என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ராஜகண்ணப்பன்"

    • தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
    • எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. ஆட்சியில் பங்கு கொடுத்தால் நல்லது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வின் 26-வது ஆண்டு கொடிநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்ல நாளில் விஜயகாந்த் பெயரில் முதல் விருப்ப மனு இன்று கொடுத்திருக்கிறோம். இதே நாளில் தான் ஏற்கனவே 2011-ம் ஆண்டு விஜயகாந்த் அவரது விருப்ப மனுவை கொடுத்தார். இப்போது மீண்டும் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பெயரில் முதல் விருப்ப மனுவை இன்று நான் கொடுத்திருக்கிறேன்.

    2-வது விருப்பமனுவை நான் கொடுத்திருக்கிறேன். 3-வது விருப்பமனுவை விஜய பிரபாகர் கொடுத்து உள்ளார். இன்று நிர்வாகிகள், தொண்டர்கள், பெருவாரியானோர் விருப்ப மனு கொடுத்து உள்ளனர்.

    இந்த தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நாங்கள் உழைப்பால் வெற்றி பெற்று வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்போம் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நாங்கள் தே.மு.தி.க.வுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சொல்லும் போது, நாங்கள் 2 பக்கமும் பேசுவதாக தவறான செய்தியை யார் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    எங்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியைதான் இந்த முறை நாங்கள் அமைப்போம்.

    தே.மு.தி.க.வை பொருத்த வரைக்கும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    கேள்வி: தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. பற்றி விமர்சனம் செய்துள்ளாரே?

    பதில்: தே.மு.தி.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்கும் தெரியும். அந்த கருத்தை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்களுக்கு தெரியும். அதனால் அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க. விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்ட கண்ணியமான கட்சி. யாருடைய கருத்தும் எங்களை எந்த வகையிலும் பாதிக்காது. எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

    கேள்வி: ஆட்சியில் பங்கு என்பதில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன?

    பதில்: ஆட்சியில் பங்கு கொடுத்தால் நல்லது. அந்த உரிமையை பகிர்ந்தளிக்கும்போது தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் இதற்கான பதிலாக இருக்கும். இதுவரையில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறோம் என்பது யாருக்குமே தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர், ஆனையூரில் தி.மு.க. சார்பில் 'தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து கொள்வார். அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும். ஆனால் அந்த கட்சி வேண்டாமென்று சொல்லவில்லை.

    விஜயகாந்த் இருந்தபோது தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தது. மக்களிடமும் செல்வாக்கு இருந்தது. ஆனால் இன்று தே.மு.தி.க. இரு கட்சியினருடமும் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்கேயும் அங்கேயும் பேசுவது சரியாக இருக்காது. விஸ்வாசமாக இருந்து தே.மு.தி.மு.க. ஒரு பக்கம் வரவேண்டும்.

    த.வெ.க. பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதில் இருப்பவர்கள் எல்லாம் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து அரசியல் செய்தார். 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க. இயக்கம் தொடர்ந்து இயங்க வேண்டும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எடப்பாடி வியாபாரம் செய்து வந்தவர். தற்போது பா.ஜ.க.விடம் சிக்கிக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    தென் மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னை பெரிய ஆளாக நினைத்து கொள்கிறார். அவர் பெரிய ஆளாகவே இருக்கட்டும். ஆனால் ஒருவரை அழித்து வரக்கூடாது. தான் வாழ பிறரை கெடுக்க கூடாது. மேலூர் தொகுதியில் தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். இம்முறை மேலூரில் தி.மு.க. தான் போட்டியிடும். தலைமை முடிவு செய்யும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வருமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. எல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள் சொல்கிறேன் என்றார்.

    அண்மையில் மதுரை மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தி.மு.க. இல்லையென்றால் இண்டியா கூட்டணியே இல்லை. காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லை என்று பேசினார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கூட்டணி வைக்க முயற்சிக்கும் நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. குறித்து சர்ச்சக கருத்து கூறியிருப்பது கூட்டணிக்கு முட்டுக் கட்டையை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில்:

    தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரப்பர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது கூட்டத்தில் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற 17-ந்தேதி மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும்.

    அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கவால் குரங்குகள் மலைப்பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது.

    வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த முறை தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எனவே எதிர்காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும்.

    கேரளாவில் தனியார் காடுகள் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பணிகள் செய்ய கெடுபிடி காட்டுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள சட்ட திட்டங்களுக்கும், தமிழகத்தில் உள்ள சட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. கேரளாவில் அதிக மலைகள் உள்ளன. இங்கு மலைகள் குறைவு. நமது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அழகுமீனா, வன அலுவலர் அன்பு, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ரூ.5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • முதலமைச்சர் பங்கேற்ற அவர் துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் புகழ் பெற்ற மலர் கண்காட்சி நாளை முதல் (15ம் தேதி) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.

    மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டி சென்றுள்ளார்.

    தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் சென்றிருந்தனர். 

    அங்கு, தெப்பக்காடு யானைகள் முகாமில் ரூ.5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

    வன சரகர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.93 கோடி மதிப்பிலோன 32 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

     இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆனால், இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை. அவரது துறை சார்ந்த முக்கிய நிகழ்வில் கூட ராஜகண்ணப்பன் பங்கேற்காதது பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

    பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் இலாகாக்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடித்து வரும் ராஜகண்ணப்பன், முதலமைச்சர் பங்கேற்ற அவர் துறை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜகண்ணப்பனும், சர்ச்சையும்..!

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (பிடிஓ) பணியாற்றிய ராஜேந்திரன் என்பவரை தனது வீட்டிற்கு வரச்சொன்ன அமைச்சர், அங்கு அவரை அவரது ஜாதியைச் சொல்லி திட்டியதாக ராஜேந்திரன் ஊடகங்களிடம் குற்றம்சாட்டினார். இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆனால், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறையில்லை. தீபாவளிக்கு முன்பாக, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை வாங்குவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அமைச்சர் பதவியில் இருக்கும் ராஜகண்ணப்பன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், முதல்வர் கோப பார்வையில் இருந்து தப்ப முடியாது என பலரும் கருதினர்.


    ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சர்ச்சையில் சிக்கியும் ராஜகண்ணப்பனுக்கு இலாகா மட்டுமே மாறி வருகிறது. அதை மீறி எந்தவித நடவடிக்கையும் அவர் மீது இல்லை.

    இது ஒருபுறம் இருக்க.. முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பங்கேற்காதது திமுகவின் சீனியர் அமைச்சர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ராஜகண்ணப்பன் வரலாறு..!

    தனது அரசியலின் ஆரம்பக்கட்டத்தில் அதிமுகவில் இருந்தவர் ராஜகண்ணப்பன். 1991ம் ஆண்டு அதஇமுகவில் இருந்தபோது திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1991- 1996ம் ஆண்டுகளில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

    பிறகு, மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை தொடங்கிய ராஜகண்ணப்பன். 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006ம் ஆண்டு தனது கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

    2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார்.

    2009ம் ஆண்டில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலக மீண்டும் அதிமுகவில் இணைந்தார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தோல்வியடைந்ததை தொடர்ந்து, மீண்டும் திமுகவில் இணைந்தார்.

    2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு 1,01,901 வாக்குகள் பெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     

    2021ம் ஆண்டு மே 7ம் தேதி அன்று போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

    பிறகு, 2022ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றப்பட்டார்.

    தொடர்ந்து, மாற்றம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையில் ராஜகண்ணப்பனுக்கு பால்வளத் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டது.

    சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையில் வனத்துறை மற்றும் காதி துறையை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    • இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    • தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.

    மதுரை:

    மதுரை முத்துப்பட்டியில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் ரூ.23 லட்சம் மதிப்பிலான கட்டிடப் பணிகளை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் செயல்படும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் கடந்த ஆட்சியை விட திறம்பட செயல்பட்டு வருகின்றன.

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு துறை சார்பிலான பள்ளிகளில் நடைபெறும் கட்டிடப் பணிகளையும், வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

    இன்று மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளை மேம்படுத்த முதலமைச்சர் ரூ.100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

    மேலும் தமிழக முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் 1356 பள்ளிகளிலும், விடுதிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அரசு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், கள்ளர் சீரமைப்புத்துறை செயலாளர் நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசாணை வெளியானதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மாணவிகளின் நலன் கருதி சீர்மரபினர் மாணவிகள் விடுதி தொடங்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தேவர் கல்லூரி நிர்வாகம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவிகள் விடுதிக்கான இடங்களை தேர்வு செய்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவுக் கல்லூரியில் படிக்கும் 100 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் புதிதாக விடுதி கட்டிடம் கட்ட கடந்த 9-ந் தேதி அரசாணை வெளியானது.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம், மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    • திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார்.
    • போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே கண்டாங்கி பட்டியில் உள்ள மவுண்ட் லிட்டரா சி.பி.எஸ்.இ. பள்ளியில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மாநிலங்களுக்கு இடையே தமிழக மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 19 வயதுக்குட்பட்ட 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இறுதி நாள் போட்டியில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்துகொண்டு பரிசு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் பல தடைகளை மீறி சிறப்பான மக்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். 8½ கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் குறை இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை.

    திராவிட இயக்கங்களின் மாபெரும் தலைவர்கள் மறைந்த பிறகு ஒருங்கிணைந்த தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையில் அனைவரும் அணி திரள வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட மாணவ விடுதிகளில் உணவு, சமையலறை, கூடுதல் இடவசதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பனை விதைகள் நடும் தொடக்க விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
    • நிர்வாகிகள், உறுப்பினர்கள்‌ திரளாக கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பை யூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரி யம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி, சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாரா யணன் வழிகாட்டுதலின் படி பனை விதை நடும் விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வ நாதன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். அமைச்சர் ராஜ கண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி., பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், பனைமர வாரிய ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கலா கணேசன்,

    சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் பி.ஜி.ஜெகன், நாடார் பேரவை மாவட்ட தலைவர் வேல்முரு கன், சாயல்குடி பேரூர் கழக செயலாளர் ஜெயபால், நகர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர்கள் குலாம் மைதீன், ஆப்பனூர் ஆறுமுக வேல், கோவிந்தராஜ், அண்ணாமலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநி திகள், பனைமர தொழிலா ளர் நலவாரியம் சார்ந்தோர், மற்றும் பொதுமக்கள், தமிழ் நாடு நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள்.
    • முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் வினா-விடை நேரத்தில் வந்தவாசி தொகுதியில் கோரைப்பாய் நெசவு பூங்கா அமைக்க அரசு முன் வருமா? என வந்தவாசி எம்.எல்.ஏ. அம்பேத்குமார் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-

    கதர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வந்தவாசி மத்திய பாய் நெசவாளர்கள் மற்றும் கோரை உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் 1962 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உயர்ந்துள்ளது.

    சங்கத்தில் 36 வகைகளில் காதி கிராப்ட், அரசு மருத்துவமனைகள் சர்வோதய சங்கங்கள், அரசு பள்ளிகள், கல்லூரி விடுதிகள் அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் வாரியத்தால் நடத்தப்படும் கண்காட்சிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் விசைத்தறி மூலம் பாய்களை நெசவு செய்து வருகிறார்கள். இச்சங்கத்தின் பாய் வகைகள் கதர் வாரியத்தின் வழிகாட்டுதலின்படி உரிய வகையில் சந்தை படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியினால் தான் கதர் துறை ரூ.228 கோடியில் இருந்து ரூ.427 கோடியாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய ஒரு பாய் உற்பத்தி செய்யும் சங்கம் உள்ளது. வந்தவாசியிலும் சிறுபான்மையினர் சார்பில் அதிக நபர்கள் வசிக்கிறார்கள். இடம் வழங்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.

    ஆவூர் மற்றும் வந்தவாசியில் பாய் நெசவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். சீர்காழியில் இருக்கும் பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது இல்லை. அதே போன்று பாய் நெசவு பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று கீழ்பெண்ணாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப் பன், "ஆவூர் வந்தவாசி பாய் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து மின்சாரத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பாய் நெசவு தொழில் பொருட்கள் அரசு நிறுவனங்களுக்கு முறையாக அளிக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி அல்லது ஆவூரில் பாய் உற்பத்தியாளர் சங்கம் அமைக்கப்பட்டு பாய் நெசவுப் பூங்கா அமைப்பது குறித்து இடம் வழங்கப்படுமானால் பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்தில் நிரந்தர மேற்கூரையை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
    • முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் மற்றும் கமுதி வட்டத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் விழாவை–யொட்டி மேற்கொள்ளப் பட்டு வரும் திட்டப்பணி களை பார்வையிடுதல் மற் றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் பங்கேற்பு

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப் பினர் முருகேசன் முன்னி லையில் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய திட்டப்பணிகளை பார்வையிட்டு முடிவுற்ற பணிகளை திறந்து வைத் தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச் சர் ராஜகண்ணப்பன் பர மக்குடி வட்டம், பார்த்திப னூர் பகுதியில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையிலி ருந்து கமுதி புறவழிச்சாலை ரூ.35.24 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினை பார்வை யிட்டு, நாளை (30.10.2023) பசும்பொனில் நடைபெறு கின்ற பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பொதுமக்க ளுக்கு பயன்பெறும் வகை யில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதுடன், இந்த புறவழிச்சாலையின் மூலம் பசும்பொன்னிற்கு வரக்கூடியவர்கள் பார்த்தி பனூர் நகர் பகுதிக்குள் வராமலும் எந்த ஒரு இடையூ றுமின்றி பசும்பொன் செல் வதற்கு ஏதுவாக பயனுள்ள தாக இருக்கும் என தெரி வித்தார்.

    பின்னர் அபிராமம் அருகே உள்ள மார்னிங் ஸ்டார் பெண்கல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணி கள் நிழற்குடை மற்றும் பசும்பொன்னில் முதுகுளத் தூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட் டப்பட்ட பயணிகள் நிழற்கு டையினையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் சென்று வரும் வழியில் ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் நிரந் தர மேற்கூரை அமைக்கப் பட்டுள்ளதை அமைச்சர் திறந்து வைத்தார்.

    பின்னர் பசும்பொன்னில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுப்புறத் தார்சா லையினை பார்வையிட்ட துடன், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மருத் துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளை போதியளவு அமைத்து செயல்படுத்திட வேண்டுமென அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரெத்தினசாமி, பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், பேரூராட்சி உதவி இயக்குநர் ராஜா, கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ் செல்வி, கமுதி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வாசு தேவன், வட்டாட்சியர் சேது ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • ராமநாதபுரத்தில் டீ கடைக்காரருக்கு நிதிஉதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
    • டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு பகுதியில் டீக்கடை வைத்தி ருப்பவர் சிவலிங்கம். இவர் நேற்று வழக்கமாக கடை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவில் பெய்த கன மழை காரண மாக இவரது கடைக்கு அருகில் இருந்த மரம் ஒன்று சாய்ந்து டீக்கடையில் விழுந்தது.

    இதில் இந்த கடை முற்றி லும் சேதமடைந்தது. இது குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனுக்கு தெரிய வந்ததை அடுத்து பாதிக்க பட்ட சிவலிங்கத் திற்கு நிதிஉதவி வழங்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தலைமையில் கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் அமைச்சர் ராஜகண்ணப்பன் கொடுத்த நிதியுதவியை வழங்கினர்.அருகில் பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் மணிகண்டன் உள்பட பலர் உள்ளனர்.

    ×