search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிவாசல் திறப்பு விழா; நவாஸ்கனி எம்.பி. பங்கேற்பு
    X

    பள்ளிவாசல் திறப்பு விழா; நவாஸ்கனி எம்.பி. பங்கேற்பு

    • பள்ளிவாசல் திறப்பு விழா; நவாஸ்கனி எம்.பி. பங்கேற்றார்.
    • ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவில் 18 வாலிபர்கள் தர்கா உள்ளது. இங்கு புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. ஓடக்கரை பள்ளி ஜமாத் மற்றும் புதுப்பள்ளி ஜமாத் தலைவர் யூசுப் சாகிப், முஸ்லீம் சங்க செயலாளர் சதக் அன்சாரி, துணைத் தலைவர் முஜீபுர் ரஹ்மான், அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது, ஜகாத் கமிட்டி மூத்த நிர்வாகி ஜப்பார், சிகந்தர் பாட்ஷா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஓடக்கரை பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி நிர்வாகி சதக் இல்யாஸ் முன்னிலை வகித்தனர். ஜகாத் கமிட்டி கவுரவ ஆலோசகர் காதர் ஷாஹீப் வரவேற்றார். எழுத்தாளர் முகம்மது நஜீம் மரிக்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நவாஸ்கனி எம்.பி., வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் பங்கேற்றனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் அலி, ஏஜே கமால், உமர், மாவட்ட தலைமை காஜி சலாஹுத்தின் ஆலிம், 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டி தலைவர் ஜாகிர் உசைன், கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், சங்க மேலாளர் அப்துல் ரசாக், குதுபுதீன் ராஜா, பசீர்தீன் கலந்து கொண்டனர். ஜக்காத் கமிட்டியின் பொருளாளர் சீனி முகம்மது நன்றி கூறினார்.முடிவில் 1000 கிலோ அரிசியில் நெய் சோறு தயார் செய்து கந்தூரி உணவாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை எம்.ஆர்.எப், வாலிபர்கள் மற்றும் 18 வாலிபர்கள் ஜகாத் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×