search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka Navy"

    • படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.
    • மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

    மீனவர் ஜான்சன் ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


    சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா புறக்கணிப்பு என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

    இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

    அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

    • அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்கின்றனர். அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களின் வலை கள், மீன்கள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப் படகு மீன்பிடித்துறை முகத்திலிருந்து 12-ந் தேதி புதன்கிழமை 79 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சின்னையா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (25), குமார் ஆகியோரை சிறைபிடித்து சென்றனர். மேலும் சிறை பிடிக்க ப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறை முகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    • இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. சுமார் 6 ஆயிரம் மீனவர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.

    இலங்கைக்கு தானமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு அருகே அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், சர்வதேச எல்லையை சரியாக அடையாளம் காண முடியாததாலும், கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை பாரம்பரிய மீன்பிடி இடம் என நினைத்தும் மீன்பிடிக்க அந்த பகுதிக்குள் செல்கின்றனர்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அச்சுறுத்தி விரட்டுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். மேலும் பல சமயங்களில் மீனவர்களை சிறைபிடித்து செல்கின்றனர். சமீப காலமாக இது அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். மேலும் 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை வடக்கு, கிழக்கு பகுதி மீனவர்கள் தலைமன்னார், யாழ்ப்பாணம் பகுதியில் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதன் காரணமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் எல்லை தாண்டி மீன் பிடிப்பது சற்று குறைந்தாலும் முழுமையாக முழுவதுமாக தடுக்க முடியவில்லை.

    இதனை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணா விரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையிலும், அவர்களை சிறைபிடித்து செல்வதை தவிர்க்கும் வகையிலும் கச்சத்தீவு பகுதியில் 6 கடற்படை கப்பல்களை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த நிலையில் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8, 9 ஆகிய நாட்களில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தொடர்ந்து தாக்குதல் நடத்துவது சிறை பிடித்து செல்லுவது போன்ற செயல்பாடுகளால் மீன்பிடி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யதிட வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 விசைப்படகுகள் மற்றும் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர். இதனை கண்டித்தும், படகுகள் மற்றும் மீனவர்களை விடுக்க கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு சிறிய படகுகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று நேற்று 152 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் 2 விசைப்படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் வீசினர். இதனால் பல ஆயிரம் மதிப்பிலான மீன் பிடி சாதனங்கள் இழப்புடன் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

    இதுகுறித்து மீனவ சங்கத்தலைவர் போஸ் கூறுகையில், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது சிறை பிடித்து செல்லுவது போன்ற செயல்பாடுகளால் மீன்பிடி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மீன்பிடிக்க செல்லவே மீனவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யதிட வேண்டும். பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில், இலங்கையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரிய விசைப்படகு மீனவர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்த மீனவரிடம் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
    • ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கிளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை யினர் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

    இதில், ராமேசுவரம் ஓலைக்குடாவை சேர்ந்த மீனவர் செங்கோல் பிராங்கி ளின் காலில் காயமடைந்த நிலையில் கரை திரும்பினர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் காய மடைந்த மீனவர் பிராங்கிளி னிடம் உளவுத்துறை போலீ சார் விசாரணை நடத்தினர். அவரிடம் இந்திய கடல் பகுதியில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி யதா? அல்லது இலங்கை கடல் பகுதியில் நடை பெற்றதா? என விசாரணை மேற்கொண்டனர்.

    • தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
    • டெல்லியில் மத்திய மந்திரியிடம் ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ குழுவினர் மனு அளித்தனர்.

    ராமேசுவரம்

    மன்னார் வளைகுடா கடலில் காற்றாலை அமைக் கும் திட்டம், கடல் அட்டை தடை நீக்கம், இலங்கை கடற் படை தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவை ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க நிர்வாக குழுவி னர் டெல்லியில் சந்தித்து மனு அளித்தனர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் மீனவர் சங்க நிர்வாகிகள் குழுவினர் அளித்த மனுவில் கூறியதாவது:-

    மந்திரியிடம் மனு

    மன்னார் வளைகுடா பகுதி ராமநாதபுரம் மாவட் டம் பாம்பன் தீவு முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பரவியுள்ளது. இது 10,500 சதுர கி.மீ. பரப்ப ளவைக் கொண்டது. இதில் பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை 560 சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட 21 தீவுகள் மன்னார் வளை குடா கடல் வாழ் உயிரின தேசியப் பூங்காவாக 1986-ல் மத்திய அரசால் அறிவிக் கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இது தென்கிழக்கு ஆசியா வில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும். இப்பகுதியில் 2,700-க்கும் மேற்பட்ட பல்வகை கடல் வாழ் உயிரி னங்கள் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் கொண்டு வருவது மீன் வளத்தையும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அத்துடன் மீன வர் வாழ்வாதாரம் பேர ழிவை சந்திக்கும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இலங்கை கடற்படையி னர் பல ஆண்டுகளாக நமது மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தடுத்தது நிறுத் தப்பட்டவேண்டும். இப்பி ரச்சினைக்கு நிரந்தர தீர்வு கான ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தின் கீழ் மீனவர்க ளுக்கு 100 சதவீதம் மானி யத்துடன் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கடல் அட்டைகளை பிடிக்க தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, மீனவர்கள் நலன் கருதி கடல் அட்டை களை ஏற்றுமதி செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க் கின்றனர். கடல் அட்டைகள் பிடிப்பதற்கான சிறப்பு வலை இல்லாததால், கடல் அட்டைகள் மீன்பிடி வலை யில் தானாகவே சிக்குகின் றன. கடல் அட்டைகள் அழிந்து வரும் இனம் அல்ல ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 10 லட்சம் குஞ்சுகளை பொரிக்கும் திறன் கொண் டது

    கடந்த 22 ஆண்டுகளாக கடல் வெள்ளரிக்கு விதிக் கப்பட்ட தடையால் அதனை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. பல வெளிநா டுகளில் கடல் அட்டைகளை பிடித்தல் முறைப்படுத்தப் பட்டு அனு மதி வழங்கப்பட் டுள்ளது. இதனை அடிப்ப டையாகக் கொண்டு நமது நாட்டிலும் அனுமதி வழங்கு மாறு கேட்டுக்கொள்கின் றோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த குழுவில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் செந்தில், அழகுபாண்டி, முகேஷ், மீனவ மகளிர் சங்க நிர்வாகிகள் வடகொரியா, ஏ.சண்முககனி, காளியம் மாள், அனிதாசீலி, லெட்சுமி, ஆ.நம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் அட்டமால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த ஜான்சன், அருண், முருகன், கிங்ஸ்டன், கிரிட்டன், முருகன், ராரல் மானிக்ஸ், ரிமோட்டன் ஆகிய 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ், சோனையன், சேப்பான், ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், ரங்கய்யன், அழகிரி முருகேசன், கருப்பையா உள்பட 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    ஒரே நாளில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது.

    மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
    • 22 பேரை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த வாரம் முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். 58 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் கடலுக்கு செல்லும் தங்களுக்கு அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    நேற்று முன்தினம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற விசைப்படகு நெடுந்தீவு அருகே பழுதாகி நடுக்கடலில் நின்றது. உதவிக்கு கூட யாரும் இல்லாமலும், படகை செலுத்த முடியாமல் அவர்கள் தவித்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தத்தளித்த படகில் இருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைப்பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். படகு பழுதானதால் அவர்களை கோர்ட்டு விடுதலை செய்து படகையும் திரும்ப ஒப்படைத்தது.

    இந்நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவமாக இன்று அதிகாலை மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட் டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 121 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. அதில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை நெடுந்தீவு பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்திய எல்லைக்குள் மீன்பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாக கூறி தாக்குதல் நடத்துவார்களே என்று கருதி கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனாலும் 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற காளிமுத்து (45), அர்ச்சுணன் (50), குமார் (42), குருமூர்த்தி (27), அருண் (22), தமிழரசன், பாஸ்கர், அமரன், ஜெகநாதன், ரவீந்திரன், லோகநாதன், வைத்திநாதன், அருள்நாதன், குமரேசன் மற்றும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த படகில் இருந்த மீனவர்கள் உள்பட மொத் தம் 22 பேரை கைது செய்தனர்.

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறிய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    தாங்கள் எல்லை தாண்டி வரவில்லை என்று கூறிய மீனவர்களின் விளக்கத்தை கூட ஏற்க மறுத்த சிங்கள கடற்படையினர் 22 பேரையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அவர்களின் 4 விசைப்படகுகளையும் இழுத்து சென்றனர்.

    இன்று காலை இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் அறிந்த சக மீனவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். 58 நாட்கள் வாழ்வாதாரம் இழந்து, ஆங்காங்கே கடன் வாங்கி படகுகள், வலைகளை பழுதுபார்த்து கடலுக்கு சென்றால் இப்படி இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுகிறார்களே என்று கொந்தளித்தனர்.

    காலங்காலமாய் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப் படாததால் மீனவர்கள் மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    உடனடியாக தாமதிக்காமல் சிறைபிடிக்கப் பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
    • 102 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், 6 படகுகள் ஐ.எம்.பி. எல்லை தாண்டியதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    டெல்லி:

    காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க எம். பி. க. செல்வம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

    மார்ச் 12 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்களை விடு விக்ககோரி, தமிழக முதலமைச்சர் மார்ச் 13 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இது ஒரு மாதத்திற்குள் மூன்றாவது சம்பவமாகும். மேலும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் மனதில் அச்ச மனநோயை உருவாக்குகிறது. 102 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், 6 படகுகள் ஐ.எம்.பி. எல்லை தாண்டியதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கையால் விடுவிக்கப்பட்டவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. முன்னதாக, தமிழகத்தின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) அவர்களது இயந்திரப் படகுகளுடன் பிரித்தானியரின் டியாகோ கார்சியாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். எனவே, அனைத்து இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி கப்பலையும் உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல்வேறு காலகட்டங்களில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர்.
    • மீட்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி: 

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் ராமே ஸ்வரம், மண்டபம், புது க்கோட்டை, நாகப்பட்டினம், காரை க்கால் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பி டிக்க செல்கின்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர், பல்வேறு காலகட்டங்களில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து மீனவ ர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர். இந்நிலையில், மீனவர்க ளை விடுதலை செய்தா லும், கடந்த சில மாதங்க ளாக இலங்கை கடற்படை யால் பறிமுதல் செய்ய ப்பட்ட விசைப் படகு களை அந்நாட்டு கோர்ட்டு உத்தர வுப்படி யாழ்ப்பாணம், முல்லைதீவு, மயிலடி உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படகுகளில் பெரு ம்பாலானவை தற்பொழுது சேதம் அடைந்து நீரில் மூழ்கி காணப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. குறிப்பாக மாண்டஸ் புயல் காரணமாக, விசைப்படகு கள் சேதமானதாக வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைர லாகி வருவதால், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களை பார்த்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சிலர், மீனவர்களின் வாழ்வா தாரமே பல லட்சம் செலவு செய்த படகுகளில் தான் உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இல ங்கையில் சிறைப் படுத்தப் பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் படகுகளை விரைந்து மீட்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

    கொழும்பு :

    இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பலை இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சீனாவில் கட்டப்பட்ட பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை கடற்படையும், பாகிஸ்தான் கடற்படையும் கூட்டு போர்ப்பயிற்சி நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இதை இலங்கை கடற்படை தவறான தகவல் என கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வங்காளதேசத்தின் சட்டகிராம் துறைமுகத்தில் பாகிஸ்தானின் போர்க்கப்பலை நிறுத்த அந்த நாட்டின் அரசு அனுமதி மறுத்ததால், பாகிஸ்தான் கடற்படையில் இணையும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் அதை நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×