search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை"

    • ஒரே நாளில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.
    • மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கருப்பாயி ஊரணி சின்னப்பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பு (வயது43). இவர் வண்டியூர் கண்மாய்க்கரைக்கு மீன் பிடிக்க சென்றார்.வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சின்னக் கருப்பு தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பஞ்சு மாட்டுத்தாவனி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னக் கருப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாட்டுத்தாவணி போலீசார் சின்னக்கருப்புவின் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருப்ப ரங்குன்றம் ராஜீவ்காந்தி 4-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அருண்பாண்டி (24).இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உறவினருடன் திருப்பரங்குன்றம் சரவணபொய்கைக்கு குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கணேசன் திருப்ப ரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண்பாண்டியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வாலிபர் அருண் பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றவர் வீட்டில் 13 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்த புரம் பச்சமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பரம சிவம் (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, கண வரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றி ருந்தார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரமசிவத்தை உள்நோயாளியாக அனு மதித்தனர். இதற்கிடையே அவர்களது மகள் தனலட்சுமி தந்தைக்கு உடைகள் எடுப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் வந்து இந்த திருட்டை அரங்கேற்றியுள்ள னர்.

    இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இதற் கிடையே பாளையங் கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவமும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது.
    • உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கோவை:

    கோவை ஆலந்துறை செம்மேடு அருகே உள்ள பட்டியார் கோவில்பதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 73). கூலித் தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர். பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த கருப்பனை ஆம்புலன்சு மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவாரூர் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி பேசாததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவாரூர் 

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அத்திகடையை சேர்ந்தவர் முகமதுநூர்தீன்.

    இவரது மகன் அப்துல் ஜலீல் (வயது 34). இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. 

    இதனால் கணவருடன், மனைவி பேசாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த அப்துல் ஜலீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முகமது நூர்தீன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×