search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே விபத்தில் மூதாட்டி பலி
    X

    தர்மபுரி அருகே விபத்தில் மூதாட்டி பலி

    தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது60). இவர் நேற்று மாலை தண்ணீர் பிடிப்பதற்காக நடுப்பட்டி சாலையை கடந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பழனியம்மாளை மீட்டு தருமபுரி அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். 

    மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனியம்மாள் பரிதாபமான உயிரிழந்தார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×