search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navaskani M.P."

    • பள்ளிவாசல் திறப்பு விழா; நவாஸ்கனி எம்.பி. பங்கேற்றார்.
    • ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவில் 18 வாலிபர்கள் தர்கா உள்ளது. இங்கு புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. ஓடக்கரை பள்ளி ஜமாத் மற்றும் புதுப்பள்ளி ஜமாத் தலைவர் யூசுப் சாகிப், முஸ்லீம் சங்க செயலாளர் சதக் அன்சாரி, துணைத் தலைவர் முஜீபுர் ரஹ்மான், அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது, ஜகாத் கமிட்டி மூத்த நிர்வாகி ஜப்பார், சிகந்தர் பாட்ஷா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஓடக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி நிர்வாகி சதக் இல்யாஸ் முன்னிலை வகித்தனர். ஜகாத் கமிட்டி கவுரவ ஆலோசகர் காதர் ஷாஹீப் வரவேற்றார். எழுத்தாளர் முகம்மது நஜீம் மரிக்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நவாஸ்கனி எம்.பி., வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் பங்கேற்றனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி, ஏஜே கமால், உமர், மாவட்ட தலைமை காஜி சலாஹுத்தின் ஆலிம், 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டி தலைவர் ஜாகிர் உசைன், கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், சங்க மேலாளர் அப்துல் ரசாக், குதுபுதீன் ராஜா, பசீர்தீன் கலந்து கொண்டனர். ஜக்காத் கமிட்டியின் பொருளாளர் சீனி முகம்மது நன்றி கூறினார்.முடிவில் 1000 கிலோ அரிசியில் நெய் சோறு தயார் செய்து கந்தூரி உணவாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கமுதி சுந்தரபுரம் ஊரணி பகுதியில் நவாஸ்கனி எம்.பி. சலவை தொட்டிகள் நிதி வழங்கினார்.
    • ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார்.

    பசும்பொன்

    கமுதி-சுந்தரபுரம் பகுதியில், ஏராளமான சலவைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வண்ணாந்துறையில் சலவைத்தொட்டி வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சலவைத் தொட்டிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி சலவைத்தொட்டி கட்டிமுடிக்கப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன. இதன் தொடக்க விழாவில் நவாஸ்கனி எம்.பி., கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல்வஹாப் சகாராணி, கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், சுந்தரபுரம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழராமநதி கிராமத்தில் நவாஸ்கனி எம்பி தனது நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் மற்றும் கிராம பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. கூறினார்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், தென்னை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 70 சதவீத நெற்பயிர்கள் வடகிழக்கு பருவ மழையையே நம்பி சாகுபடி செய்யப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது.

    2022-ம் ஆண்டில் வட கிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் ஏறத்தாழ 1 லட்சம் ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையின்றி கருகி வீணாகி உள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×