என் மலர்
தூத்துக்குடி
- வழக்கமாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பாக நடந்துவருகிறது.
- பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கடல் வழக்கமாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பாக நடந்துவருகிறது. அந்த வகையில் ஆனி மாத பவுர்ணமி நாளான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி அருகே சுமார் 80 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாசி படிந்த பாறைகள் மீது செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஆனாலும் கோவில் அருகில் கடல் இயல்பான நிலையில் உள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி வருகின்றனர்.
- ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.
- எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:
இனிமேல் எந்த காலத்திலும் பா.ஜ.க.வோடு நாங்கள் கூட்டணி சேர மாட்டோம், அவங்க தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவிட்டு, போன தேர்தலில் அவங்க கூட கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது திடீரென்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு கூட்டணி தேர்தல் வியூகம் அமைக்கிறோம் என்று சொல்லி யார் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்களோ அவர்களை விட மிகப்பெரிய துரோகிகளாக அ.தி.மு.க. அவங்ககூட போய் சேர்ந்துவிட்டது.
அதனால் தான் அவர்களை வீடு வீடாக போய் அடையாளம் காட்டக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது.
அதேநேரத்தில் இத்தனை தாக்குதல்கள்... ஒன்றிய அரசாங்கம் நம் தமிழ் அடையாளங்கள் மீது நம்முடைய சரித்திரத்தை மாற்றணும், மொழியை மாற்றணும், ஏன் 39 பேர் பாராளுமன்றத்தில் நின்னு தமிழ்நாட்டுக்காக சண்டை போடுறாங்க என்ற காரணத்திற்காக தொகுதி சீரமைப்பு என்று சொல்லி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை குறைக்க நினைக்கக்கூடிய ஒரு பா.ஜ.க. அரசு ஆட்சி நடக்கிறது.
இன்று 39 பேராக இருப்பது நாளை 20 பேராக குறைந்தால் அவ்வளவு பெரிய மன்றத்தில் நாம் பேசுவது எடுபடாது. அதனால் அந்தநிலையை நாம் அடைந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றவர் நம் முதலமைச்சர்.
ஆனால் அதை செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் தெரிய வேண்டும்.
அதை செய்ய வேண்டும் என்றால், நமக்காக போராட வேண்டும் என்றால் உங்களுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது புரிய வேண்டும்.
ஒன்றிய அரசாங்கத்தோடு எதற்கெல்லாம் நம் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்.
புதிதாக அரசியலுக்கு வந்து ஜெயிச்சிருவேன் என்று நினைத்து எது ஒன்றிய அரசாங்கம், எது மாநில அரசாங்கம் என்று வித்தியாசமே தெரியவில்லை.
ஆட்சி மாற்றம் டெல்லியில் வரும்போது செய்து தருகிறோம் என்று சொன்னோம்.
வித்தியாசம் தெரியாமல் பேசக்கூடியவர்கள் எல்லாம் இன்று தேர்தலில் நிற்பதற்கு, வாக்கு கேட்பதற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
அதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்த இடத்திலும் தடை இல்லாமல் கொண்டு சென்று, அதே நேரத்தில் நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்பதை எடுத்துச்சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீடி இலைகளை கைப்பற்றி லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் கடற்கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டை மலை காட்டுப் பகுதி கொம்புத் துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை கண்டதும் அந்த வழியாக லாரியில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே இறங்கி இருளில் தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த லாரியில் போலீசார் சோதனை நடத்திய போது அதில் கொண்டு வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட 68 மூட்டைகளில் பீடி இலைகள் மொத்தம் 2ஆயிரத்து 250 கிலோ இருப்பதும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பீடி இலைகளை கைப்பற்றி லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.
- காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
- பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த 1-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2 நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன.
நேற்று காலை 8-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 9-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதுதவிர மாலையில் சுவாமி பெருமாளுக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.
நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடக்கின்றது. காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி விழாவை காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

பக்தர்கள் மீது புனிதநீர் தெளிப்பதற்காக டிரோன் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 20 டிரோன்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளன. இதன் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் நேற்று நேரில் பார்வையிட்டார்.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார். பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடக்கிறது.
- தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்தநிலையில் "திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை ஒட்டி ஜூலை 5 முதல் 8ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும்" என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
- கும்பாபிஷேக விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பில் நடைபெற்ற பெருந்திட்ட வளாகப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 1-ந்தேதி மாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கும்பாபிஷேக விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்றும் வரும் இறுதிகட்ட பணிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் இளம்பகவத், கோவில் தக்கார் அருள்முருகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் இன்று 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார்.
- கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, பரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, மூலவர் திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. கோவிலில் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மற்றும் கோவில் நிதியில் இருந்து. ரூ.100 கோடி என ரூ.300 கோடியில் 90 சதவீத மெகா திட்ட வளாக பணிகள் நிறைவு பெற்று தக்கார் அருள் முருகன் தலைமையில் மகா கும்பாபிஷேகப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 12 கால யாக பூஜை நடக்கிறது. நேற்று இரவு கோவில் கலையரங்கில் மாதவி வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை தொடங்கியது.
இதில் தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, பரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, மூலவர் திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது. மாலையில் 5-ம் கால யாக பூஜை நடக்கிறது அதில் தான்ய வழிபாடு வேள்விச் சாலை தூய்மை ஆகியவை நடக்கிறது.
வருகிற 7-ந் தேதி அதிகாலை 4மணிக்கு 12-ம் கால வேள்வி வழிபாடு, வேள்வி, மகா தீபாராதனை, யாத்ரா தானம், காலை 5.30 மணிக்கு கடம் மூலாலயப் பிரவேசம், 6.15மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், சுவாமி சண்முகர், ஜெயந்தி நாதர், நடராஜர்,குமரவிடங்க பெருமான் மற்றும் உள், வெளி பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பெரு நன்னீராட்டு, காலை 9 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்று சண்முகர் விலாசம் சேருதல் நடக்கிறது. பின்னர் சிறப்பு அபிஷேகம் இரவு 7மணிக்கு தங்க திருவாபரணம் அணிவித்து அலங்காரமாகி சண்முகர் தீப வழிபாடு பரிவார மூர்த்திகளுடன் வீதிஉலா வந்து சேர்க்கையில் சேர்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளார்கள் செய்து வருகின்றனர்.
- 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
- தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது.
இதற்காக எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி என ரூ.300 கோடி திட்டமதிப்பில் மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதிக்கு இணையாக பக்தர்கள் எளிதாக நீண்ட வரிசையில் வெகு நேரம் நிற்காமல் அமர்ந்து ஒய்வு எடுத்து அகன்ற திரையில் படம் பார்த்து தரிசனம் செய்யும் வகையில் பொதுத் தரிசன மண்டபம், நிர்வாக அலுவலக கட்டிடம், கலையரங்கம், பயணிகள் தங்கும் விடுதிகள் என முடிவுற்ற பணிகளை சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து மற்ற பணிகளுடன் ராஜ கோபுர பணிகள், விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மெகா திட்ட வளாக பணியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் கும்பாபிஷேகத்திற்கு பிறகு முடிவுறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
யாகசாலையில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலையில் வேள்விசாலை வழிபாடு நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை (1-ந்தேதி) முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகப் பணி தொடங்குகிறது. 12 கால யாகபூஜைகள் நடக்கிறது. வருகிற 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கும்பாபிசேகம் நடைபெற்று சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது. பின்னர் புனித நீர் டிரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்க படுகிறது.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட் கிழமை) நடைபெறுகிறது.
15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.
கும்பாபிஷேக விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.
இதையொட்டி விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேக விழா வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. இதையொட்டி பிரமாண்ட யாகசாலை மண்டபங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
கோவில் வளாகம் கும்பாபிஷேகம் நடைபெறும் இடம், யாகசாலை மண்டப பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக இறுதி கட்ட பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
ஆய்வின்போது கலெக்டர் இளம்பகவத், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட்ஜான், கோவில் தக்கார் அருள் முருகன், இந்துசமய அறநிலையத்துறை அதிகா ரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தக்கார் அலுவலகத்தில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கும்பாபிஷேக யாகசாலை மற்றும் அதன் பாதுகாப்பு பணி, கோவில் சார்பில் கட்டப்பட்ட 52 அறைகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கும்பாபிஷேகத்தின்போது கோவில் வளாகம் மற்றும் கோவில் விமான தளத்தில் எவ்வளவு பக்தர்களை அனுமதிக்க முடியும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இறுதி கட்ட ஆய்வு நடத்தி வருகிற 2-ந் தேதி தெரியவரும். பக்தர்களுக்கு தேவையான தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள், கோவில், உபயதாரர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதானம் வழங்கும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு, மருத்துவ வசதிகளும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. 90 சதவீதத்திற்கும் மேலான கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தக்கார் அருள் முருகன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
- யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும்.
- கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் தக்கார் அருள் முருகன் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞான சேகரனிடம் சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு தாம்பூலம் பெறுதல் நடந்தது.
நேற்று காலையில் விநாயகர் வழிபாடு வேள்வி, மாலையில் எண் திசைத் தேவர்கள் வழிபாடு திசா சாந்தி வேள்வி நடந்தது. இன்று காலையில் நவக்கிரக வேள்வி, மாலையில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டி தேவதை வழிபாடு நடக்கிறது.
வருகிற 1-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. 12 கால யாக பூஜைகள் நடக்கிறது. இதற்காக 2 இடங்களில் பிரம்மாண்டமான வகையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நந்தி, மயில் அலங்காரத்துடன் யாககுண்டம் அமைந்துள்ள பகுதிகள் தங்கநிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் கிரி பிராகாரத்திலுள்ள மரங்கள் உள்ளிட்ட இடங்களில் அலங்கார விளக்குகள் தொடங்க விடப்பட்டுள்ளன.
7-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாக வழிபாடு நடைபெற்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50மணிக்குள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பின்னர் 20 இடங்களில் டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) மதியத்தில் இருந்து மறுநாள் 7-ந் தேதி மதியம் வரை பக்தர்கள் சுவாமி மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மதியத்திற்கு பிறகுதான் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் சுவாமி சண்முகரை தரிசனம் செய்யலாம்.
யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள் பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 1,500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 400 பஸ்கள் திருச்செந்தூர் வந்து செல்கின்றன. அதனுடன் சேர்த்து மொத்தம் 855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் தனியார் வாகனங்கள் நிறுத்த 18 வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிப்பிடம், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 30 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
மேலும் கூடுதலாக பல்வேறு இடங்களில் பக்தர்கள் வசதிக்காக 824 தற்காலிக கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட உள்ளது. சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
ஜூலை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மூலம் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
60 அகன்ற எல்.இ.டி.திரை மூலம் வாகன நிறுத்தும் இடங்கள், பஸ் நிறுத்தும் இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஜூலை 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கோவில் நிர்வாகம் சார்பில் 20 இடங்களில் அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஒரே நேரத்தில் 1500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.
- திருச்செந்தூர் நகரத்தை சுற்றி பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வருகிற 7-ந்தேதி காலை 6.15 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்காக நடைபெற்று வந்த பல்வேறு கட்ட திருப்பணிகள் முடிவுற்று நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற 30-ந்தேதிக்குள் 90 சதவீதம் வேலைகள் முடிவடையும் என கூறப்படுகிறது.
கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களை வரவேற்க கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட 'கருணைக் கடலே கந்தா போற்றி' பதாகை நேற்று இரவு பூஜை செய்து திறந்து வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் ஒருவழி பாதை வழியாக வந்து எளிதாக செல்லும் வகையில் கடற்கரையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் 1500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. அதில் கழிப்பிடம், குடிநீர் வசதி இருக்கும். 824 தற்காலிக கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் ஜெஜெநகர் பகுதியில் நிறுத்த தற்காலிக வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் பக்தர்கள் அந்த பகுதி நத்தக்குளம் வடிகால் கால்வாயை கடந்து செல்ல தற்காலிக மேம்பாலம் அமைக்கப்பட்டு பக்தர்கள் அந்த வழியாக நேராக கோவிலுக்கு வரும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் நெல்லை மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் வேட்டையாடி மடம் அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதை போல் நாகர்கோவில் மார்க்கமாக வரும் பக்தர்கள் வாகனங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் அருகில் வாகன நிறுத்தம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை கட்டணமின்றி அரசு பஸ்களில் ஏற்றி வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் நகரத்தை சுற்றி பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயக்கப்படும் பஸ்கள் போக கூடுதலாக 855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும். 20 இடங்களில் டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அறுசுவை உணவுடன் அன்னதானம் நடைபெற உள்ளது. இதனை 10-ம் தேதி வரை நீட்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில் 20 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- விருதுநகருக்கு சென்று, அங்கிருந்து சென்னை செங்கோட்டை செல்லும் ரெயில் திருவாரூருக்கு வீர பிரசாத் செல்ல இருந்துள்ளார்.
- அந்தியோதயா ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் வீர பிரசாத் (வயது 28). இவர் திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். நேற்று வீர பிரசாத் தனது மனைவி பிருந்தா மற்றும் 1½ வயது ஆண் குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக கோவில்பட்டி ரெயில்வே நிலையத்துக்கு வந்துள்ளார். சென்னை தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரெயில் மூலமாக விருதுநகருக்கு சென்று, அங்கிருந்து சென்னை செங்கோட்டை செல்லும் ரெயில் திருவாரூருக்கு வீர பிரசாத் செல்ல இருந்துள்ளார்.
வழக்கமாக வரும் நேரத்தை விட 15 நிமிடம் தாமதமாக அந்தியோதயா ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையம் 2-வது நடைமேடையில் வந்து கொண்டு இருக்கும்போது நிற்பதற்குள். ரெயிலில் வீர பிரசாத் ஏற முயன்றுள்ளார். அப்போது கால் தவறி நடைமேடைக்கும் ரெயிலுக்கு இடையில் சிக்கி கொண்டார். நல்வாய்ப்பாக ரெயில் நின்றதால் பெரும் விபத்து ஏற்படவில்லை. சிக்கி கொண்ட அவரால் வெளியே வர முடியாமல் பரிதவித்து கொண்டிருந்தார்.
இதையடுத்து நடைமேடையை எந்திரம் மூலமாக உடைத்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வீர பிரசாத் மீட்கப்பட்டார். இதில் அவருக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்தியோதயா ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. இந்த சம்பவம் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.