என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜனநாயகன் விவகாரத்தில் ஆதரவு கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்த விஜய்!
- முதல்வர் பூசி மெழுகி, பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.
- என்ன செய்வதென்றே தெரியாத மனநிலையில் இருப்பார்.
த.வெ.க. தலைவர் விஜய் தஞ்சையில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் முதல் முறையாக ஜனநாயகன் விவகாரம் குறித்து பேசினார்.
அப்போது அவர், "ஜனநாயகன் ரிலீஸ் விவகாரத்தில் நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். முக்கியமாக நம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் பூசி மெழுகி, பட்டும் படாமல் குரல் கொடுத்தார்கள். எப்படி இருந்தாலும் குரல் கொடுத்த அவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இப்படி வெளிப்படையாக பேசுதால், சி.எம். சாரின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் தெரியுமா?
ஏற்கனவே கட்சிக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை, தூங்க விட மாட்றாங்க, இந்த விஜயும் வந்து தூங்க விட மாட்டேங்குறான். நம்ம பாட்டுக்கு ஹைவேயில் சைக்கிள்ல சோலோவாக போகலாம்னு நினைச்சோம். இவன் என்னடா என்றால் மக்கள் சக்தியுடன் வந்து கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறான். இவன் மட்டும் கேட்காமல், மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறான். 1000 ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தோம், ரூ. 5000 கொடுத்து ஏமாற்றலாம் என்றால் அதையும் கேள்வி கேட்க வைக்கிறான். விசில் சத்தம் வேறு விண்ணை முட்டுகிறது. கூட்டணி கட்சிகளின் தொல்லையை தாங்க முடியவில்லை. இவனது பிரச்சாரத்தையாவது முடக்கலாம் என்று பார்த்தால், அப்போதும் மக்கள் அவன் பக்கம் தான் நிற்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாத மனநிலையில் இருப்பார்.
சி.எம். சார் நீங்கள் இந்த விஜயை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை, விஜியை உங்களால் முடக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிட்டாங்க சார். குடும்பம், குடும்பமாக பிரச்சாரத்திற்கு இறங்குவார்கள் பாருங்கள். அப்போது உங்களால் மட்டுமில்லை, யாராலும் தடுக்க முடியாது," என்றார்.






