search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian fishermen"

    • இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்றார் இலங்கை மந்திரி.

    கொழும்பு:

    இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய மீனவர்கள் இழுவை மீன்பிடி படகுகளை வைத்து இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது.

    இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

    இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது.

    கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
    • 102 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், 6 படகுகள் ஐ.எம்.பி. எல்லை தாண்டியதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    டெல்லி:

    காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க எம். பி. க. செல்வம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மீதான கொடூர தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

    மார்ச் 12 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்களை விடு விக்ககோரி, தமிழக முதலமைச்சர் மார்ச் 13 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இது ஒரு மாதத்திற்குள் மூன்றாவது சம்பவமாகும். மேலும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கிறது. ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் மனதில் அச்ச மனநோயை உருவாக்குகிறது. 102 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், 6 படகுகள் ஐ.எம்.பி. எல்லை தாண்டியதாக கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கையால் விடுவிக்கப்பட்டவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. முன்னதாக, தமிழகத்தின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) அவர்களது இயந்திரப் படகுகளுடன் பிரித்தானியரின் டியாகோ கார்சியாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். எனவே, அனைத்து இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி கப்பலையும் உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாகிஸ்தான் சிறையில் வாடும் 682 இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
    • இந்திய சிறைகளில் வாடும் 461 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை இந்திய அரசு பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.

    இஸ்லாமாபாத்:

    இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தூதரக ரீதியில் கைதிகளை பரஸ்பரம் அணுகுவதற்கு வழிசெய்யும் ஒப்பந்தம் 2008-ம் ஆண்டு மே மாதம் 21–ம் தேதி கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது சிறைகளில் வாடும் எதிர்நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1–ம் தேதியும், ஜூலை 1–ம் தேதியும் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறையில் வாடுகிற 633 மீனவர்கள், 49 சிவிலியன்கள் என 682 இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்த நாட்டின் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது.

    இதேபோல், இந்திய சிறைகளில் வாடும் 116 மீனவர்கள், 345 சிவிலியன்கள் என 461 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசும் வழங்கியது. மேலும், பாகிஸ்தான் சிறையில் உள்ள 539 பேரின் இந்திய குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நல்லெண்ணத்தின் அடிப்படையில் 2வது முறையாக 100 இந்திய கைதிகளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் சிறைபிடித்து ஜெயிலில் அடைத்து உள்ளது. அந்த வகையில் 360 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் நீண்டநாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஸ்-இ- முகமது பயங்கவரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் பலியானார்கள். இந்த சம்பவத்தினால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது.

    இந்த பதற்றத்தை தணிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்திய மீனவர்கள் 4 கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அறிவித்தது.

    அதன்படி முதல் கட்டமாக கடந்த 7-ந்தேதி 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது பாகிஸ்தானின் மாலிர் ஜெயிலில் உள்ள 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. அவர்கள் ரெயில் மூலம் லாகூர் கொண்டுவரப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் இன்று (திங்கட்கிழமை) ஒப்படைக்கப்படுவார்கள்.   #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    நல்லெண்ணத்தின் அடிப்படையில் 360 இந்திய கைதிகளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்ததில் முதல்கட்டமாக இன்று 100 பேர் விடுதலையாகினர். #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    இஸ்லாமாபாத்:

    அரபிக்கடலுக்குள் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
     
    இரு நாட்டு தூதரகங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நல்லெண்ண அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 360 இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

    ஏப்ரல் 8-ம் தேதி 100 கைதிகளும், 15-ம் தேதி 100 கைதிகளும், 22-ம் தேதி 100 கைதிகளும், 29-ம் தேதி 60 கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். இவர்களில் 355 மீனவர்கள் மீதி 5 பேர் தவறுதலாக இந்திய எல்லையை கடந்து சென்று பிடிப்பட்டவர்கள் என  அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், முதல்கட்டமாக கராச்சி சிறையில் இருந்து இன்று 100 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

    அவர்கள் அனைவரும் கராச்சியில் இருந்து அல்லாமா இக்பால் ரெயில் மூலம் லாகூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லைப்பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

    இப்படி விடுதலையாகும் கைதிகள் இந்தியா சென்று சேர்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான உணவு, உடை ஆகிய உதவிகளை பாகிஸ்தானில் உள்ள ஈதி என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது. #Pakistanreleases #Indianfishermen #goodwillgesture
    பாம்பன் பகுதி மீனவர்கள் 5 பேர் ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். #FishermenArrested
    கொழும்பு:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 5 பேரும்  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

    தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை நேற்று இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், இன்று மேலும் 5 பேரை கைது செய்துள்ளது. #FishermenArrested
    பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார். #Pakistan #IndianFishermen #VKSingh
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் எழுத்துபூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:-

    மத்திய அரசு எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக இருந்த 1,725 மீனவர்கள் உள்பட இந்தியர்கள் 1,749 பேர் விடுவிக்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் மீனவர்களின் 57 படகுகளும் மீட்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் மீனவர்கள் உள்பட 179 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.



    பாகிஸ்தான் ஜனவரி 1-ந் தேதி அளித்த அறிக்கையில், தங்கள் நாட்டில் உள்ள சிறையில் 483 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஆனால் 503 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மீனவர்களின் 1,050 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. அது பற்றிய தகவலை பாகிஸ்தான் தங்கள் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இலங்கை கடற்படையினரால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அந்த மாநில அரசுகள் மற்றும் மீனவர் அமைப்புகள் எழுதிய கடிதம் எங்களுக்கு வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.

    வளைகுடா நாடுகளில் 4 ஆயிரத்து 705 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளில் தண்டனை காலம் முடிந்தும் 434 இந்தியர்கள் சிறையில் இருக்கின்றனர். இதில் 396 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வெளிநாடுவாழ் இந்திய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரால் கொடுமை செய்யப்படுவது தொடர்பாக 5 ஆயிரத்து 379 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 16 மீனவர்களை அந்நாட்டின் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். #Indianfishermen #Pakistanarrests
    இஸ்லாமாபாத்:

    அராபிய கடலில் மீன் பிடிக்கும்போது தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்தியா  மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எதிர்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கைது செய்வது தொடர்ந்து வருகிறது.

    அவ்வகையில், இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை கடந்த திங்கட்கிழமை  பாகிஸ்தான் கடலோர காவல் படை கைது செய்தனர். அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கராச்சி துறைமுகம் பகுதியில் உள்ள காவல் நிலைய போலீசார் கைதான மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடைத்து வைத்துள்ளனர். #Indianfishermen #Pakistanarrests
    பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 16 பேர் சிறைபிடித்தனர். #IndianFishermen #Pakistan
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் இருந்து 2 படகுகளில் 16 மீனவர்கள் அரபிக் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். #IndianFishermen #Pakistan 
    இலங்கை சிறையில் வாடும் 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalaniswami #IndianFishermen #PMModi
    சென்னை:

    இலங்கை சிறையில் வாடும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மன்னார் வளைகுடாவில் தங்கள் எளிமையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.



    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21-ந் தேதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக என்று கூறிக்கொண்டு நிறைவேற்றப்பட்ட மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் தண்டனை விதித்து இலங்கை ரூபாயில் ரூ.60 லட்சம், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.26 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், அவர்கள் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    நான் ஏற்கனவே கடந்த 7.7.2017 அன்றும், அதைத்தொடர்ந்து மேலும் பல கடிதங்களிலும், இலங்கையில் மீன்வளம் மற்றும் கடல்வளம் சட்டம் 1996 மற்றும் மீன்வளம் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தில் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த திருத்தங்களையும், அதனால் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறேன்.

    மத்திய அரசாங்கத்தின் உதவியோடு, தமிழக அரசு ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கி நடவடிக்கை எடுத்துவரும் இந்த சூழ்நிலையில், இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டில் இருந்து வரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் திருத்தங்களை அமல்படுத்த முன்வந்திருப்பது, இந்த உணர்ச்சிகரமான பிரச்சினைக்கு ஒரு தீர்வுகான மத்திய அரசாங்கம் எடுக்கும் ராஜ்ய முயற்சிகளை ஏளனம் செய்வதுபோல இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழக மீனவர்கள் மனதில் ஒரு குழப்பமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நம்முடைய கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யவும், நமது மீனவர்கள் அனைவரையும் அபராதமோ, ஜெயில் தண்டனையோ இல்லாத வகையில் விடுதலை செய்ய, இலங்கை நீதிமன்றங்களில் திறமையாக வாதங்களை நடத்தவும், வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும், இலங்கை சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கும் 16 மீனவர்களையும் விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேற்கண்டவாறு அந்த கடித்ததில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami #IndianFishermen #PMModi
    கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது. #Pakistan #IndianFishermen #Release
    கராச்சி:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

    அவ்வாறு கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களில் 26 பேரை நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்துள்ளது. 
    ஈரானில் மீட்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் இன்று சென்னைக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். #Fishermen

    சென்னை:

    தமிழக மீனவர்கள் 21 பேர் ஈரான் நாட்டிற்கு மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று விட்டு கடந்த 7 மாதமாக சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டனர்.

    உணவு, தங்குமிடம் இல்லாமல் நடுரோட்டில் கிடந்தனர். தங்களுக்கு வேலை வேண்டாம், இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று மீனவர்கள் கேட்ட போது விசாவை ரத்து செய்து இந்தியா திரும்ப வேண்டுமானால் அதற்கு ரூ.50 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் அவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    தி.மு.க. எம்.பி. கனிமொழியும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களை மீட்டு அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈரான் நாட்டு தூதரக உதவியுடன் 21 மீனவர்களையும் பத்திரமாக மீட்டது.

    மேலும் இந்திய தூதரகமே மீனவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து ஈரானில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு அனுப்பி வைத்தது.

    தமிழக மீனவர்கள் 21 பேரும் அதிகாலை சென்னை வந்து சேர்த்தனர். விமான நிலையத்தில் அதிகாரிகள், உறவினர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

    தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கைளைச் சேர்ந்த மீனவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    ×