என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waqf Board"

    • வக்பு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.
    • ஐஐஎம் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் மத்திய அரசின் பங்களிப்பை முறைப்படுத்துகிறது.

    2025-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) பல முக்கியமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

    குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நிர்வாக மேலாண்மை மற்றும் சமூக நலன் சார்ந்த சட்டங்கள் இதில் முக்கிய இடம் பிடித்துள்ளன. 

    2025-ல் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்களின் பட்டியல் இதோ:

    காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025 (Sabka Bima Sabki Raksha Bill)

    இந்த மசோதா 2025-ன் மிக முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 74%-லிருந்து 100% ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.

    2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை அடைவதும், காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்.

    வக்பு (திருத்தம்) மசோதா 2025:

    நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வக்பு வாரியங்களின் நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

    வக்ப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் இடம்பெறுவதை இது உறுதி செய்கிறது. மேலும், வக்ஃபு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.

    ஆன்லைன் கேமிங் (முறைப்படுத்துதல்) மசோதா, 2025:

    வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையை முறைப்படுத்தவும், சூதாட்டம் போன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்குக் கடுமையான விதிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகளை இது விதிக்கிறது.

    தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025:

    இந்தியாவில் உள்ள விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது.

    விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்கமருந்து சோதனைகளை (Anti-Doping) சர்வதேசத் தரத்திற்கு ஏற்பக் கொண்டு வருதல்.

    நிதி மசோதா மற்றும் வரி விதிப்புச் சட்டங்கள் (திருத்தம்), 2025:

    சுகாதாரப் பாதுகாப்பு வரி, புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மீது புதிய வரியை விதிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இந்த நிதி தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படும்.

    வருமான வரி (திருத்தம்):

    வருமான வரி நடைமுறைகளை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) திருத்த மசோதா: ஐஐஎம் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் மத்திய அரசின் பங்களிப்பை முறைப்படுத்துகிறது.

    குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025:

    இந்தியாவில் தங்கும் வெளிநாட்டினரின் பதிவு மற்றும் விசா நடைமுறைகளைப் புதுப்பிக்கிறது.

    2025-ம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடர் (டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை) மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் அணுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் வரி விதிப்பு எனப் பல்வேறு துறைகளில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட கூடுதல் முக்கிய மசோதாக்கள் இதோ:

    ஷாந்தி (SHANTI) மசோதா, 2025

    (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Bill) இந்த மசோதா இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

    இந்தியாவின் சிவில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யவும், அணுமின் நிலையங்களை அமைத்து இயக்கவும் முதல்முறையாக அனுமதி அளிக்கிறது.

    இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி (Clean Energy) தேவையைப் பூர்த்தி செய்யவும், நிலக்கரி மீதான சார்பைக் குறைக்கவும் உதவும்.

    விக்சித் பாரத் கிராம வேலைவாய்ப்பு மசோதா (VB G-RAM-G Bill)

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அல்லது அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இது கொண்டு வரப்பட்டுள்ளது.

    கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, அந்த வேலைகள் மூலம் நிரந்தரமான கிராமப்புறச் சொத்துக்களை உருவாக்குவதை இது வலியுறுத்துகிறது.

    100 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படைத் தன்மை மாறுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் (130-வது) மசோதா, 2025

    நிர்வாகத் தூய்மையைக் கருத்தில் கொண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவியை இழக்க நேரிடும்.

    பிரதமரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், முதலமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    பங்குச் சந்தை குறியீடு (SMC) மசோதா, 2025

    செபி (SEBI) சட்டம், டெபாசிட்டரிகள் சட்டம் மற்றும் பரிவர்த்தனை ஒப்பந்தச் சட்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக (Unified Code) மாற்றுகிறது.

    இது முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பையும், நிறுவனங்களுக்குத் தொழில் செய்வதை எளிதாக்கவும் உதவும்.

    தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025

    நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை விரைவுபடுத்தவும், இழப்பீட்டுத் தொகையை டிஜிட்டல் முறையில் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தவும் இது வழிவகை செய்கிறது.

    • மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தூண் குறித்த படங்களை நீதிபதிகளிடம் வக்கீல் சமர்ப்பித்தார்.
    • மலை உச்சியில் தர்கா இருப்பதால் அதனை சிக்கந்தர் மலை என கூறப்படுகிறது.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை இன்று முற்பகலில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராம கிருஷ்ணன் ஆகியோர் முன்பு தொடங்கியது. இதில் வக்பு வாரியம் சார்பில் வக்கீல் அப்துல் முபின் வாதாடினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    வக்பு வாரிய வக்கீல்:- மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தர்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் தொழுகையும் நடந்து வருகிறது. அதுவும் அங்கு ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.

    நீதிபதிகள்:- மலை உச்சியின் இரு இடங்களில் என்னென்ன வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. தர்காவுக்கு சொந்தமான அது சார்ந்த நிலங்கள் என்னென்ன?

    வக்பு வாரிய வக்கீல்:- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவும், மலையின் பின்பக்க பகுதியில் காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ளது. அங்கு ஒருபுறம் பக்தர்களும், இஸ்லாமியர்களும் வந்து செல்ல குதிரைச்சுனை அருகில் இருவேறு பாதைகள் பிரிகிறது. கடந்த காலங்களில் தீபமேற்றுவது தொடர்பாக ஐகோர்ட்டு தனிநீதிபதி உத்தரவுகள் உள்ளன.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றுவது தொடர்ச்சியான பழக்கவழக்கமாக இருந்தது இல்லை. நெல்லித்தோப்பு மற்றும் அதுசார்ந்த பாதைகள், அவ்விடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது. இதையெல்லாம் தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை.

    தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தர்கா மற்றும் தூண் குறித்த படங்களை நீதிபதிகளிடம் வக்கீல் சமர்ப்பித்தார். அவற்றை நீதிபதிகள் பார்வையிட்டனர்.

    நீதிபதிகள்:- மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள் தர்காவை கடந்துதான் செல்ல வேண்டுமா? இல்லை வேறு பாதை உள்ளதா?

    வக்புவாரிய வக்கீல்:- பழமையான மலை பாதை உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நெல்லித்தோப்பு தர்கா விற்கு செல்லும் படிக் கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவு உள்ளது. மலை உச்சியில் தர்கா இருப்பதால் அதனை சிக்கந்தர் மலை என கூறப்படுகிறது.

    1921-ம் ஆண்டில் சிவில் கோர்ட்டு தர்காவிற்கு வழங்கிய உரிமையை உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவை பிரிவியூ கவுன்சிலும் உறுதி செய்துள்ளது என்றார்.

    அதற்கு நீதிபதிகள், தர்கா முழுவதும் சர்வே செய்யப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து வக்பு வாரியம் சார்பில் சர்வே செய்யப்பட்டு ஆவணங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர், தர்காவிற்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளதா? உறுதியான ஆவணங்கள் கொடுக்க இயலுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவை இருந்தால் நாளை தாக்கல் செய்யுங்கள் என்றனர்.

    • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது.
    • திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும்.

    மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றவில்லை. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும், தீபத்தூணுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    திருப்பரங்குன்றம் மலையில் என்னென்ன வழிபாட்டு தலங்கள் உள்ளன என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பினர்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது. அதில் தொழுகையும் நடந்து வருகிறது. மலை உச்சியில் தர்கா, பின்பக்கத்தில் காசி விஸ்வநாதர் கோவில் இருபிரிவினரும் வந்து செல்ல தனித்தனியாக பாதை உள்ளதாக வக்பு வாரியம் தெரிவித்தது.

    திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு சொந்தமான, அது சார்ந்த நிலங்கள் என்னென்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த வக்பு வாரியம்,

    மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்க ஸ்தலங்கள், நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம். நெல்லித்தோப்பு, மலையில் உள்ள பாதை, படிக்கட்டுகள் தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தர்காவுக்கு சொந்தமான இடங்கள் குறித்து விசாரணையின்போது தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்தது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகில் உள்ள தூண் தொடர்பான படங்களை ஐகோர்ட் நீதிபதிகள் பார்த்தனர்.

    மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள் தர்காவை கடந்து செல்ல வேண்டுமா? வேறுபாதை உள்ளதா? என நீதிபதிகள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த வக்பு வாரியம்,

    தர்காவை ஒட்டி குதிரைசுனை உள்ளது. அதனை தாண்டி தூண் உள்ளது. தர்காவிற்கு படிக்கட்டு பாதை உள்ளது. நெல்லித்தோப்பு தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவு உள்ளது.

    மனுதாரரின் வழக்கால் தூண் யாருக்கு சொந்தம். அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என பிரச்சனை எழுந்துள்ளது. தூண் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும்.

    தீபத்தூண் என மனுதாரர் குறிப்பிடும் தூண் தர்கா இடத்தில்தான் உள்ளது. தீபத் தூணுக்கு செல்லும் மலைப்பாதையும் தர்காவுக்கு தான் சொந்தம்.

    திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும். தூணும் தர்கா இடத்தில் உள்ளதால் அங்கு தீபம் ஏற்றுவதில் வக்பு நிர்வாகத்திற்கு உடன்பாடு இல்லை.

    மலை உச்சியில் தர்கா இருக்கும் பகுதி சிக்கந்தர் மலை என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது. 1920-ம் ஆண்டு உரிமைகள் நீதிமன்றம் வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும் என வக்பு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.

    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு.
    • தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்பு சட்டத்திருத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    வக்பு வழக்கில் தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதி, அரசியலமைப்பு மதிப்புகள், அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு கிடைத்த மகத்தான வெற்றி.

    நீதி சமத்துவம், மத சுதந்திரத்தை கடுமையாக குறைக்கும் விதிகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்பு திருத்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.
    • கடந்த 6-ந் தேதி தொடங்கி வக்பு சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் .எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்தச் சட்டம் 2025 தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

    முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்துக் கட்சிகளும் வக்பு திருத்த சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளன.

    இந்த நிலையில் மத்திய அரசு "வக்பு உமித் இணையதளத்தை கடந்த 6-ந் தேதி தொடங்கி வக்பு சொத்துக்களின் பதிவைக் கட்டாயமாக்கி வருகிறது. இந்த நடவடிக்கை முழுமையாகச் சட்டவிரோதமானது ஆகும். மேலும், இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பாகும்.

    அரசியல் சாசனத்திற்கு முரணானதாக உள்ள வக்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வக்பு நிர்வாகிகளும், மாநில வக்பு வாரியங்களும் இந்த இணையதளம் வழியாக வக்பு சொத்துக்களைப் பதிவு செய்வதை நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தவிர்க்குமாறு அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டலை பின்பற்றுமாறு வக்பு நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
    • அரசு அதிகாரி நீதிபதியாகச் செயல்படுவார். யாரும் எதுவும் கேட்க முடியாது

    இஸ்லாமியர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் பல்வேறு திருத்தங்களைச் செய்து கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு. ஜனாதிபதி ஒப்புதலுடன் உடனே மசோதா சட்டமானது. ஆனால் இந்த சட்டத்திருத்தம் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களின் மத உரிமைகளைப் பறிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

    அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "இந்த சட்டம் வக்பு நிலங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது. எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றாமல் வக்பு சொத்துக்கள் பறிக்கப்படும் வகையில் சட்டம் உள்ளது. குறைந்தது ஐந்து ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே வக்புக்கு நிலத்தை வழங்க முடியும் என்ற நிபந்தனை இதில் இருக்கிறது. அதாவது நான் மரணப் படுக்கையில் இருக்கும்போது வக்புக்கு சொத்து வழங்க விரும்பினால், நான் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபிக்க வேண்டும். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்றார்.

    அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், "பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் சட்டப்பூர்வமாகவே கருதப்படும். அவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதுவதற்கு வலுவான காரணம் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இந்த சூழலில் வேறு எதுவும் எங்களால் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கபில் சிபல், "புதிய வக்பு சட்டத்தின் கீழ், எந்தவொரு கிராம பஞ்சாயத்தும் அல்லது யாராக இருந்தாலும் வக்பு குறித்து குறைகளை எழுப்பலாம். இந்த விவகாரத்தில் அரசு அதிகாரி இறுதி முடிவை எடுக்கலாம். அதாவது அரசு அதிகாரி நீதிபதியாகச் செயல்படுவார். யாரும் எதுவும் கேட்க முடியாது" என்றார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

    • வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக த.வெ.க. தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
    • தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து எதிர்க்கடசிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக்கழகம் தாக்கல் செய்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நேற்று உச்ச நீதிமன்றம், வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்தது.

    மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாதவர்களை சேர்ப்பது மற்றும் வக்ஃப் சொத்துக்களை மறுவரையரை செய்வதற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 15 அன்று நடைபெறவுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் இந்த வழக்கில் அரசியலமைப்பையும், தகுதியானவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது.

    மேலும், உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பையும், சிறுபான்மையினரின் உரிமைகளையும் உறுதியாக பாதுகாக்க வாதாடிய மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
    • சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?.

    வக்பு திருத்த சடடத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ரிட் மனு தாக்கல் செய்துள்ளன. இது தெடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. வக்பு விசயத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் நீதித்துறையில் முறையிடுவதற்கு எதிராக அரசியல சாயம் பூசக்கூடாது என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறியதாவது:-

    எல்லா அமைப்புகளுக்கும் (institution) பங்கு உள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முடிவை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 வழக்கில் நாம் உச்சநீதிமன்றம் செல்லவில்லையா?. வக்பு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வது இது முதல் முறை கிடையாது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைமைய பிரகடனம் செய்தபோது, நீதிமன்றத்தில் முறையிடவில்லையா?.

    இன்று யாராவது உச்ச நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் என்றால், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. நீதிமன்றத்திற்கு அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது. சட்டமன்றத்திற்கும் அதன் சொந்த அதிகார வரம்பு உள்ளது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
    • இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்.

    வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

    இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தவெகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

    • மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

    ஒரு கும்பல், அங்குள்ள வாகனங்களை தீ வைத்து கொளுத்தியது. மேலும் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. நிம்ரிட்டா ரெயில் நிலையமும் சூறையாடப்பட்டது. ஜாங்கிபூர் பகுதியில் ஒரு கும்பல் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான கலிலுர் ரகுமான் அலுவலகத்தை சூறையாடியது.

    முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது. வன்முறையில் 2 பேர் பலியானதாகவும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஜாவேத் ஷமிம் தெரிவித்தார்.

    ஜாங்கிபூரி ல் அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில் போராட்டம் பரவியது.

    மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள 300 எல்லை காவல் படையினர் வன்முறை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று 5 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (சுமார் 500 பேர்) மேற்கு வங்காளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வன்முறை தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம்.
    • அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன போராட்டம்.

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, மத்திய பாஜக அரசை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது, அம்பானிக்காக ஜனநாயகத்தை சாகடித்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கண்டன கோஷமிட்டனர்.

    ×