search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    ராணிப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்

    • உதவி கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக் டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் கலந்து கொண்ட 254 நபர்களில், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 66 நபர்களுக்கும், காது கேளா தோர் 26 நபர்களுக்கும், கண் பார்வை பாதிக்கப்பட்ட 24 நபர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியவர்கள் 29 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத் துவரால் பரிந்துரைக்கப் பட்ட 22 நபர்களுக்கும் தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுகள் மாவட்ட கலெக்டர் வளர் மதி தலைமையில் வழங்கப் பட்டது.

    மாற்றுத்திறனாளிகளுக் கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 60 நபர்களுக்கும், முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 31 நபர்களுக்கும் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித் தொகை வேண்டி 38 நபர் களும், வங்கி கடன் வேண்டி 21 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 4 நபர் களும், சக்கர நாற்காலி வேண்டி 4 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    மேலும் 1 நப ருக்கு ரூ.10,500 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள், 2 நபர்களுக்கு தலா ரூ.9,500 மதிப்பிலான சக்கர நாற்காலி ஆக மொத் தம் 3 பயனாளிகளுக்கு ரூ.29,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

    Next Story
    ×