search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary"

    • கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது.
    • அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை.

    திண்டுக்கல்:

    நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. படித்தால் வேலை கிடைக்கும் என நம்பி பட்டப்படிப்புகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பின்னர் அதனை புதுப்பித்து வேலை கிடைக்காத நிலையில் கிடைத்த வேலையை செய்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த படிப்பு படித்திருந்தாலும் வேலை கிடைக்காத நிலையில் ஓட்டல், டீக்கடைகளுக்கு வேலைக்கு செல்லும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் 66 காலியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தோல்வியே தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து இளநிலை, முதுநிலை, எஞ்ஜினீயரிங், டிப்ளமோ, பி.ஹெச்.டி படித்த மாணவர்கள் விண்ணப்பம் அளித்திருந்தனர்.


    விண்ணப்பம் செய்திருந்த 6167 பேர்களில் தினசரி 1200 பேர் வீதம் நேர்காணல் தேர்வு வருகிற 3ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அந்த இடமே கடும் போக்குவரத்து நெரிசலானது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் ராம்நாத் தலைமையில் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு வந்த மாணவர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

    கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பம் செய்திருந்தனர். செய்முறை தேர்வாக சாணி அள்ளுதல், மாடுகளுக்கு ஊசி போடுதல், நோய்தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்தல், மாடுகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கயிறு மூலம் இழுத்து கட்டுதல் ஆகியவையே போதுமானது. மேலும் மாடுகளின் பால் கறக்கும் மடிகளில் புண்கள் இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த பணிகளை கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்களே எளிதாக செய்ய முடியும்.

    ஆனால் வேலை இல்லாத காரணத்தால் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இருந்த போதும் அனைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு முடிந்த பிறகு தகுதியின் அடிப்படையில் 66 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றார்.

    இதுகுறித்து நேர்காணலுக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் தெரிவிக்கையில்,

    படித்த படிப்புக்கு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறோம். வேலை இல்லாததால் திருமணம் கூட நடைபெறவில்லை. அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை. பெற்றோருக்கு பாரமாக இருப்பதைவிட ஏதேனும் ஒரு வேலையை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதுவும் இந்த பணி அரசு வேலை என்பதால் ஏராளமான இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பையும் நினைக்காமல் வந்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு கட்டுபடியான சம்பளம் என்பதால் பலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். அனுபவம் இல்லையென்றாலும் போகப்போக சரியாகிவிடும் என நினைக்கிறோம் என்றனர். ஆண்கள் மட்டுமின்றி பட்டதாரி பெண்களும் இந்த நேர்காணலுக்கு வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • முதுகுளத்தூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றறது. சிக்கல் கால்நடை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் அரவிந்த் (சிக்கல்), அரவிந்தன் (சாயல்குடி), கால்நடை ஆய்வாளர்கள் ரெஜினாராணி, உஷா, கால்நடை உதவியாளர் பாலதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

    • கால்நடை காணை நோய் தடுப்பூசி முகாம் 6-ந் தேதி முதல் 21 நாட்கள் நடக்கிறது.
    • தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்காணை மற்றும் வாய்காணை நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நோயினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவைமாடுகளின் சினைப்பிடிப்பு தடை படுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.

    எனவே, கால்நடைகளை தாக்கும் கால்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்காணை மற்றும் வாய்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 4-வது சுற்று வருகிற 6-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாள்களும், விடுபட்ட கால்நடைகளுக்கு டிசம்பர் 10-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை பராமரிப்புக்கான பரிசுகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன புல் கரணைகள், தாது உப்பு கலவைகள் ஆகியவற்றை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத தொலைதூர உட்கிராமங்களில் பொதுமக்களுக்கு கால்நடை வசதி கிடைக்கும் வகையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், சிறு கண்காட்சி, சிறந்த கால்நடை வளர்ப்பு முறை பின்பற்றும் விவசாயிகளுக்கு விருது மற்றும் கன்றுகளுக்கு பரிசு வழங்குதல், சுகாதார நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.

    மாவட்டத்தில் 300 முகாம்கள்

    2023-2024-ம் நிதியாண்டில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் நாமக்கல் மாவட்டத்தில் 300 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே கால்நடை முகாம் நடைபெறும்போது கிராம மக்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    முகாமில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஏ.கே.பாலச்சந்திரன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் அருண் பாலாஜி, உதவி இயக்குனர்கள் மருதுபாண்டி, முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், குடல் புழு நீக்க பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், காளகஸ்தி நாதபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு செம்பனார்கோயில் கால்நடை மருத்துவர் அன்பரசன் தலைமையில் டாக்டர்கள் சுதா, பிரபாவதி, மோனிஷா ஆகியோர் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

    மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், மலடு நீக்குதல், குடல் புழு நீக்குதல் மற்றும் ஆடு, கோழி, நாய்களுக்கு நோய் தடுப்பூசிகளும் போடப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடு களை ஊராட்சி தலைவர் ஜோதிவள்ளி, துணை தலைவர் சரவணன் ஆகியோர் செய்திருந்னர்.

    முகாமில் ஏராளமான கிராம மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதில் வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் பொறுப்பா ளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள்‌ முதல்- அமைச்சர்கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும்‌ சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில்‌ கால்நடைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சைகள்‌ உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகள்‌ அளிக்கப்படும்‌.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தை அடுத்த கூனவேலம்பட்டி யில் முன்னாள் முதல்- அமைச்சர்கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.விழாவை கலெக்டர் டாக்டர். உமா தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல் ஆவின் ஆகிய துறைகள் இணைந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 27.06.2023 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1,125 கால்நடைகளும்,

    இரண்டாம் கட்டமாக 21.7.2023 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1,202 கால்நடைகளும் பயனடைந்துள்ளன. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கூனவேலம்பட்டியில் நடத்தும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். இலவச செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்படும். ஸ்கேன் கருவி மூலம் ஆடு, மாடுகளுக்கு சினை பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஆடு, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்படும். மாடு, கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

    செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும். ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். ரத்தம், பால், தோல் மற்றும் சாண மாதிரிகள் பரிசோதனை, மடிநோய் கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்படும்.

    மேலும் இலவசமாக தீவனக் கரணைகள் மற்றும் விதைகள் வழங்கப்படும். சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கறவைப் பசு பராமரிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து நிபுணர்கள் சிறப்புரை மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கால்நடைகளை முகா மிற்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மருத்துவர் (பொறுப்பு) பாலசுப்பரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் நடராஜன், துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) மருத்துவர்.டி.என்.அருண்பாலாஜி, உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மருத்துவர் என்.மருதுபாண்டி, உதவி பொது மேலாளர் (ஆவின்) லிடியா, ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி, கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண்டபத்தில் 26-ந்தேதி சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • குடற்புழு நீக்க மருந்துகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கலைஞ ன் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான 3 கால்நடை மருத்துவ முகாம்கள், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்தில் 2-வது முகாமானது வருகிற 26-ந்தேதி ராமநாதபுரம் கோட்டம் மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி கிராமத்தில் நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் கால்நடை களுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணி கள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள் கண்டறிதல், ரத்தம், சளி, பால் ஆகிய மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, இதன் தொடர்பான நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போர்களுக்கு விளக்கப்பட உள்ளது. கிடேரி கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. அத்துடன் சிறந்த கறவைப் பசு மற்றும் கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    விவசாயிகள் தங்கள் கால்நடைகளை சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்து இத்திட்டத்தின் மூலம் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படுகிறது.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர்அருகே பெரு ந்தரக்குடி ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    இச்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட வைகள் மேற்கொள்ளப்படு கிறது. மேலும், ஸ்கேன் மூலம் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளா றுகள் கண்டறியப்படுகிறது. இம்முகாமினை கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதனைதொடர்ந்து, கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல் கரணைகள் உள்ளிட்ட வைகளை கால்நடை வளர்ப்போரிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார். வெள்ளாடு, நாய், ஆடு, மாடு உள்ளிட்ட 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பால் உற்பத்தியாளர் 3 நபர்க ளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்வில், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் ஹமீது அலி, ஊராட்சி மன்றத்தலைவர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் உடனிருந்தனர்.

    • சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறை, ஆவின் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

    தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதில் 1,037 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் பணி, மலடுநீக்க சிகிச்சைப் பணி, தடுப்பூசிப்பணி, சிறு அறுவை சிகிச்சைப்பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சிறப்பு கண்காட்சிகள், பால் தீவனம் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விளக்கவுரை, தீவனப்பயிர் கண்காட்சி, ஆவின் பால்பொருட்கள் கண்காட்சி, கால்நடை பண்ணைகள் குறித்து புத்தக கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்போர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    முகாமில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கோவில் ராஜா, ராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ், ஆவின் பொது மேலாளர் ஷைக் முகமது ரபி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முகாமை தொடங்கி வைத்தார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொது மேலாளர் சாந்தி வரவேற்றார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜகுமார், துணைப் பதிவாளர் பால்வளம் செல்வம், உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர். சிறந்த பசுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.
    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.

    மேலும், 3 நாள் நடைபெறும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த இதர மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன.

    நடபாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 12-ந் தேதி இணைய வழியில் தொடங்கியது. வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு மற்றும் கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்பு கள் என மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பித்துள்ளனர். நடபாண்டில் புதிய மருத்துவ படிப்புகளோ, புதிய கல்லூரிகளோ தொடங்கப்படவில்லை.

    தமிழகத்தை பொறுத்தவரை கறிக்கோழிக்கு 1.5 லட்சம் டன், கோழி பண்ணைகளுக்கு 2 லட்சம் டன், கறவை மாடுகளுக்கு 2 லட்சம் டன் அடர் தீவனம் மாதந்தோறும் தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள் தீவனப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை டாக்டர்கள் மகேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×