search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kayatharu"

    • கயத்தாறு அருகே உசிலாங்குளம் கிராமத்திதை சேர்ந்தவர் உபேந்திரன் (வயது 35).
    • இவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள உசிலாங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் உச்சிமாகாளி. இவரது மகன் உபேந்திரன் (வயது 35). இவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர். வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். திருட்டு போன வீட்டில் பல்வேறு இடங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    • ரூபன் சென்னையில் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார்.
    • சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரூபன்(வயது 42). இவர் மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி வைத்து நடத்தி வருகிறார். ேமலும் சென்னையில் கியாஸ் நிறுவன வினியோகஸ்தராகவும் உள்ளார்.

    ரூ.10 லட்சம்

    ரூபன் சென்னையில் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார். அதை மீட்பதற்காக ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பணத்தை ஒரு பையில் போட்டு அதை பஸ்சில் பயணிகள் பொருட்கள் வைக்கக்கூடிய இடத்தில் ரூபன் வைத்திருந்தார்.

    அந்த பஸ் இரவு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன் நின்றது. அதில் இருந்த ரூபன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலில் டீ சாப்பிட்டார். அப்போது பணம் இருந்த பைைய பஸ்சிலேயே வைத்து விட்டு வந்திருந்தார்.

    பணப்பை திருட்டு

    சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. மர்ம நபர் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


    இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பஸ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் வாங்கப்பட்டது.

    அந்த புதிய பஸ்சில் 6 சி.சி.டி.வி.காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்து பார்த்தபோது, அதே பஸ்சில் பயணம் செய்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பணப்பையை லாவகமாக எடுத்துக்கொண்டு தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    தனிப்படை விரைவு

    அதனைவைத்து பஸ் கண்ட்ரக்டரிடம் இருந்த பயணிகளின் முகவரியை சோதனை செய்தபோது அந்த நபரின் செல்போன் எண் கிடைத்தது. அதனை வைத்து சிக்னல் மூலமாக போலீசார் ஆய்வு செய்தபோது பணப்பையை திருடிக்கொண்டு அந்த வாலிபர் திருவாரூரை நோக்கி தப்பிச்செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடிக்க அங்கு தனிப்படை விரைந்துள்ளது.


    • நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

    அதில் அவர்கள் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். தற்போது அவை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோரின் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் அனைக்கப்பட்டது. எனினும் அவர்களது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. சேதமான பயிர்களின் மதிப்பு ரூ.1 ½ லட்சம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஜெயக்குமார் கயத்தாறு போலீசில் புகார் செய்தார். அதில், தனக்கு வேண்டாத சிலர் தோட்டத்தில் உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு தீவைத்து சென்றுள்ளனர். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    • கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    • பின்னர் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10,12, வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கயத்தாறு:

    கயத்தாறில் முன்னாள் ராணுவ வீரர்கள் புதிய அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை குத்துவிளக்கு ஏற்றினார். ராணுவ வீரர் சங்க தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் சுப்புலட்சுமி, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், சங்க செயலாளர் நிறைபாண்டிசாமி, பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது கலெக்டர் செந்தில் ராஜ் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் ராணுவ வீரர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10,12, வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கலெக்டர் செந்தில்ராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    • நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
    • 35 வகையான உணவு பொட்டலம் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் தெற்கு கோனார் கோட்டை கிராமத்தில் நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மக்கள் 110 பேருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை செட்டி குறிச்சி பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினர்.

    இதில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனம், ஏழை, எளியோர், முதியோர், ஊனமுற்றோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 110 பயனாளிகளுக்கு 25 கிலோ அரிசி பை, 32 வகை மளிகை பொருட்கள், 2 லிட்டர் சமையல் எண்ணெய் உட்பட 7 லட்சம் மதிப்புள்ள 35 வகையான உணவு பொட்டலம் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சஜின், ஜஸ்டின், பென்சீர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சிமன்ற தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கால்நடைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளும், மருந்து- மாத்திரைகள் வழங்கினர்

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் பொன்னுச்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமை தூத்துக்குடி மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி இயக்குனர் டாக்டர் விஜய்ஸ்ரீ, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் மனோஜ் குமார், புனிதா ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகளும், மருந்து- மாத்திரைகள் வழங்கினர். இதில் 550 பசு மாடுகள், 1700 செம்மறி ஆடுகள், 360 வெள்ளாடுகள், 400 கோழிகள் ஆகியவற்றிற்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை கயத்தாறு கால்நடை மருத்துவ அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

    • விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.
    • கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது.

    கயத்தாறு:

    நெல்லை டவுன் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி ( வயது 30 ). இவர் கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

    கயத்தாறு அருகே நாற்கர சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனயில் சிகிச்கைக்காக சேர்த்தனர். கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அருந்து சாலையில் விழுந்தது.

    விபத்துக்குறித்து தகவல் அறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, தனிப்பிரிவு ஏட்டு பிரித்தீவிராஜ் மற்றும் போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மின்வாரிய பணியாளர்களும் விபத்து பகுதிக்கு சென்று துரிதமாக பணிகளை மேற்கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது. 

    • கயத்தாறு அருகே சாஸ்தா கோவிலில் உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
    • சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமத்தில் பூலுடையார் சாஸ்தா, கொம்பு மாடசாமி கோவில் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கோவிலில் உள்ள 3 உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா கிருஷ்ணன் மற்றும் நாட்டாமைகள் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டோனிதீலீப், காசி லிங்கம், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்-கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள்- மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. #Rain

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தென்காசி, செங்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் நேற்று பகல் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது. ஆனால் பிற்பகல் கருமேகங்கள் திரண்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    ஆலங்குளத்தில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதில் ஆலங்குளம் ஜோதிநகர் பகுதியில் ஆங்காங்கே மரங்களும், 7 மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் ஆலங்குளம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாப்பாக்குடி அருகே உள்ள இலந்தகுளத்தில் மின்னல் தாக்கியதில் தேவ அருள் குமார் என்பவரின் பசுமாடு பலியானது.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவில்பட்டி, கழுகுமலை பகுதியிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கயத்தாறு பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கழுகுமலையில் 10 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் ஆய்க்குடியில் 15.2 மில்லி மீட்டரும், தென்காசியில் 14.3 மில்லி மீட்டரும், சங்கரன் கோவிலில் 10 மில்லி மீட்டரும், குண்டாறு அணை 5 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவி 3 மில்லி மீட்டரும், செங்கோட்டை 2 மில்லி மீட்டரும், சிவகிரி மற்றும் அடவிநயினாரில் 1 மில்லி மீட்டரும் மழையும் பெய்துள்ளது.

    கோடை மழையின் போது இடி-மின்னலுடன் சூறாவளி காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் பயிரிடப் பட்டுள்ள வாழை மரங்களும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் புகார் செய்து வருகிறார்கள்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 4.86 கன அடி தண்ணீர் மட்டுமே பாபநாசம் அணைக்கு வந்தது. ஆனால் இன்று பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 71.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 17 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 49.28 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 75.72 அடியாக உள்ளது.

    குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்றும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை வெயிலுக்கு இதமாக வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து குளிக்க தொடங்கியுள்ளார்கள். இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  #Rain

    நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது19). இவர் 11-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று சுரேஷ் பொருட்கள் வாங்குவதற்காக நாற்கர சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி ஆகியோர் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து விசாரணையின் பேரில் சாத்தூர் சோதனை சாவடியில் சுரேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மடக்கி பிடித்தார். பின்னர் காரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த அய்யாத்துரை மகன் மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் இறந்ததாக சான்றிதல் வழங்கப்பட்ட முதியவர் ஓய்வுதியம் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீருத்து கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி(வயது85). முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் வர்மக்கலை படித்தவர். வயதான காலத்தில் இவருக்கு அரசு சார்பாக முதியோர் பென்சன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குருசாமிக்கு வரவேண்டிய முதியோர் பென்சன் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருசாமி கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அதற்கு தாலுகா அலுவலக அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை.

    இதையடுத்து அவர் தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேசிடம் மனு கொடுத்தார். பின்பு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர் மனு அனுப்பினார். இதுபற்றி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ அனிதா இதுபற்றி விசாரணை நடத்தினார். அப்போது கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் குருசாமி இறந்துவிட்டார் என அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி அறிக்கை கொடுத்து பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குருசாமி மீண்டும் தாலுகா அலுவலகம் சென்று தனக்கு முதியோர் பென்சன் நிறுத்தப்பட்டது ஏன் என கேட்டார். அதற்கு அதிகாரிகள் நீங்கள் இறந்து விட்டீர்கள். அதனால் உங்களுக்கு பென்சன் கிடையாது என்றார்களாம். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குருசாமி மீண்டும் மனு கொடுத்தார். அதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதன்பிறகே அதிகாரிகள் தங்கள் தவறு செய்ததாக கலெக்டர் அலுவலகத்துக்கு பதில் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குருசாமிக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.#tamilnews
    ×