என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » puducherry congress
நீங்கள் தேடியது "Puducherry congress"
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்து ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். #Congress #Narayanasamy #ParliamentElection
புதுச்சேரி:
புதுவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
ரபேல் விமானங்களை மாநில மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இளம் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டார். அதனை ஏற்று பிரமாண்டமான ஊர்வலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி காட்டி உள்ளீர்கள்.
இதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்த ராகுல் அழைப்பு விடுத்தார். அதனையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிளீர்கள். அதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரபேல் விமான ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்
ரபேல் விமானத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டுள்ளது. போர்பர்சில் ரூ. 68 கோடி ஊழல் என குற்றம் சாட்டி மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் இன்று ரபேல் விமான வாங்கியதில் ரூ. 41 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.
பெட்ரோல்- டீசல் விலை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டுக்குள் இருந்தது. தற்போது 80 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. டாலர் விலை ரூ. 72 ஆக சரிந்துள்ளது.
பண மதிப்பிழப்பு திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதால் தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
பாராளுமன்றம் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்து ராகுலை பிரதமராக்க வேண்டும். புதுவை வேட்பாளரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Congress #Narayanasamy #ParliamentElection
புதுவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
ரபேல் விமானங்களை மாநில மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இளம் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டார். அதனை ஏற்று பிரமாண்டமான ஊர்வலத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி காட்டி உள்ளீர்கள்.
இதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்த ராகுல் அழைப்பு விடுத்தார். அதனையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிளீர்கள். அதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரபேல் விமான ஊழலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்
ரபேல் விமானத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டுள்ளது. போர்பர்சில் ரூ. 68 கோடி ஊழல் என குற்றம் சாட்டி மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் இன்று ரபேல் விமான வாங்கியதில் ரூ. 41 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.
பெட்ரோல்- டீசல் விலை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டுக்குள் இருந்தது. தற்போது 80 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. டாலர் விலை ரூ. 72 ஆக சரிந்துள்ளது.
பண மதிப்பிழப்பு திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதால் தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
பாராளுமன்றம் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்து ராகுலை பிரதமராக்க வேண்டும். புதுவை வேட்பாளரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Congress #Narayanasamy #ParliamentElection
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X