search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்பென்டர் வீட்டு பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை
    X

    கார்பென்டர் வீட்டு பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை

    • கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (32). கார்பென்டராக வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம் போல் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இரவு 8.30 மணியளவில் கண்ணன் வீட்டிற்கு திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த கண்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கண்ணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×