என் மலர்
நீங்கள் தேடியது "Special Medical Camp"
- பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார்.
முக்கூடல்:
பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகள், கோழி ஆகியவற்றிற்கு சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டது. சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளை மருத்துவத்திற்காக மக்கள் கொண்டு வந்தனர்.
கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார். முக்கூடல் கால்நடை உதவி மருத்துவர் ஹேமாசாயி, அத்தாள நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் முயல்வி ஆகியோர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை உதவியாளர் தர்மலிங்கம் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர்.
- அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது
- கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்ட த்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனடி ப்படையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி யாளர்களுக்கான வட்டார அளவிளான சிறப்பு மருத்துவ முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.
முகாமினை கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்று நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் 490 பேர் பயனடைந்தனர். 6 பேர் உயர் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக் கப்பட்டனர். கருங்குளம் யூனியன் அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு நன்றி கூறி னார்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட கொட்டபட்டியில் தாடிக்கொம்பு வட்டாரம், நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர். விக்னேஷ், டாக்டர் ராஜரவிவர்மன், ஊராட்சி மன்ற தலைவர் பரமன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்
- கோட்டம் எண் 9-க்குட்பட்ட வாய்க்கால் பட்டரை ஜெய் மெட்ரிக் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆணையாளர் (பொ) ரவி தலைமையில் இன்று நடைபெற்றது.
- முகாமில் கருவுற்ற 7 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 9-க்குட்பட்ட வாய்க்கால் பட்டரை ஜெய் மெட்ரிக் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆணையாளர் (பொ) ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. முகாமினை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
முகாமில் கருவுற்ற 7 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமிற்கு வந்த பொதுமக்களின் வருகை பதிவு செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய், டெங்கு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இம்முகாமில் சிகிச்சைகளுக்கு தேவையான மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு வருகை தந்த அனைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் மாநகர நல அலுவலர் யோகானந், மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், சாந்தி, இந்துஜா, சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
- முகாமில் மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள15-வது வார்டில் செபத்தையாபுரம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நட்டாத்தி பஞ்சாயத்து துணை தலைவர் பண்டாரம், சுப்பிரமணியபுரம் சேகர குரு டேவிட் ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொதுமக்கள் அனைவருக்கும் பொதுமருத்துவம் நீரழிவு நோய்,கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் லேப் கண் சிகிச்சை ஹோமியோபதி, சித்தா மருத்துவம் டெங்கு பற்றி விழிப்புணர்வு, தொழுநோய் சிகிச்சை, மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், தூய மேரி நர்சரி பள்ளி தாளாளர் சுதாகர் மைக்கேல், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், சுப்பிரமணிய புரம் சேகர பொருளாளர் தேவ ஆசிர்வாதம், செயளாலர் ஜோசப் மாசில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பொற்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை ஏரல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் செய்து இருந்தார்.
- மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
- முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
திருப்பூர்:
காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10ந்தேதி, மெகா மருத்துவ முகாம் நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான, 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.
பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கி றது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்க ளுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.
- 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
- இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.
நாளை எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள தூசூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், கொல்லிமலை வட்டாரத்தில் செம்மேடு வல்வில் ஓரி அரங்கிலும் சுகாதார திருவிழா நடைபெற உள்ளது.
இம்முகாமில் ஆண், பெண் தனித்தனி மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளனர். இதில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
கர்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு பிணி உதவி திட்டத்திற்கான ஆலோசனை வழங்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உதவி கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக் டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட 254 நபர்களில், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 66 நபர்களுக்கும், காது கேளா தோர் 26 நபர்களுக்கும், கண் பார்வை பாதிக்கப்பட்ட 24 நபர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியவர்கள் 29 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத் துவரால் பரிந்துரைக்கப் பட்ட 22 நபர்களுக்கும் தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகள் மாவட்ட கலெக்டர் வளர் மதி தலைமையில் வழங்கப் பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக் கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 60 நபர்களுக்கும், முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 31 நபர்களுக்கும் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித் தொகை வேண்டி 38 நபர் களும், வங்கி கடன் வேண்டி 21 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 4 நபர் களும், சக்கர நாற்காலி வேண்டி 4 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மேலும் 1 நப ருக்கு ரூ.10,500 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள், 2 நபர்களுக்கு தலா ரூ.9,500 மதிப்பிலான சக்கர நாற்காலி ஆக மொத் தம் 3 பயனாளிகளுக்கு ரூ.29,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
- மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம் நாளை 3 மண்டலங்களில் நடக்கிறது.
- மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மதுரை
மதுரை மாநகராட்சி சார்பில் நாளை (மார்ச் 25-ந் தேதி), கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மண்டலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மண்டலம் 1 (கிழக்கு) வார்டு எண்.16 முல்லை நகர் தனபால் உயர்நிலைப்பள்ளி, மண்டலம் 2 (வடக்கு) வார்டு எண்.22 தத்தனேரி மாநகராட்சி
திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 3 (மத்தியம்) வார்டு எண்.75 சுந்தரராஜபுரம் மாநகராட்சி ஆரம்பபள்ளி ஆகிய 3 இடங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்வார்கள்.மேலும் ரத்த எச்.பி. அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவீடு, மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி. கர்ப்பபைவாய், புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன், கண்புரை அளவு, கொரோனா சளி பரிசோதனைககளும் மேற்கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவல் மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.
- முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.
அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில், சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் முதற்கட்ட மாக தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ. 1,500 ஆகும். மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது. இந்த பணியானது மாநகராட்சிக்கு கீழ் உள்ள அனைத்து சுகாதார மையத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
- முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் கே.மேட்டுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
- அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
கோபி:
தமிழக முதல்-அமைச்ச ரின் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பொம்ம நாயக்கன் பாளை யம் அடுத்த கே.மேட்டு ப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி யில் நடந்தது. இதில் 1062 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
இந்த முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக கோபிசெட்டி பாளையம் வட்டார சுகா தார மேற் பார்வையாளர் செல்வன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றி னார். பொம்மநாயக்கன் பாளையம் ஊராட்சி முன் னாள் தலைவர் சண்முக த்தரசு முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி உறு ப்பினர் சிவகாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 67 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, 127 பேருக்கு ஈசிஜி பரிசோதனை, 56பேரு க்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மேலும் 539 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, 64 பேருக்கு விடிஆர்எல் பரிசோதனை, 890 பேருக்கு சிறுநீரில் உப்பு, சர்க்கரை ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் 5 பேர் கண் அறுவை சிகி ச்சைக்கு அனுப்பி வைக்க ப்பட்டனர். காச நோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முகாமில் அமைக்கப்பட்ட டெங்கு, தொழு நோய், மக்களை தேடி மருத்துவம், காச நோய், எய்ட்ஸ் கட்டுப் பாடு, ஊட்டச்சத்து கண் காட்சியை ஏ.ஜி.வெங்கடா ச்சலம் எம்.எல்.ஏ. பார்வை யிட்டார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கல்பனா 138 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளித்தார்.
கூகலூர் ஆரம்ப சுகா தார நிலைய டாக்டர் 124 பேருக்கு பல் சிகிச்சை அளித்தார். பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மூலம் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தோல் டாக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோபி செட்டிபாளையம் தஷின் மருத்துவ மனை குழுவின ரும், கோபிசெட்டிபாளை யம் எம்.எஸ். மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட த்தின் கீழ் மருத்துவ பரிசோதனை மேற் கொள்ள ப்பட்டது.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற் பார்வை யாளர் செல்வன் தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் சேதுராமன், சுகந்த், வேலு மணி, நவீன்குமார், சிவா, சக்திவேல், கிரண், செவிலி யர்கள் சுலோச்சனா, லதா ராணி உள்பட பலர் செய்திருந்தனர்.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
- சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
காங்கயம் :
காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இம்மருத்துவ முகாமில் 3 நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை , 6 பள்ளி மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள், 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 13 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினை அமைச்சர் வழங்கினார்.முன்னதாக இந்த மருத்துவ முகாமில் இலவச சிறப்பு வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சியின் திட்ட இயக்குநர் லட்சுமணன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) கனகராணி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஸ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வட்டார மருத்துவ அலுவலர் முரளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






