search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "house breaking"

    • கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (32). கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த கண்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கண்ணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து 20 பவுன் நகை-பணம் கொள்ளை போனது.
    • நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை அடுத்துள்ள சுவாமி மல்லம்பட்டியை சேர்ந்தவர் பரசுராமன்(74),ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மனைவி ஞானம்மாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரசுராமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.17 ஆயிரம் ரொக்கம் திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய பரசுராமன் பீரோவில் இருந்த நகை-பணம் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் ராஜாநகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கயத்தாறு அருகே உசிலாங்குளம் கிராமத்திதை சேர்ந்தவர் உபேந்திரன் (வயது 35).
    • இவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள உசிலாங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் உச்சிமாகாளி. இவரது மகன் உபேந்திரன் (வயது 35). இவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர். வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். திருட்டு போன வீட்டில் பல்வேறு இடங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    • இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது
    • பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சார்ந்தவர் ஜனகராஜ் என்பவரது மகன் சந்தோஷ் குமார் (27).

    தனியார் மில்லில் பிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது தாயார் ஜெயந்தியை வீட்டில் விட்டுவிட்டு இவரும் இவரது மனைவி தாரணியும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று உள்ளனர். வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்துள்ளார்.

    இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ லாக்கரும் உடைக்கப் பட்டு இருந்தது.

    அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் காணாமல் போயிருந்தது. உடனடியாக அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்து பார்த்த சந்தோஷ் குமார்

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் கல்லூரி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கல்லூரி நகரில் உள்ள வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று காலை தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அறையில் இருந்து பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மயிலம் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் பணத்தைத் திருடிச் சென்றனர்.
    • பீரோவை உடைத்து பீரோவில்இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே செக்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபால் மனைவி பாலா (வயது 60) . கணவர் இல்லை வீட்டில் தனியாக வாஸ்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் இவரு வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்து பீரோவில் உடைத்து விரைவில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றனர். இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×