search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள்"

    தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை செப்டம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.

    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக தொடங்கும். இந்த பருவ மழை காலத்தில் தென் மாநிலங்களில் அதிக மழை பொழிவு கிடைக்கும்.

    தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை செப்டம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.

    தென்மேற்கு பருவ மழை தொடங்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அறிவிக்கவில்லை.

    ஆனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வேகமாக வீசுவதால் இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல்-தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளை (30-ந்தேதி) வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் ரூபாய் 95 கோடி வழங்கப்படும்.

    இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் விதமாக, சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
    மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திருவள்ளுர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    16 மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இன்று காலை குடும்பத்துடன் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுக வாசல் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் இயங்கிவருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இதனால் வாழ்வாதாரம் பாதித்த கடலோரகிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1,750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

    இதில் முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    மீதமுள்ள 1500 பேருக்கு வேலை வாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலம் வழங்கிய மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பழவேற்காடு, தாங்கள் பெரும்புலம் அரங்ககுப்பம் கூணங்குப்பம் திருமலை நகர்,சாட்டங்குப்பம், செம்பாசி பள்ளி,கலங்கரை விளக்கம், நடுக்குப்பம், நக்கத்துரவூ, பேட்டை, பள்ளிகுப்பம், கோரைக் குப்பம், பசியா வரம், உள்ளிட்ட 16 மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இன்று காலை குடும்பத்துடன் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுக வாசல் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை வாய்ப்பு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

    பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல்அறிந்ததும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்படடனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே குவிந்து உள்ளனர். தொடர்ந்து மீனவ கிராமமக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ கிராமமக்கள் கூறும்போது, கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னிலையில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக கம்பெனி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இது வரை கம்பெனியில் வேலை வாய்ப்பு வழங்க வில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

    ×