்ளி வளாக கூட்டரங்கிலும் பாளையங்கோட்டை மண்டலத்தில் வார்டு 55-ல் உள்ள 8-வது வடக்கு தெரு விக்னவிநாயகர் கோவில் எதிரில் உள்ள கலையரங்கிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாம்களில் அந்தந்த வார்டு பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள், வணிகவளாக உரிமையாளர்கள், தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாளச்சாக்கடை சேவை கட்டணம் போன்ற நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வரியினங்களை உடனடியாக செலுத்திடவும், மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணவரி விதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவை களுக்கும் கோரிக்கை மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பின்தங்கியுள்ள வரிவசூல் மேம்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங்களை அன்றைய தினமே நிலுவையின்றி செலுத்திட மாநகராட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சுத்தமல்லி விலக்கு அருகில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
    • புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும்.

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வழிகாட்டுதலில் சுத்தமல்லி விலக்கு அருகில் நெல்லை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்காக ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும். நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் (கிராமப்புற கோட்டம்) குத்தாலிங்கம், உதவி செயற் பொறியாளர் (கிராமப்புற உபகோட்டம்) அலெக்சாண்டர், உதவி மின் பொறியாளர் (சுத்தமல்லி பிரிவு) வேலுசாமி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலம் 22-வது வார்டில் வரிவசூல் மேம்படுத்தும் விதமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது.
    • இம்முகாமில் அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரி யினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன் மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலம் 22-வது வார்டில் வரிவசூல் மேம்படுத்தும் விதமாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவுரையின்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் , பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரி யினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். மேலும் சொத்துவரி, குடிநீர்கட்டண வரிவிதிப்பு, பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். இச்சிறப்பு முகாம் வார்டு 22-ல் பின்தங்கியுள்ள வரிவசூலை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுவதை கருத்தில் கொண்டு அந்த வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினங் களை நிலுவை யின்றி செலுத்தி ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.
    • முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.

    அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில், சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் முதற்கட்ட மாக தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ. 1,500 ஆகும். மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது. இந்த பணியானது மாநகராட்சிக்கு கீழ் உள்ள அனைத்து சுகாதார மையத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

    • நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
    • தியாகராஜநகர், டி.வி.எஸ். நகர், தாமிரபரணி காலனி உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்்கு கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பாளை தியாகராஜநகரை சேர்ந்த சமூக ஆர்வலரான செல்வகுமார் என்பவர் அளித்த மனுவில், தியாகராஜநகர், டி.வி.எஸ். நகர், தாமிரபரணி காலனி உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே அந்த நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மாநகராட்சி 55- வது வார்டு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில், குமரேசன் நகர் முன்பு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரும் அங்கு இதுவரை பூங்கா அமைப்பதற்கான நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே காலம் தாழ்த்தாமல் விரைவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    • தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் 30 பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    மாநகராட்சிகளில் அனைத்து பணிகளையும் ஒப்பந்ததாரர் மூலம் வழங்குவதற்கான அரசாணை 152 ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று நடந்த முற்றுகை போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், கணக்கர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிக முறைப்படி அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 30 பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின்மோட்டார்களை மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.
    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சட்டத்திற்குபுறம்பாக குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும்,

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார்.

    மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் குழாயில் இருந்து நேரடியாக குடிநீர் பெறப்படுவது கண்டறியப்பட்டாலோ, வீட்டு குடிநீர் இணைப்பு களில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறிபட்டாலோ, அந்த கட்டடத்திற்கான குடிநீர் இணைப்பானது நிரந்தமாக துண்டிப்பு செய்யப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட நல்மேய்ப்பர் நகர், குறிஞ்சி மெயின் ரோடு, ரோஜா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் உதவி செயற்பொறி யாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவை சேர்ந்த செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சட்டத்திற்குபுறம்பாக குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும், மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படு வதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப் படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மாநகராட்சியில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து 5 அதிகாரிகள் நிர்வாக அலுவலர் பதவிக்கான தகுதியை அடைந்துள்ளனர்.
    • மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதால் அந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விட்டது.

    நெல்லை:

    தமிழகத்தின் 6-வது மாநகராட்சியாக நெல்லை மாநகராட்சி கடந்த 1994-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பகுதியானது நிர்வாக வசதிக்காக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வார்டுகளில் அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு உதவி கமிஷனர், பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேஸ்திரிகள் என சுமார் 100 பேர் வரை பணியில் இருக்கின்றனர்.

    இந்த 4 மண்டலங்களிலும் சேர்த்து 350 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் உள்ளனர். இது தவிர சுமார் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒப்பந்த அடிப்படையிலும், நிரந்தரமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கமிஷனர், நிர்வாகம், கணக்கு உள்ளிட்ட தனித்தனி துறைகளுக்கு உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலக பணிகள் மேற்கொள்வதற்கு என மொத்தமாக மாநகராட்சியில் 1,500 பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.

    இவ்வாறு பணியாற்றும் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வுக்கான தகுதி வந்தவுடன் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு மண்டலத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றினால் அவருக்கு சுகாதார அலுவலராக பதவி உயர்வு வழங்கப்படும்.

    ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான தகுதி வந்தவுடன் மாநகராட்சி கமிஷனர் பார்வைக்கு கடிதம் சென்று அவர் ஒப்புதல் அளித்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டு விடும். அதே நேரத்தில் பதவி உயர்வு பெறும் இடத்தில் ஏற்கனவே ஒருவர் பதவி வகித்து வந்தால் அதாவது காலி பணியிடம் இல்லை எனில் பதவி உயர்வுக்கு தகுதியான நபருக்கு அந்த உயர் பதவிக்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசாணை உள்ளது.

    அந்த வகையில் சமீபத்தில் பதவி உயர்வுக்கு தகுதியான 5 அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு கமிஷனர் பார்வைக்கு சென்றதாகவும் அவர் கையெழுத்திட்டு அனுப்பிய நிலையில், கவுன்சில் கூட்டத்தில் அந்த பதவி உயர்வு ஆணைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.

    அதாவது மாநகராட்சியில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து 5 அதிகாரிகள் நிர்வாக அலுவலர் பதவிக்கான தகுதியை அடைந்துள்ளனர். அவர்களுக்கு அதற்கான பணி ஆணையை வழங்குவதற்கு கமிஷனர் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார். ஆனால் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதால் அந்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விட்டது. இதேநிலைதான் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் இருப்பவர்களுக்கும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கேட்டால், மாநகராட்சி தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், பதவி உயர்வு கொண்டு வந்தால் சம்பளமும் உயர்த்தி வழங்க வேண்டும். இதனால் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் கூறி கவுன்சில் கூட்டத்தில் அந்த தீர்மானத்தை ரத்து செய்துள்ளதாக கூறுகின்றனர்.

    அதே நேரத்தில் பதவி உயர்வு மற்றும் அதற்குரிய சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனில் மிகப்பெரிய தொகையை அரசியல் பிரமுகர்கள் லஞ்சமாக கேட்கின்றனர் என்றும் அதிகாரிகள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர்.

    • நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் பல்வேறு தெருக்களில் நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன.
    • வண்ணார்பேட்டை மற்றும் பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளிலும் திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் பல்வேறு தெருக்களில் நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன.

    நெல்லை மண்டலத்தில் டவுன், பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மேலப்பாளையம் மண்டலத்தில் டவுன்ரோடு, ஆசாத்ரோடு, ஆண்டவர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் பகல், இரவு நேரங்களில் நாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன.

    இதேபோல் வண்ணார்பேட்டை மற்றும் பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளிலும் திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி செல்வதால் அவர்கள் அச்சத்தில் விபத்தில் சிக்கி வருகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது.

    எனவே மாநகர பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் கமிஷனர் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டது.

    மண்டல உதவி கமிஷனர் அய்யப்பன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் பல்வேறு தெருக்களில் சுற்றிய 40 நாய்கள் பிடித்து செல்லப்பட்டன.

    இதேபோல் நெல்லை உள்ளிட்ட பிற மண்டலத்தில் திரியும் நாய்களையும் பிடித்து செல்ல வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள பூங்கா மற்றும் குடிநீர் தொட்டி பகுதியில் அமைந்துள்ள முட்செடிகள் அகற்றப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் பொழுது போக்குவதற்காக ஏராள–மான பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இந்த பூங்காக்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் புல் மற்றும் முட்செடிகள் அவற்றில் வளர்வதாகவும், அதனை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வார்டு கவுன்சிலர்களிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

     அதன் அடிப்படையில்  பூங்காக்கள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடிகளை வெட்டி சுத்தப்படுத்த மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து மாநகர நல‌அலுவலர் ராஜேந்திரன் மற்றும் உதவி கமிஷனர் லெனின் அறிவுறுத்தலின் படி தச்சை மண்டல சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தலைமையில் இன்று காலை வார்டு எண் 11 -ல் ராமலிங்க அடிகளார் தெரு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி  வளாகத்தில்  உள்பகுதியில் வளர்ந்து இருக்கும் தேவையற்ற புல், செடிகள், தாவரங்கள் மற்றும் மர கழிவுகள், இலை தழைகள்  ஆகியவை நவீன எந்திரம் மூலம் வெட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

     மாநகராட்சி  மூலம் இப்பணியினை தினமும் சுமார் 10 பணியாளர்கள்  காலை மற்றும் மாலை வேளைகளில்  செய்தனர். ஆனால் நவீன புல் கட்டர் எந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் அவை சுத்தப் படுத்தப்பட்டுள்ளது.

    இதே போல் மாநகர பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் குடிநீர் தொட்டி உள்ள பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் தேவையற்ற புல் செடிகள் மற்றும் மரங்கள் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×