search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 2 லட்சம் திருட்டு
    X

    கயத்தாறு அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 2 லட்சம் திருட்டு

    • கயத்தாறு அருகே உசிலாங்குளம் கிராமத்திதை சேர்ந்தவர் உபேந்திரன் (வயது 35).
    • இவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள உசிலாங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் உச்சிமாகாளி. இவரது மகன் உபேந்திரன் (வயது 35). இவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர். வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். திருட்டு போன வீட்டில் பல்வேறு இடங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    Next Story
    ×