என் மலர்
தஞ்சாவூர்
- வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
- மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
பின்னர் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-
இது "எங்கள் குடும்பம்" என்று சொல்வதா, "கழகக் குடும்பம்" என்று சொல்வதா, ஒட்டுமொத்தமாகச் சொன்னால் "நமது குடும்பம்" என்ற நிலையிலேதான் இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கக்கூடிய அன்பில் கழகப் பணி இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய உங்களுக்கு நான் அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை. தலைவர் கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு நட்புக் கொண்டிருந்தார். தலைவர் கலைஞருக்கு எந்த அளவிற்குத் துணையாக இருந்தார். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலே கழகத்தை உருவாக்குவதற்கு, கழகம் இன்றைக்கு கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த அன்பில் கடைசி வரையிலே கழகத்திற்கு, தலைவர் கலைஞருக்குப் பக்கபலமாக இருந்தவர்.
அதைத் தொடர்ந்து அவருடைய மகன், என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி எனக்கு எந்த அளவிற்குப் பக்கபலமாக இருந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே ஒரு உற்ற நண்பனாக மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலே ஏற்பட்டிருக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அன்பில் பொய்யாமொழி.
ஆகவே இப்படித் தொடர்ந்தது அந்த உறவு. அதற்குப் பின்னால் இங்கே வரவேற்புரையாற்றிய உதயநிதி குறிப்பிட்டதைப் போல, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்றைக்கு எங்களுடைய குடும்பத்திலே, குறிப்பாக உதயநிதியிடத்திலே எந்த அளவுக்கு நட்போடு பழகி, அவர் இன்றைக்கு வளர்ந்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, அமைச்சராகவும் பொறுப்பேற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, ஒரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
சட்டமன்றத்தில் உரையாற்றினாலும் சரி, பல்வேறு நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு உரையாற்றினாலும் சரி, எந்தப் புள்ளிவிவரத்தையும் கையிலே வைத்துக் கொள்ளாமல் எதையும் படபடவென்று கம்ப்யூட்டரைப் போல பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரைப் பார்த்து எல்லோரும் பாராட்டுகிற போது அவருடைய தந்தை என்னுடைய அருமை நண்பர் பொய்யாமொழி எந்த அளவுக்கு சந்தோஷப்படுவாரோ, அதைவிட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப்போதும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே இது இப்படித் தொடர்ந்து இன்னும் அன்பிலோடும் முடியவில்லை, தலைவர் கலைஞரோடும் முடியவில்லை, என்னோடும் முடியாது. நம்முடைய அன்பில் பொய்யாமொழியோடு முடியாது. அதேபோல நம்முடைய உதயநிதி, மகேஷோடு முடியப் போவதில்லை. உதயநிதியினுடைய மகன் இன்பனாக இருந்தாலும் சரி, மகேஷினுடைய மகன் இனியனாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நட்பும் இன்றைக்குத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆகவே வாழையடி வாழையாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு எந்தச் சூழ்நிலையில் வந்திருக்கிறேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். நேற்று இரவு வரை கூட்டணிக் கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்து எல்லோரும் பாராட்டக்கூடிய வகையிலே முடித்துவிட்டுதான் இன்றைக்கு வந்திருக்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறுகிற போது கையை எடுத்து இப்படி ஒரு சொல். அந்த ஆக்ஷனோடு நான் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அது நான் திட்டமிட்டு செய்தது அல்ல. ஏதோ காரில் ஏற வருகிற போது அங்கே எதிரே நின்று கொண்டிருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் என்னை பார்த்து "என்ன முடிந்துவிட்டதா, முடிந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். "முடிந்துவிட்டது" என்று சொன்னேன், அவ்வளவுதான். அது இன்றைக்கு பெரிய வைரலாகி "எல்லாம் முடிந்துவிட்டது, ஆல் ஃபினிஷ்டு" அப்படின்னு சொல்ற மாதிரி இன்றைக்கு அந்த காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆகவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு வேட்பாளர்களாக இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம். கூட்டணிக் கட்சிக்கு இரண்டு பேருக்குக் கொடுத்திருக்கிறோம். இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த நான்கு பேரும் சென்னையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்றுதான் கடைசி நாள். நான் வந்தே தீர வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். நாம் வழக்கமாகச் செல்வது உண்டு.
ஆகவே இதை முடிச்சுட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால்தான் வேகவேகமாக வந்து வேகவேகமாகத் திருமணத்தை முடித்து வைத்துவிட்டு நான் செல்லவிருக்கிறேன். இன்றைக்கு அந்த இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே பொய்யாமொழி இருந்து இந்த விழாவை நடத்துகிறபோது எந்த அளவுக்கு மகிழ்ச்சியடைவாரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் பல்லாண்டுக் காலம் எல்லா நலமும் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கருணாநிதி வழியில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.
- தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச்சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் இன்று தமிழ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவசிலை மற்றும் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் செயலாளர் ராமநாதன் உருவ சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
வரலாற்றுச் சிறப்புமிக்க கரந்தை தமிழ் சங்கத்தினுடைய வளாகத்திலே கருணாநிதி சிலையையும், சங்கத்துடைய முன்னாள் தலைவர் செம்மொழிவேலர் ராமநாதனுடைய சிலையையும் உங்களுடைய முன்னிலையிலே திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நிகழ்ச்சியினுடைய தொடக்கத்திலே தமிழ்த்தாய் வாழ்த்தை நாம் பாடி இருக்கின்றோம். தமிழ்த்தாய் வாழ்த்து முதன்முதலாகப் பாடப்பட்டது இந்தக் கரந்தை தமிழ்ச் சங்கத்தில்தான். அதன் பிறகு 1970-களில் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்தைத் தமிழ்நாடு அரசினுடைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.
இது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தான். இதற்கு எழுந்து நின்று நம்முடைய மரியாதை செலுத்தத் தேவையில்லை என்று ஒரு கூட்டம் சொல்கிறது. இன்னும் சில பேர் சட்டப்பேரவையிலே இந்த பாட்டையே பாடக்கூடாது அப்படின்னு ஒரு கூட்டம் சொல்கிறது. ஆனா இந்த பாடல் தமிழ்நாடு அரசினுடைய ஸ்டேட் ஆந்தம் மாநிலப் பாடல் என்பதை அறிவித்து அதைப் பாடும் பொழுது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையைப் போட்டவர் கருணாநிதி தான். இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய கல்வி நிதி ரூ.3,500 கோடியை கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் அந்த 3,500 கோடியை கொடுப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது.
ஆனா நம்முடைய முதலமைச்சர் 3,500 கோடி இல்லை. 10,000 கோடி கொடுத்தாலும் இந்தியையும் சமஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் எந்த நேரத்திற்கும் இடம் கிடையாது என்று உறுதியாக கூறிவிட்டார்.
கருணாநிதி வழியில் நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.
தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச்சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது . தமிழறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய சர்வதேச விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகளும் நம்முடைய முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழினுடைய அரிய நூல்கள் எல்லாமே இன்றைக்கு டிஜிட்டல் வடிவில் மாற்றப்படுகிறது. தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல்களை எல்லாம் தமிழில் கொண்டுவர முயற்சிகளை நம்முடைய அரசு எடுத்து வருகின்றது.
ஆனால் மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்கிறதில் மட்டும்தான் அக்கறையைக் காட்டி வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் நம்முடைய தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 147 கோடி ரூபாய்.
தமிழ் தமிழ்ன்னு சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றும் வேலையை மத்திய அரசு செய்து வருகின்றது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். உண்மையாகத் தமிழுக்காக உழைப்பவர்கள் யார்? போலித்தனமாக நடிப்பவர்கள் யார்? என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். எனவே இந்த முக்கியமான நேரத்தில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அன்னைத் தமிழைப் காப்போம், ஆதிக்க மொழித் திணிப்பை என்றும் வீழ்த்துவோம் என்று பேசினார்.
- காங்கிரசுடன் வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து கொண்டு வந்திருக்கிறேன்.
- அனைவரும் பாராட்டும் வகையில் தேர்தல் கூட்டணியை முடித்துள்ளோம்.
தஞ்சாவூர்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இவ்விழாவில் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* காங்கிரசுடன் வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து கொண்டு வந்திருக்கிறேன்.
உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி... தனித்து விடப்பட்ட தவெக - என்ன செய்யப்போகிறார் விஜய்?
* அனைவரும் பாராட்டும் வகையில் தேர்தல் கூட்டணியை முடித்துள்ளோம்.
* தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை.
* ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு அமைந்த கூட்டணி அடுத்த தேர்தலில் நீடித்தது இல்லை என்பதும் வரலாறு என்றார்.
- ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்கு ஸ்வீட் செய்யாதீர்கள்.
- நாங்கள் முன்மாதிரி என்று சொல்லும் திமுக ஆட்சிதான் மோசமான ஆட்சிக்கான முன்மாதிரி ஆட்சி.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்னு நீ இல்லைன்னா நான் என மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றி தமிழ்நாட்டில் ஆட்சி நடப்பதாக விஜய் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை. திமுக தொடர்ந்து ஆட்சி அமைத்த சரித்திரமே கிடையாது.
விஜய் வந்தால் நமக்கு பிழைப்பு போய்விடும் என திமுக- அதிமுக கட்சிகள் பயப்படுகின்றனர்.
நீங்கள் என்னை முடக்கலாம் சிஎம் சார், ஒவ்வொரு வீட்டில் உள்ள விஜயையும், விஜியையும் யாராலும் தடுக்க முடியாது.
ஒவ்வொரு வீட்டில் உள்ள விஜியும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். உங்களால் யாரையும் தடுக்க முடியாது.
ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்கு ஸ்வீட் செய்யாதீர்கள்.
நாங்கள் முன்மாதிரி என்று சொல்லும் திமுக ஆட்சிதான் மோசமான ஆட்சிக்கான முன்மாதிரி ஆட்சி.
ஸ்டாலின் தொடரட்டும்; சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும் என சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.
- முன்மாதிரி ஆட்சி என்று சொல்வார்கள்.
த.வெ.க. தலைவர் விஜய் தஞ்சையில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
இது குறித்து பேசும் போது, "கியாஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ. 100 கொடுப்பதாக சொன்னது என்ன ஆனது? கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4000 கொடுப்பதாக சொன்னீர்களே, என்ன ஆனது? நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை கொடுப்பதாக சொன்னீர்களே, என்ன ஆனது? இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.
மாநில அரசால் நிச்சயம் முடியாது என்று தெரிந்த பிறகும், நாங்கள் வந்தால் நீட்டை ஒழிப்போம் என்றீர்கள். எவ்வளவு பெரிய மோசடி இது? கேட்டால், நாங்கள் தான் முன்மாதிரி ஆட்சி என்று சொல்வார்கள். மோசடி ஆட்சி. மோசமானவர்களிலேயே முக்கியமானவர்களை கேள்விப்பட்டுள்ளீர்களா? அந்த மாதிரி மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த தி.மு.க. ஆட்சி," என்றார்.
- தமிழகம் தண்ணீர் இல்லாமல் திவால் ஆகும் என ஐநா கூறியுள்ளது.
- மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவு கொடுப்பது திமுக தான் என்பதை மறுக்க முடியுமா?
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.
தவெக தலைவர் விஜய் உரையை தொடங்கிய உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக முழுக்கமிட்டனர்.
அப்போது அவர் பேசியதாவது:-
நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு உறுதிமொழியை கொடுக்க வேண்டும்.
ஊழலற்ற தவெக அமைப்பீர்களா?
விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் தானே?
ஒவ்வொரு பூத்திலும் விசில் சத்தம் கேட்கும்தானே.
விசில் சத்தம் ஓட்டாக மாறும் தானே.
இந்த பூமியையும், மனிதர்களையும் படைத்தது கடவுளாக இருக்கலாம். அந்த கடவுளுக்கே படையல் போடுபவர்கள் நம் விவசாயிகள், இந்த பூமியை சாமியாக்குபவர்கள் விவசாயிகள் தான்.
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நான் விவசாயி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும் அவர்கள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.
தவெக ஆட்சி அமைந்தவுடன் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சனையும் ஒன்று.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தை கையில் எடுத்துதான் தவெக அரசியல் போராட்டத்தை தொடங்கியது.
தமிழகம் தண்ணீர் இல்லாமல் திவால் ஆகும் என ஐநா கூறியுள்ளது. மண், கல் என அனைத்தையும் கொள்ளையடித்தால் என்ன நடக்கும்?
மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவு கொடுப்பது திமுக தான் என்பதை மறுக்க முடியுமா?
கடன் வாங்கி தலைக்குப்புற கிடக்கும் திமுக அரசிடம் சொல்வதும் ஒன்று தான்.
ஆட்சி முடியும் நேரத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன்?
மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்மான நடவடிக்கை தேவை.
மீனவரகளே கவலை வேண்டாம். அடுத்து தவெக ஆட்சி அமைந்தவுடன் மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நம் மீனவர்கள் மீது யாரும் கை வைக்க முடியாத என்ற அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்வர் பூசி மெழுகி, பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.
- என்ன செய்வதென்றே தெரியாத மனநிலையில் இருப்பார்.
த.வெ.க. தலைவர் விஜய் தஞ்சையில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் முதல் முறையாக ஜனநாயகன் விவகாரம் குறித்து பேசினார்.
அப்போது அவர், "ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். முக்கியமாக நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் பூசி மெழுகி, பட்டும் படாமல் குரல் கொடுத்தார்கள். எப்படி இருந்தாலும் குரல் கொடுத்த அவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இப்படி வெளிப்படையாக பேசுதால், சி.எம். சாரின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் தெரியுமா?
ஏற்கனவே கட்சிக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை, தூங்க விட மாட்றாங்க, இந்த விஜயும் வந்து தூங்க விட மாட்டேங்குறான். நம்ம பாட்டுக்கு ஹைவேயில் சைக்கிள்ல சோலோவாக போகலாம்னு நினைச்சோம். இவன் என்னடா என்றால் மக்கள் சக்தியுடன் வந்து கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறான். இவன் மட்டும் கேட்காமல், மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறான். 1000 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தோம், ரூ. 5000 கொடுத்து ஏமாற்றலாம் என்றால் அதையும் கேள்வி கேட்க வைக்கிறான். விசில் சத்தம் வேறு விண்ணை முட்டுகிறது. கூட்டணி கட்சிகளின் தொல்லையை தாங்க முடியவில்லை. இவனது பிரச்சாரத்தையாவது முடக்கலாம் என்று பார்த்தால், அப்போதும் மக்கள் அவன் பக்கம் தான் நிற்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாத மனநிலையில் இருப்பார்.
சி.எம். சார் நீங்கள் இந்த விஜயை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிட்டாங்க சார். குடும்பம், குடும்பமாக பிரச்சாரத்திற்கு இறங்குவார்கள் பாருங்கள். அப்போது உங்களால் மட்டுமில்லை, யாராலும் தடுக்க முடியாது," என்றார்.
- ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி.
- தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. வரும் தேர்தலில் வசில் பறக்கும்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.
தவெக தலைவர் விஜய் உரையை தொடங்கிய உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக முழுக்கமிட்டனர்.
அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் உண்மையான பிரதிநிதி என்பதால் தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என முந்தைய கூட்டத்தில் கூறினேன்.
பயமுறுத்தும் வேலை இனி எடுபடாது, அதனால் தான் நான் பேசுவதை மாற்றிபேசி அவதூறு பரப்புகின்றனர்.
ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என குழந்தைகள் கூட சொல்லத்தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. வரும் தேர்தலில் வசில் பறக்கும்.
எனக்கும் தமிழ்நாட்டு மக்களும் இடையில் யாராலும் நுழைய முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.
- அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதி அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி கடந்த 28-ந்தேதி மத்திய மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் தரப்பில் பாதுகாப்பு தொடர்பாக 32 கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு த.வெ.க தரப்பில் உரிய பதில் அளிக்கப்பட்டதால் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 52 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து அய்யாசாமி பட்டி பிரிவு சாலையில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மைதானம் தயார் செய்யும் பணி தொடங்கியது. விழா நடைபெறும் இடத்தில் பூமி பூஜை நடந்து முடிந்தது. தொடர்ந்து பணிகள் துரிதமாக செய்து முடிக்கப்பட்டன.
நிர்வாகிகள், தொண்டர்கள் அமருவதற்காக மேற்கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டது. வாகனங்கள் நிறுத்த 15 ஏக்கரில் இடம் தயார் செய்யப்பட்டது.
இந்த பணிகளை பொதுச்செயலாளர் என்.ஆனந்த் , பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா, உயர்மட்ட நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.
இந்த கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இருந்து 4,900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்க கியூஆர் குறியீடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே த.வெ.க. நிர்வாகிகள் உற்சாகமாக வர தொடங்கினார்கள். அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று காலை 8.10 மணியளவில் காரில் புறப்பட்டார். 8.55 மணியளவில் அவர் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார்.
பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு காலை 9.40 மணிக்கு திருச்சி சென்றார். பின்னர் திருச்சியில் இருந்து வேனில் தஞ்சை அய்யாசாமிபட்டி பகுதிக்கு புறப்பட்டார்.
அப்போது விஜய்யை பார்ப்பதற்காக சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர் . விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் அவர்கள் உற்சாக கோஷம் எழுப்பினார்கள். தங்களது செல்போன்களில் செல்பி எடுத்தனர்.

மேலும் வழி நெடுகிலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். த.வெ.க.வின் சின்னமான விசில் ஊதி வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் விஜய் விழா நடைபெறும் இடத்தை அடைந்தார். காரில் இருந்து இறங்கிய விஜய்க்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து விஜய் பேசுவதற்காக அங்கு பிரசார பஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
முன்னதாக தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் விஜய் சரவணன் பேசினார். இதனை தொடர்ந்து பிரசார பஸ்சில் ஏறி நின்றபடி விஜய் கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசப்போகிறார். அப்போது அவர் சொல்லப்போகும் குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்ட நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நாளை காலை 9 மணிக்கு தஞ்சாவூருக்கு வருகின்றனர்.
- தடையை மீறி டிரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சகோதரி மகள் திருமணம் நாளை (வியாழக்கிழமை) தஞ்சாவூர் மகாராஜா மகாலில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த திருமணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது.
திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நாளை காலை 9 மணிக்கு தஞ்சாவூருக்கு வருகின்றனர்.
பின்னா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவா் ராமநாதன் ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறாா். பின்னா் காா் மூலம் திருச்சி வழியாக சென்னைக்கு செல்கிறார். இதையொட்டி, காவல் அலுவலா்கள், காவலா்கள் ஏராளமானோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
முதலமைச்சரின் தஞ்சாவூர் வருகையையொட்டி நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. எனவே தடையை மீறி டிரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
- இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று பிற்பகலில் நிகழ உள்ளது.
- தஞ்சை பெரிய கோவிலில் காலை நேர பூஜைகள் முடிந்த பின்னர் காலை 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று பிற்பகலில் நிகழ உள்ளது. இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். சந்திரனின் முழுமையாக சிவப்பு நிறம் மாலை 4.34 மணி முதல் மாலை 5.33 மணி வரை தோன்றும்.
பொதுவாக சூரியகிரகணம், சந்திர கிரகணம் நாட்களில் கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கோவில்களும் காலை நேரத்தில் நடை சாத்தப்பட்டன. தஞ்சை பெரிய கோவிலில் காலை நேர பூஜைகள் முடிந்த பின்னர் காலை 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் கோவிலில் இருந்து வெளியேறினர்.
மாலையில் கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்த பின்பு இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
- பசிப்போர்க்கு உணவு தருவது மிகப்பெரிய புண்ணியம்.
- கோவில்களில் மதியம் அன்னதானம் திட்டத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் பேசியதாவது:-
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வரகுண பாண்டியன் வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீக்கப் பெற்றார். 27 நட்சத்திரங்கள் வழிபட்ட பெருமையுடையதாக இத்தலம் விளங்குகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகம் பாடி உள்ளனர். மனிதப்பிறவி எடுத்துள்ள நாம் இத்தகைய திருமுறை பதிகங்களை தவறாது ஓத வேண்டும். தீயவழியில் செல்பவர்களை நல்வழிப்படுத்துவது திருமுறைகளும், சைவ சித்தாந்தமும் என்பதை உணர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது, பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் கோவில்கள் மற்றும் கோசாலைகளை முறையாக பாதுகாக்கப்படுகிறது. பசிப்போர்க்கு உணவு தருவது மிகப்பெரிய புண்ணியம். கோவில்களில் மதியம் அன்னதானம் திட்டத்தை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து நடத்தி வருவது பாராட்டுக்குரியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் மற்றும் இலவசங்களை வாரி வழங்கி புண்ணியம் செய்துள்ளார். இலவசம் கொடுப்பதும் தர்மம் தான். புண்ணியம் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்று பேசினார்.






