என் மலர்
நீங்கள் தேடியது "Congress"
- காவிரி பிரச்சினையில் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது.
- கச்சத்தீவை பற்றி சீமான் பேசுகிறார். கச்சத்தீவை அவர் மீட்டு வருவதை யார் வேண்டாம் என்றார்கள்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு எவ்வளவு தண்ணீர் தரவேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட்டும், காவிரி ஆணையமும் தெளிவாக கூறியிருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த ராஜ தந்திரத்தோடு செயல்படுகிறார். வாய்ப் பேச்சால் பலன் இல்லை நமக்கு வேண்டியது தண்ணீர் தான் என்ற முறையில் தெளிவான முறையில் ஆட்சி செய்து வருகிறார். ஆனால் பா.ஜ.க. மட்டும் நாடகம் ஆடுகிறது. கர்நாடகாவில் போராட்டத்திற்கு காரணமே பா.ஜ.க.தான். அவர்களின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை.
கச்சத்தீவை பற்றி சீமான் பேசுகிறார். கச்சத்தீவை அவர் மீட்டு வருவதை யார் வேண்டாம் என்றார்கள். இந்திய அரசாங்கம் சட்டப்பிரகாரம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது. இது ஒரு ராஜதந்திர நடவடிக்கை.
உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்த போதும், ராஜீவ் காந்தி தான் யாழ்ப்பாணத்திற்கு இந்திய விமானத்தை எடுத்து சென்று இலங்கை அரசின் அனுமதியின்றி யாழ்ப்பாண தமிழர்களுக்காக உணவு பொட்டலங்களை வழங்கினார். இப்போது அங்குள்ள நிலைமை என்ன? எனவே, காங்கிரசுக்கு எதிராக சீமான் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சீமான் இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசி வருகிறார். மாநிலங்களுக்கு இடையே இன கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அதெல்லாம் நல்ல அரசியல் கிடையாது. இனப்பிரச்சினையை உருவாக்கி கலவரத்திற்கு தூண்டுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
சீமானை எதிர்த்து பேசினால்தான் நான் (கே.எஸ்.அழகிரி) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தொடர முடியும் என்கிறார். தலைவர்கள் ராகுல்காந்திக்கோ, மல்லிகார்ஜுன கார்கேவுக்கோ சீமானை தெரியாது. அவர்கள் சீமானை எதிர்த்து பேசுமாறு கூறவும் இல்லை. சீமானுக்கு காங்கிரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நாங்களும் சீமானை கொள்கை ரீதியாகவும், லட்சிய ரீதியாகவும் எதிர்க்க தயார். எல்லா பிரச்சினைகளையும் அவருடன் விவாதிக்க நாங்கள் தயார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை:
பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ்
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, வக்கீல் பிரிவு இணை செயலாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகி கள் சொக்கலிங்க குமார், ராஜேஷ் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா
நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி, நாகராஜன், மேகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், இளை ஞர் அணி பிரபாகரன், ஜெட் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செய லாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் சுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சரத் ஆனந்த், மாநில மாணவரணி துணை செய லாளர் நட்சத்திர வெற்றி, நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை சத்யா தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையிலும், தமிழ் தேச தன்னுரிமைக் கட்சி சார்பில் நிறுவன தலைவர் வியனரசு தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் சேகர், தொழிற்சங்கம் மகேந்திரன், மாநகர செயலாளர் துரைப் பாண்டியன், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் துவரை மாரியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென் மண்டல தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டார். நிர்வாகிகள் பச்சையப்பன், லட்சுமி, நந்தினி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது.
- தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெல்லியில் 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய தலைமையின் முக்கிய தலைவர்களுடன் அந்த மாநிலங்களில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து தான் விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில் எனது டெல்லி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதாவில் காங்கிரஸ் இருந்த மனநிலையிலேயே இருக்கிறார். தற்போது நடப்பது பா.ஜ.க ஆட்சி. மகளிர் சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பவர் பிரதமர் மோடி.
பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் எதை சொல்கிறார்களோ அதை செய்து காட்டக்கூடியவர்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா உரிமை கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை விற்பவர்கள் மீதும் எந்தவித தயவு தாட்சணையும் பார்க்காமல் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் மக்கள், நம் நாட்டில் மற்றும் உள்ளூர் பகுதிகளில் தயாராகும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அண்மையில் டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நம் நாட்டில் தயாரான பாரம்பரிய பொருட்களை பரிசளித்தார். அதேபோன்று நாம் நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஓ.பி.எஸ்.சை, பா.ஜனதாவில் இணைப்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தனக்கு தெரியாது என்று கூறினார்.
- அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக அஜய் மாக்கனை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா்.
- பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, பன்சால் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டாா்.
புதுடெல்லி:
காங்கிரசின் புதிய பொருளாளராக கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கன் நியமனம் செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், 'அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக அஜய் மாக்கனை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா். முன்பு இப்பதவி வகித்த பவன் குமாா் பன்சால் ஆற்றிய பங்களிப்புக்காக, கட்சி அவரைப் பாராட்டுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி பொருளாளா் பவன் குமாா் பன்சாலுக்கு மாற்றாக, அஜய் மாக்கன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, பன்சால் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டாா்.
- காங்கிரஸ் அணி மாறும் என்று தகவல் பரவுவது அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் திட்டமிட்டு பரப்பும் வதந்தி.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டோம்.
சென்னை:
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிந்த நிலையில் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழலாம். கூடுதல் இடங்கள் கொடுத்தால் காங்கிரசும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்ற பேச்சு அடிபடுகிறது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சந்தர்ப்பவாதம், சபலங்களுக்கு காங்கிரசில் இடமில்லை. காங்கிரஸ் அணி மாறும் என்று தகவல் பரவுவது அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் திட்டமிட்டு பரப்பும் வதந்தி. இந்தியா கூட்டணி உடைய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசையாக இருக்கலாம்.
ஆனால் எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி. மதசார்பற்ற அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் ராகுல் தலைமையிலான காங்கிரசுக்குத்தான் உண்டு என்பதை மக்கள் அறிவார்கள். இதற்கு உற்ற துணையாக இருப்பது தி.மு.க..
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மக்கள் விரோத மோடி அரசை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள அத்தனை கட்சிகளுக்கும் இருக்கிறது.
கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது உரிய நேரத்தில் தலைவர்களால் முடிவு செய்யப்படும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டோம்.
இந்த முறை அதைவிட குறையும் என்று யார் சொன்னது? கூடுதலான சீட் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டேனிஷ் அலியை மத ரீதியாக ரமேஷ் பிதுரி தாக்கி பேசினார்
- டோங்க் மாவட்டத்தில் 30 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்
இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 தொடங்கி 21 வரை நடைபெற்றது.
இத்தொடரில் 21 அன்று, பா.ஜ.க.வை சேர்ந்த தெற்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி (62) அவையில் நடந்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அம்ரோகா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான கன்வர் டேனிஷ் அலி (48) என்பவரை மத ரீதியாக தாக்கி பேசினார். அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ரமேஷ் பிதுரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆளும் பா.ஜ.க., ரமேஷிடம் இந்த நிகழ்ச்சி குறித்து விளக்கம் கோரும் கடிதம் அனுப்பியிருந்தது; ஆனால், கட்சியை விட்டு நீக்கவில்லை.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்குள்ள டோங்க் மாவட்டத்திற்கு பா.ஜ.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரான மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான கபில் சிபல், தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்திருப்பதாவது:
பா.ஜ.க. வெறுப்பு பேச்சிற்கு வெகுமானம் அளிக்கிறது. ரமேஷ், வெளியில் கூற முடியாத வார்த்தைகளால், டேனிஷ் அலியை மத ரீதியாக மக்களவையிலேயே தாக்கி பேசினார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளார்கள். டோங்க் பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதமாகும். இது அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்ச்சியை தூண்டும் செயலைத்தான் குறிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொயித்ரா, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் ரமேஷின் நியமனத்தை விமர்சித்துள்ளனர்.
- எம்.எல்.ஏ. வீட்டில் ஜலாலாபாத் போலீசார் சோதனை நடத்தினர்.
- சுக்பால்சிங் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இவ்வழக்கு தொடர்பாக ஒரு சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை சுக்பால்சிங் எம்.எல்.ஏ. வீட்டில் ஜலாலாபாத் போலீசார் சோதனை நடத்தினர்.
பின்னர் சுக்பால் சிங் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுக்பால்சிங், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் சோதனை செய்தபோது, அதை பேஸ்-புக் பக்கத்தில் சுக்பால்சிங் குடும்ப உறுப்பினர் ஒருவர் நேரடியாக ஒளிபரப்பினார். சுக்பால்சிங் எம்.எல்.ஏ. கைதுக்கு காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- நியாயத்தை உணர்ந்து முதல் முதலில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தவர் நேரு.
- இப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கருத்தரங்குக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் டி.ஏ. நவீன் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
நாடு சுதந்திரம் கிடைத்த பிறகு கல்வி, வேலைவாய்ப்பில் எல்லா சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியாரும், காமராஜரும் வலியுறுத்தினார்கள். அதன் நியாயத்தை உணர்ந்து முதல் முதலில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வந்தவர் நேரு.
இப்போதும் சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைத்து சமூகங்களும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பிற்பட்டோர் பிரிவு மாநில துணை தலைவர்கள் துறைமுகம் ரவிராஜ், தீபன்பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் டி.கே.கண்ணன், செயலாளர் அருள்பிரசாத், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
- தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை.
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறேன். அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருது நகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது. காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
- கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, மகேந்திரன் செய்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நவீன் முன்னிலையில் நாளை (25-ந்தேதி) மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அகில இந்திய காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, மகேந்திரன் செய்து வருகிறார்கள்.