search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest officer"

    • அரிகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை வனத்துறையில் இரவு காப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • அதிகாரியின் வீட்டில் செயின் பறிப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 40). உளுந்தூர்பேட்டை வனத்துறையில் இரவு காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு சென்றார். ஹரிகிருஷ்ணன் மனைவி மற்றும் மகள் இருவரும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கவிதாவின் கழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.

    இதில் திடுக்கெட்டு எழுந்த கவிதா திருடன் திருடன் என்று கூச்சலிட்டு தாலிச் சங்கிலியை இழுத்தார். இதில் பாதி தாலிசங்கிலியுடன் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றான். இது குறித்து ஹரிகிருஷ் ணன் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். வனத்துறை அதிகாரியின் வீட்டில் செயின் பறிப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வன அதிகாரியை தாக்கினர்.
    • புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை புதூர் கற்பகம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது65), ஓய்வு பெற்ற வன அதிகாரி. சம்பவத்தன்று இவரது வீட்டு வாசல் முன்பு கே.கே.நகரை சேர்ந்த அரியபுத்திரன் என்பவர் தனது காரை நிறுத்தியிருந்தார். காரை வேறு பகுதியில் நிறுத்துமாறு வெற்றிவேல் கூறினார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரியபுத்திரன், வெற்றிவேலை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.

    மதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜா(வயது44). இவர் சம்பவத்தன்று பழங்காநத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஜீவா நகரை சேர்ந்த விக்னேஷ்(24), பழங்காநத்தம் தினேஷ்குமார்(25), தினேஷ்வரன்(30), அஜய்குமார்(19) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    வேலூர் கலெக்டர் ஆபீசில் வன அதிகாரி மனைவி 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    ஆற்காடு தாலுகா பூகனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா அமிர்தி வனச்சரக அலுவலராக பணியாற்றினார். தற்போது சஸ்பெண்டாகி உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி மெர்லின்மாலதி (38). அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி மெர்லின்மாலதி மனு கொடுத்தார். அதில் தனது கணவர் ராஜா, வனத்துறையில் வேலை பார்த்து வந்தார்.

    தற்போது சஸ்பெண்டு செய்யபட்டுள்ளார் எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார். இது பற்றி கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார்.

    இதுபற்றி ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தேன் ஆனால் விசாரணைக்கு வரவில்லை. அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று 2 மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மெர்லின்மாலதி மகன்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.

    வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் பிற விலங்குகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு பணி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன்படி கடந்த 24-ந்தேதி பழனி, கொடைக்கானல் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    தற்போது கணக்கெடுப்பு பணிகள் முடிந்து விட்டது. இதுகுறித்து பழனி வனத்துறையினரிடம் கேட்ட போது, பாலசமுத்திரம் காப்புக்காடு, கோணவாய்க்கால் பகுதியில் சிறுத்தையின் கால்தடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களிலும் அவற்றின் நகக்கீரல்கள் பதிவாகி இருந்தன. அவற்றின் மூலம் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

    அதே போல் புலிகளின் கால்தடங்களும் வனப்பகுதியில் பதிவாகி உள்ளது. பழனி வனப்பகுதியில் தற்போது சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் யானைகள், காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்டவைகளையும் நேரில் பார்த்து கணக்கெடுத்துள்ளோம்.

    கணக்கெடுப்பின் முழு விவரம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் மாவட்ட வன அலுவலர் பழனி, கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றனர். #tamilnews
    தமிழக அரசின் மரம் நடும் திட்டத்தில் ஊழல் செய்தாக கோவை வனத்துறை அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    கோவை:

    தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு மாபெரும் மரம் நடும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்தது.

    தமிழகத்தை பசுமையாக மாற்றுவதற்காக வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டன.

    2011-ம் ஆண்டு முதல் 2019 வரையான 8 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.668.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை தவிர மற்ற 31 மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் மரங்கள் நடப்பட்டன. வனப்பகுதிகள் மட்டு மின்றி மற்ற வெட்டவெளி இடங்களிலும் மரங்களை வளர்க்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இந்த மாபெரும் மரம் நடும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் சில மாவட்டங்களில் இந்த திட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக கோவை மண்டல வனத்துறையில் கடந்த 2014-ம் ஆண்டில் இத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அப்போது, கோவை மண்டலத்திற்குட்பட்ட 16 தொகுப்பு கிராமங்களில் 1.7 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.33.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதில் 12 போலி பில்களை 2 வனத்துறை அதிகாரிகள் தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. வனத் துறை ஒப்பந்ததாரர் ஒருவர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததையும் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்ட வனத் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த சேகர்(வயது 55) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவை வனத்துறையில் உதவி அலுவலராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார். அப்போது ஓய்வு பெற்ற வனத்துறை ரேஞ்சர் முருகேசன் என்பவரை இந்த மரம் நடும் திட்டத்துக்காக மீண்டும் பணி வழங்கி உள்ளார்.

    இந்த இருவரும் வனத் துறை ஒப்பந்ததாரர் கணேசன் உதவியுடன் போலி பில்களை தயாரித்து லட்சக் கணக்கில் மோசடி செய்துள்ளனர். குறிப்பாக பிச்சனூர் கிராமத்தில் மரங்கள் நடப்பட்டதாக கூறி 12 போலி பில்கள் தயாரித்து ரூ.10.77 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது.

    இதுதொடர்பாக வனத் துறை அதிகாரிகள் சேகர், முருகேசன் மற்றும் ஒப்பந்ததாரர் கணேசன் ஆகிய 3 பேர் மீதும் ஊழல், கிரிமினல் சதி, நம்பிக்கையை தகர்க்கும் வகையில் செயல்படுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2014-2015-ம் ஆண்டில் மரம் நடும் திட்டத்தில் ரூ.11.03 லட்சம் வரை மோசடி செய்திருப்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர். இதில் 3 வனத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார் இது தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே மதுரை மாவட்டங்களில் இந்த திட்டங்களில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக 6 அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    ×