search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMDK"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார்.
    • விஜயகாந்திற்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

    80-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.


    நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும், விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த நாசர், "விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி மிகைப்படுத்தின செய்தி. நாங்கள் தலைமை மருத்துவரை பார்த்தோம். அவர் மிகவும் தெளிவாக 'விஜயகாந்த் வருவார் உங்களை பார்ப்பார்' என்று சொல்லிவிட்டார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தின செய்திகளை பரப்பாதீர்கள்" என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • விஜயகாந்துக்கு கடந்த 14 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவரது மார்பில் அதிக அளவு சளி தேங்கியதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் பின்னர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

    ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்தின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு நுரையீரல் தொற்று தொடர்பான சிகிச்சை தேவைப்படுவதால் 2 வாரங்களுக்கு ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியது உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

    இதையடுத்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் இன்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொண்டையில் சிறிய குழாயை பொருத்தி அதன் மூலமாகவே அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இது தொடர்பாக ஆஸ்பத்திரி சார்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் சீராக மூச்சு விடுவதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நந்தம்பாக்கம் மியாட் ஆஸ்பத்திரியில் விஜயகாந்துக்கு கடந்த 14 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் மூலமாக கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
    • சென்னையில் பெய்து வரும் மழை மற்றும் குளிர்ச்சியான சூழல் ஆகியவையும் அதற்கு காரணமாக அமைந்துள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டன. அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும் அவர் சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது உடல் நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    பேச முடியாமல் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த்தால் நிற்கவும் முடியாது. இதனால் எங்கும் செல்லாமல் விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி விஜயகாந்த்தின் உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. மூச்சுவிட முடியாமல் அவர் திணறினார். இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் விஜயகாந்தை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. அதிக அளவில் சளி தேங்கிய காரணத்தினாலேயே விஜயகாந்த் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அது தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு விஜயகாந்த்துக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் இயல்பு நிலையில் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இதனால் விஜயகாந்த் சில நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் விஜயகாந்தின் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த்துக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை தேவைப்படுவதாகவும், எனவே 14 நாட்கள் வரையில் அவர் சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் மூலமாக கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சு விடுவதில் அவருக்கு தொடர்ச்சியாக சிரமங்கள் இருந்து வருகின்றன. நுரையீரலில் சளி பாதிப்பால் ஏற்பட்ட தொற்றில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்தால் அதில் இருந்து வேகமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.

    சென்னையில் பெய்து வரும் மழை மற்றும் குளிர்ச்சியான சூழல் ஆகியவையும் அதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் விஜயகாந்தின் உடல் நிலையில் நேற்று முன்தினம் பின்னடைவு ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு அவர் திணறினார். இதையடுத்து மார்பு பகுதியில் இருக்கும் சளியை அகற்றுவதற்கு விஜயகாந்துக்கு மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இன்னும் 2 வாரங்களுக்கு மேல் விஜயகாந்துக்கு ஆஸ்பத்திரியிலேயே தொடர் சிகிச்சை அளித்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். மார்பில் தேங்கியுள்ள சளியை முழுமையாக அகற்றுவதற்கு விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே வீடடுக்கு அழைத்துவர குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் விஜயகாந்த் நலம் பெற வேண்டுவதாக தெரிவித்தனர்.
    • பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலையில் கடந்த 18-ந்தேதி பின்னடைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு அவர் சிரமப்பட்டார். கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையும் ஏற்பட்டது.

    இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து நேற்று ஒரே நாளில் மருத்துவமனை சார்பில் 2 அறிக்கைகள் வெளியிடப்பட்டதால் தே.மு.தி.க. தொண்டர்கள், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் விஜயகாந்த் நலம் பெற வேண்டுவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர், அன்பு சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
    • ‘பை பாஸ்’ என்று அழைக்கப்படும் ஆக்சிஜனை செயற்கையாக செலுத்தும் சிகிச்சை விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    குரல் வளையில் பாதிப்பு ஏற்பட்டு பேசுவதற்கு சிரமப்பட்டு வரும் விஜயகாந்தால் எழுந்து நிற்கவும் முடியாது. இதனால் தனது பிறந்த நாட்களின்போது தே.மு.தி.க. அலுவலகத்தில் சேரில் அமர்ந்தபடியே ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

    வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் விஜயகாந்த்தின் உடல்நிலையில் கடந்த 18-ந்தேதி பின்னடைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு அவர் சிரமப்பட்டார். கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையும் ஏற்பட்டிருந்தது.

    இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக கடந்த 23-ந்தேதி மியாட் ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை என்று மியாட் ஆஸ்பத்திரி சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மியாட் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரான பிரித்வி மோகன் தாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விஜயகாந்த்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதால் மேலும் 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இது கட்சியினர் மத்தியிலும், விஜயகாந்த் குடும்பத்தினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த்தின் நெஞ்சு பகுதியில் சளி அதிகமாக சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் மூச்சு விடுவதற்கு கடுமையாக சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காகவே விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'பை பாஸ்' என்று அழைக்கப்படும் ஆக்சிஜனை செயற்கையாக செலுத்தும் சிகிச்சை விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    நுரையீரலில் சேர்ந்துள்ள சளியை முழுமையாக அகற்றி விஜயகாந்த்துக்கு ஏற்பட்டுள்ள சுவாச பிரச்சனையை சரி செய்ய டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். 2 வாரங்கள் வரையில் விஜயகாந்த்துக்கு இது தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜயகாந்தின் உடல்நிலை 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லை.
    • அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இன்று (நவம்ர் 29) மட்டுமே இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் கடைசியாக வெளியான அறிக்கையில், "தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது," என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    கேப்டன் விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக அறிக்கை வெளியானது முதல், திரைத்துறை பிரபலங்கள் துவங்கி அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலத்தரப்பினரும் விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் நலமாக இருக்கிறார் என்றும் விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, அனைவரையும் சந்திப்பார் என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் கடந்த 18-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விஜயகாந்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    இந்நிலையில், இன்று 2-வது முறையாக விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிராக்கியஸ்டமி செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது.

    விஜயகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ந்தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்னும் 14 நாட்கள் விஜயகாந்துக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.
    • விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

    அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
    • விஜயகாந்திற்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.

    இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.

    இவ்வாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மார்பு சளி, இருமலால் செயற்கை சுவாசக் கருவியுடன் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார், விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக் கருவியுடன் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விஜயகாந்திற்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளது. அவர் இயற்கையாக சுவாசிக்கிறார் எனவும், அவர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.