என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவாஸ் கனி எம்.பி"

    • அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நவாஸ் கனி எம்.பி. விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போது, அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த நவாஸ் கனி எம்.பி., இது குறித்து கலெக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண்.
    • தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

    மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தொடர்பாக விரைவில் சுமூக முடிவு எட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இராமநாதபுரம் எம்.பி.யும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது.,

    திராவிட மாடல் நல்லாட்சியின் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் மகிழ்கிறேன்.

    மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை தங்களது மேலான கவனத்திற்கு வந்திருக்கும் என நம்புகிறேன்.

    அங்கு அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு உட்பட்டது என்ற வகையில், வக்ஃபு வாரிய தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

    திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மதுரை சுற்றுவட்டார பகுதி அனைத்து தரப்பட்ட மக்களும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கத்தோடு செல்லும் ஒரு சில அரசியல் கட்சியினரினால் தான் அங்கு தேவையற்ற பதற்றமும் அமைதியின்மையும் பிரச்சனையும் ஏற்படுகிறது என்பதை அறிய முடிகிறது.

    எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அங்கு அமைந்துள்ள கோவில் நிர்வாகத்தினர், இந்து அறநிலையத்துறை, தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், அரசு வருவாய் துறை ஆகியோர் உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி, உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இக்குழுவோடு உரிய ஆலோசனை செய்து, விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்டப்பட வழிவகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    காலம் காலமாக நல்லிணக்கத்தை உயர்த்தி பிடிக்கும் மண் தமிழக மண், அதுவும் குறிப்பாக மதுரையை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் இந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமான மண்.

    எனவே இதன் அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமுகமான முடிவை விரைந்து எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயலும் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்துக்குரியது.
    • இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நமது நாடு பலவீனமாக இருக்கிறதா?

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது:

    மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயலும் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலையின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது.

    பாஜக தேர்தலுக்கு முன்பு கடல் தாமரை மாநாடு நடத்துவார்கள், மீனவர்களை சந்திப்பார்கள் தேர்தல் முடிந்த பின்பு ஒட்டுமொத்தமாக மீனவர்களை கைவிட்டு விடுவார்கள்.இதுதான் அவர்களின் வழக்கம்.

    தற்போது அனைத்திற்கும் மேலாக பாஜகவில் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயல்கிறார்.

    பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அதனை பகிரங்கமாக கூறுகிறார். அவரது எண்ணம் ஆபத்தானது,

    ஒன்றிய பாஜக அரசு நினைத்தால் மீனவர்களின் பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட முடியும், ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத பாஜக, பிரச்சனையை திசை மாற்றும் வண்ணம், பாதிக்கப்பட்ட மீனவர்களையே குற்றம் சாட்டும் வண்ணம், மீனவர்களையே அவமானப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.

    நம்மை விட சிறிய நாடான இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக நம்முடைய நாட்டை பாஜக மாற்றி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

    தினம் தினம் செத்துப் பிழைக்கும் எங்களின் மீனவர்களின் இன்னல்களை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பாஜக, தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் எழுப்பிய குரலுக்கு செவிமடுக்காத பாஜக, தற்போது போலி நாடகம் போடுகிறது.

    பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஒட்டுமொத்த மீனவர்களையும் இழிவுபடுத்தும் வண்ணம் அவர்களை கடத்தல் காரர்கள் என்ற போர்வையில் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது, திரு அண்ணாமலை இதற்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்டிட வேண்டும்.

    ×